அ.சீனிவாசனின் கவிதைகள் | Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - சர்வதேச கழுதைகள் தினம் - https://bookday.in/

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

கவிதையை மென்ற கழுதை

1

வெளுப்பவனுக்காக
கழுதை,
ஊராரின் அழுக்கு உடைமூட்டை சுமக்கிறது —
அவ்வாறே,
கவிஞனுக்காக
கவிதை,
ஊராரின் அழுக்கு உள்ளமூட்டை சுமக்கிறது!

2

அரிதாக ஒருநாள்,
வெளுப்பவனின்
அழுக்கு உடையை கழுதை சுமப்பது போல,
கவிஞனின்
அழுக்கு உள்ளத்தை
ஒளியால் தொட்டுப் பார்க்கிறது கவிதை!

3

கழுதை உடைகளை வெளுக்க உதவுகிறது;
கவிதை உள்ளங்களை வெளுக்க
எழுதுபவனுக்கு ஒளியாகிறது!

4

கழுதையும் கவிதையும்
பழைய காலத்தில்
அழுக்கைச் சுமந்தன —
இப்போது,
நவீன இயந்திரங்கள் வெளுக்கின்றன!
கழுதைகள் குறைந்தன,
வெளுப்பவர்களும் அருகினர்.

5

இயந்திரங்களில் எழுதப்படுகிறது கவிதைகள் —
அவை பெருகிவிட்டன!
கவிஞர்களும் நிரம்பிவிட்டனர்!
ஆனால்,
உடுப்பவர்களிருந்தாலும்
உள்ளங்களைத் தொடும் கவிதைகள்
குறைந்துவிட்டன!

6

அழுக்கு உடைகளை
அவரவர் தான் வெளுக்கின்றனர்;
ஆனால்,
அழுக்கு உள்ளங்களை
யார் வெளுப்பார்?

7

கவிதைதான் மட்டும்
கழுதையின் பொறுமையுடன்
இருளைத் தொட முயல்கிறது!

8

அழுக்ககன்றாலுமே சரி
கவிதையாவது…
கழுதையாவது!

எழுதியவர் : 

அ.சீனிவாசன்

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *