சிறுகதையின் பெயர்: நந்தவனத்தில் ஓர் ஆண்டி
புத்தகம் : ஜெயகாந்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : ஜெயகாந்தன்
வாசித்தவர்: ஜி. ரவி (Ss 169)
[poll id=”99″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
வாசிப்பு அருமை! காட்சிகளாய்க் கண்முன்! நன்றி!
ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்களைப் பற்றி நான் எதுவும் புதிதாகச் சொல்லவே வேண்டாம். அவர் எழுத்துக்கள் பற்றி ஊரே உலகமே அறியும். அதுபோல கதையை வாசித்து, நந்தவனத்தில் ஓர் ஆண்டியாகவும், அவன் மனைவியாகவும் குரல் கொடுத்து விளக்கியுள்ள உம் தனித் திறமைகள் பற்றி அனைத்தும் நான் அறிவேன். 2004-ம் ஆண்டு நான் எனது வலைத்தளத்தில் மிகப் புதுமையாகவும், நேர்மையாகவும், தொடர்ந்து 40 வாரங்களுக்குத் தொய்வேதும் இல்லாமல் நடத்திய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களில் ஏராளமான பரிசுகளை வாங்கிக்குவித்து சிறப்பிடங்கள் பெற்றிருந்தீர். Sample Ref:- http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html
சாஹித்ய அகாடெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் ஓர் சிறுகதையை, மிகச்சிறப்பாக அலசி ஆராய்ந்து குரல் கொடுத்துள்ளது மிகச் சிறப்பாகவும் அதே நேரம் உணர்வு பூர்வமாகவும் உள்ளது.
MGR இன் தீவிர ரஸிகனான தங்களுக்குத் திருப்பியளிக்கும் படிச் சொல்ல வேண்டுமென்றால் ‘சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல’ அருமையாகச் செய்துள்ளீர்கள். பரிசுபெற அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், வாத்யாரே!
Excellent Clarity in speech and way of delivery exceeds expectations
மிக அருமையான கதை. ஜெயகாந்தன் அவர்களின் எண்ணங்கள் எழுச்சி மிக்கவை. நன்றிகள்.
அருமையான வாசிப்பு. எளிய தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதையை எளிமையான முறையில் நல்ல தேர்ச்சி பெற்ற கதை சொல்லியாகவாசிப்பு இருந்தது. வாசித்தவரின் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளை நிகழ்த்துபவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயகாந்தனின் ஆண்டிக் கதையை ரவி அவர்கள் வாசித்த விதம் அருமை. தேவையான இடங்களில் ஏற்ற இறக்கம், ஆண்டியின் குரலில் நையாண்டி என்று பாத்திரங்களுக்கு ஏற்றவாறு வாசித்துள்ளார். பாராட்டுகள்.
– நீலவண்ணன், புதுச்சேரி.
தங்களுடைய வாசிப்பு அந்த காட்சியை கண் முன் நிறுத்துகிறது. குரலில் பல்வேறு ஏற்ற இறக்கங்கலுடன் அருமை . மறக்கமுடியாத கதை தங்களுடைய வாசிப்பு மூலம் உயிர் பெறுகிறது
Excellent and very nice…