அண்டை வீட்டுச்
சேவலையும்
அசந்து படுத்திருக்கும்
மனைவியையும்
எழுப்பிவிட்டு.
அவசர கதியில்
தொலைதூர
அலுவலகப்பணிக்காக
பயணம் தொடர்கிறது
ஒவ்வொருநாளும்..
எங்க ஊருக்கு வரும்
முதல் பேருந்தை பிடித்தால்தான்
அலுவலகத்திற்குப்
பத்து மணிக்குப்
போகமுடியும்..
அதையும் விட்டுவிட்டு
மூன்று நாள் அனுமதி போட்டு
அரைநாள் விடுப்பையும்
இழந்தது உண்டு..
பிள்ளைகள்
தூங்கும் போது
கிளம்பி வருவதும்..
இரவில் அவர்கள்
தூங்கும் போது
நான் செல்வதுமான
வாழ்க்கை தொடர்கிறது..
நிறுத்தம் வந்ததும்
பேருந்தை விட்டு இறங்கி
ஐந்தாவது தளத்திற்கு
இருக்கைக்கு வந்தால்
அதற்குள்
நிரம்பி வழியும்
அலுவலக மின்னஞ்சல்
அறிக்கை கேட்டு
அனைவருக்கும் வணக்கம்
சொல்லி..கேட்ட அறிக்கைக்கு
பதில் கொடுத்துக்கொண்டே
இருந்தால்..
திறமைக்கு
சவால் விடுவதாய்
அடுத்தடுத்து
தலைமை இடத்திலிருந்து
வந்து கொண்டே
இருக்கும்..
நம்மை
பரபரப்பிலேயே!
வைத்துக்கொள்வதில்
அவர்களுக்கு
அவ்வளவு
ப்பிரியம்..
மதிய உணவும்
எனக்கு
இன்னொரு
அறிக்கையாகவே!
தெரியும்..
பகல்நேரங்களை
முழுவதுமாக திண்றுவிடும்
முழுநேர அறிக்கைகள்
அலுவலகம் முடிந்தால்
அர்ஜுனனுக்கு தெரியும்
பறவையைப்போல
வீடு தெரியும்..
இடைநில்லாப் பேருந்தாய்
வீடு சென்றால்..
அண்டை வீட்டு
சேவலும் மீண்டும்
தூங்கிடும் …
என்
மனைவி
பிள்ளைகள்
மட்டும்
விதிவிலக்கா???….
மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை..எதார்த்தமான கவிதை ..தொடருங்கள்
இதுவும் கடந்து போகும்……
👌👌👌
…✨இது போன்ற படைப்புகள் தொடர வாழ்த்துகள் என் தந்தையே… 👍✨…