யாருமற்ற சிலுவையில்
அறையப்பட்டிருக்கின்றன
சில நேசத்தின் ஏமாற்றங்கள்
யாருமற்ற சிலுவையில்
மெதுவாகத் தூங்குகிறது
உயித்தெழ முடியாத ஆசைகள்
யாருமற்ற சிலுவை
அடியிலே தீர்வின்றி
மீளாத்துயர்கள்
யாருமற்ற சிலுவையில்
இரும்பாணிகள் கொண்டு
இறுக்கப்பட்டு
இல்லாமல் போன பிரியங்கள்
ஆரவாரம் துறந்து
ஆளரவமற்ற
சிலுவைச் சாளரத்தின்
வழியே விடை கொடுத்து
வழியனுப்புகிறது
வாழ்வின் நிசப்தம்.
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்-இலங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

