உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சம் கட்டுரை – அ.பாக்கியம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் வருகிற 16-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்கான பிரதிநிதிகளை இறுதிப்படுத்தி விட்டார்கள்.
2296 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பிரதிநிதிகளில் நேரடி களத்திலும் உற்பத்தி துறையிலும் பணியாற்றக் கூடியவர்கள் 771 பேர். அதாவது 33. 6 சதவீதம் பங்கு பெறுகிறார்கள்.
192 பிரதிநிதிகள் 8.4 சதவீதம் தொழிலாளர்கள்.
85 பேர்கள் 3.7 விவசாயிகள்.
266 பேர் தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள்.
இவர்கள் 11.6%.
பெண் பிரதிநிதிகள் 619 பேர்.
இது கடந்த 19வது கட்சி காங்கிரசை விட 68 பேர் அதிகம்.
சீனாவில் உள்ள 40 சிறுபான்மை குழுக்களில் இருந்து 264 பிரதிநிதிகள் அதாவது 11.5 சதவீதம் பங்கேற்கிறார்கள்.
2296 பிரதிநிதிகளில் சராசரி வயது 52.2 ஆகும்.
இவர்களில் 59.7% பிரதிநிதிகள் 55 வயதுக்கு குறைவானவர்கள்.
18.9% பிரதிநிதிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மொத்த பிரதிநிதிகளில் 52.7 சதவீதம் முதுகலை பட்டப்படிப்புகளையும் 36 சதவீதம் இளங்கலை பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
மொத்தம் உள்ள 9கோடியே 60 லட்சம் கட்சி உறுப்பினர்களில் இருந்து இந்த பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எதுமேதிகளில் 2 224 பேர் சீர்திருத்தத்திற்கு பிறகு கட்சியில் இணைந்தவர்கள்.
பிரதிநிதிகள் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். பல்வேறு வழிகளில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களைப் பற்றி மக்களிடம் கருத்து கேட்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் கருத்தும் அறியப்பட்டது.
உட்கட்சி ஜனநாயகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் உட்பட தங்கள் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சீனாவில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் பல்வேறு தொழில்களில் பரந்துபட்ட பகுதிகளை பிரதிபலிக்கின்றனர்.
இது மேற்கத்திய ஜனநாயகத்திலி ருந்து வேறுபட்டது.
சீனாவின் உட்கட்சி ஜனநாயகம் கவனமாக ஆலோசனை செய்து பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதாகும். மேற்கத்திய ஜனநாயம் பெரும்பாலும் எளிய வாக்குகளை உள்ளடக்கியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் நிலைபாடு, திறன், செயல்திறன் வறுமை நிவாரணத்தில் பங்கேற்பது, கோவில் 19 எதிர்த்து போராடுவது பேரிடர் நிவாரண பணிகளில் ஈடுபடுவது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பது, ஆகியவற்றில் பங்காற்றியவர்களை பரிசோதித்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
புள்ளி விவர கணக்கின்படி 710 பிரதிநிதிகள் மாகாண அளவிலான கார்பஸ் மற்றும் கௌரவ பட்டங்களை பெற்றவர்கள்.
92.1 பரிதிநிதிகள் முன்னணியில் பணியாற்றுகின்றனர்.
இருபதாவது கட்சி காங்கிரஸ் மிகவும் இன்றியமையாதது. சீனாவை அனைத்து வகையிலும் நவீன சோசலிச நாடாக உருவாக்கி இரண்டாம் நூற்றாண்டு இலக்கை அடையும் பயணத்தில் உள்ளது. எனவே தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது..
– அ.பாக்கியம்
நன்றி: GLOBAL TIMES
https://www.globaltimes.cn/page/202209/1276173.shtml?utm_source=pocket_mylist
