Posted inPoetry
யாழ் ராகவனின் கவிதை
ஏழு அடுக்கு பாதுகாப்பு வளையத்தை தாண்டி
எட்டிப்பார்த்தது ஒரு சிட்டுக்குருவி
அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என
எழுதப்பட்ட பலகை மேல் அமர்ந்த காகம் எச்சம் இட்டது
சாக்கடையில் மிதக்கும் முருங்கக்காய் சக்கையிலும்
மீன் துண்டுகளிலும்
நேற்றைய மிடுக்கு கொஞ்சமும் தெரியப்போவதில்லை
வழிகாட்டி விளக்குகளில் சிவப்பு விளக்கு மட்டும் அணையாமல்
திக்கித்திக்கி தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது
எத்தனை முறைதான் முப்பால் காரனை
மூர்க்கத்தனமாகக் கொல்வார்கள்.
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
வாயில் கரையாத கமர்கட்டு மிட்டாய்
பிரியங்களின் அத்தனை வேர்களையும் பிடுங்கி எறிந்த படி..
– யாழ் எஸ் ராகவன்

