Kuzhandhaigalin Gnayabaga Sakthi Kuraivatharku Karanam Enna Article By Sudha குழந்தைகளின் ஞாபக சக்தி குறைவதற்கு காரணம் என்ன? - சுதா

குழந்தைகளின் ஞாபக சக்தி குறைவதற்கு காரணம் என்ன? – சுதா

குழந்தைகளிடம் ஞாபக மறதியும் எதையும் நேர்த்தியாக கையாளும் திறனும் இக்காலகட்டங்களில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றுவதற்குள் அந்த இடம் முழுவதும் தண்ணீரால் நிரம்ப வைத்து விடுகின்றனர் ஏன் இப்படி? அவர்களின் கவனம் பாட்டிலுக்குள் தண்ணீருக்கும் இடையே சிதறி விடுகிறது.

திறன் குவிப்பு அல்லது ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி? குழந்தைகளின் கவனம் எப்போது ஒருநிலைப்படும்?

ஒரு குழந்தை விளையாடும் போது தனக்குப் பிடித்தமான வேலையைச் செய்யும் போதும் கவனச்சிதறல் இல்லாமல் இருக்கிறது என்று பெற்றோர்கள் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளில் ஒன்று. தன் குழந்தைகள் சிரிப்போடும் பொருட்களை பெற்றோர்கள் எடுத்து அடுக்கி வைக்கிறார்கள் யூனிபார்ம் குப்பையில் போடுவதில் இருந்து லஞ்ச் பேக்கை சுத்தம் செய்து பாத்திரம் கழுவும் தொட்டியில் போடும்வரை பெரியவர்களை செய்துவிடுகின்றனர்.

இதற்கு பெரியவர்கள் சொல்லும் காரணம் நான் சிறு வயதில் சமைச்சு வச்சிட்டு தான் ஸ்கூலுக்குப் போவேன் அவ்வளவு கஷ்டம் என் குழந்தையாவது கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று. சரி இதற்கும் ஞாபக சக்திக்கும் என்னதான் தொடர்பு? இருக்கு.

ஒரு குழந்தையின் மூளையில் தன் வேலையைதானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரை வீட்டை சரிசெய்வது, தன் துணிமணிகளை ஒதுக்கி வைப்பது, தன் புத்தகப்பையை சுத்தப்படுத்துவது, தன் விரல் நகங்களை யாரும் சொல்லாமல் தானே சரி செய்வது இவையெல்லாம் தனக்கான கடன் என உணராத வரை ஞாபக சக்தியை அதிகப்படுத்த முடியாது.

வீட்டை சுத்தம் செய்யும் போது தன் துணிமணிகளை ஒழுங்குபடுத்தும் போதும் உண்டாகும் ஒரு அழகியல் நேர்த்தி குழந்தையின் கையெழுத்திடும் வெளிப்படும் தனங்களை தான் கவனத்துடன் சுத்தம் செய்யும்போது தான் சுத்தமாக இருக்கிறோம் என்ற எண்ணமே தன்னம்பிக்கையை அடையச் செய்யும்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சின்ன சின்ன பயிற்சிகள் அல்லது வேலைகள் கொடுக்க வேண்டும் தொலைக்காட்சி முன் வைத்தால் குழந்தை தொல்லை செய்யாமல் இருக்கும் என்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டி முன்பு உட்கார வைத்துவிட்டு குழந்தைக்கு எந்த இயல்பான அறிவையும் கொடுக்காமல் நன்றாக படிக்க வேண்டும் என்பதை மட்டுமே எதிர்பார்க்கும் கூட்டமாக மாறிப் போனோம் என்பதுதான் வருத்தத்திற்குரியது.

சின்ன சின்ன விளையாட்டுகள் குழந்தையை உயிர்ப்போடு வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை குறைக்க உதவும்.

உதாரணமாக ஒரு கப்பில் அரிசியை வைத்து ஒரு கப்பில் ஸ்பூனால் எடுத்துப் போடச் சொல்லுங்கள் கீழே சிந்தக் கூடாது என்பது முக்கியம் இது உணவை சிந்தாமல் சாப்பிட உதவும். அதோடு கவனச்சிதறலைத் தவிர்க்கும்.

ஒரு ஒரு கோப்பையாக தண்ணீரை செடிக்கு ஊற்ற சொல்லிக்கொடுங்கள் செடிகளை விடும் போது குழந்தையின் எண்ணங்களும் கேள்விகளும் விரிவடையும் தேடல்களை உருவாகும்.

ஒரு குடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தண்ணீரை மாற்றச் சொல்லுங்கள் கவனச்சிதறல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

படிப்பில் கவனம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குழந்தையின் மனநிலையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொஞ்ச நேரமேனும் இயந்திர இயந்திரங்களோடு பயணிப்பதைத் தவிர்த்து இயற்கையோடு பயணிப்பதை கற்றுக் கொடுப்போம். நாமும் கற்றுக்கொள்வோம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *