அரவிந்த் வாரியார்
(தமிழில்: அ.பாக்கியம்)

கேள்வி: தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா இருப்பது ஏன்?

பதில்: பின்வரும் காரணங்களால் தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.

1) மலையாளிகள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என மனுக்கள் தொடர்ந்து கொடுப்பதும் போராட்டங்களும் நடத்துகிறார்கள்.

2) எந்த அரசியல்வாதியையும் வணங்கும் பழக்கம் கேரளாவில் இல்லை. அரசியல்வாதிகள் எந்த தவறான செயல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

3) கேரளாவில் உள்ள மலையாள செய்தி சேனல்கள் அரசாங்கத்திற்கு இணங்கி போவது இல்லை. மேலும் அவை பிரைம் டைம் விவாதங்களில் அரசாங்கத்தின் குறைபாடுகளையும், கமிஷன் பற்றியும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்கின்றன.

4) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் ஆட்சி அதிகாரம் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது. இது ஊழலின் அளவைக் குறைக்கிறது. ஏனெனில் பஞ்சாயத்துகள் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.

5) கேரளாவில் டிஜிட்டல் கல்வியறிவு மிக அதிகமாக உள்ளது. இது அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான மனித தொடர்புகளைக் குறைக்கிறது. இது ஊழலைக் குறைக்கிறது.

நன்றி:
அரவிந்த் வாரியார் (Arvind variar.
Quora தளத்தில் எழுதியது.)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *