ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

      எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல் இந்து தமிழ் திசை நாளிதழில் உயிர்ச் மூச்சு பகுதியில் ஓராண்டுக் காலம் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது. இது தற்போது மேலும் செம்மைப்படுத்தப்பட்டுச் சென்ற மாதம் நூல்…
காடு கவிதை – கலா புவன்

காடு கவிதை – கலா புவன்




பகலின் இருட்டு
மரங்களின் அடர்த்தி
அருவிகள் தொடங்குமிடம்
நகரங்களின் முன் ஜென்மம்
காடு

மனிதன் காட்டிற்கு அன்னியமானவன்
மரங்களை அழித்து ஊர்களை உருவாக்கினான்

மனிதனின் ஆசைகளுக்கு அளவேயில்லை
காடு என்ன பாவம் செய்தது ?

காடுகள் அழிக்கப்பட்டன
நிலங்களை கூறுபோட்டு விற்றனர்

காடு குறையக் குறைய மழை நின்றுபோனது

நாடுகளின் வயல்கள் வறண்டு போயின
காட்டு மரங்களை அழித்து காகிதம் செய்தான்

படித்த புலவர்கள் காடுகளை காப்போம்
என்று புத்தகங்கள் எழுதி வெளியிட்டனர்
இதுவே
ஒரு பெரிய முரண்பாடு

நெகிழி நாற்காலிகளை விட மர நாற்காலிகள் சிறந்தவை
மரக்கட்டில் பாட்டிக்கும்
மரபொம்மைகள் குழந்தைகளுக்கும்
மரமேசைகள் குடும்பத்திற்கும்
உகந்தவை

முன்னாளில் அடுப்பெரிக்க
மரங்கள் பயன்பட்டன

மரங்கள் எரிப்பில்
வியாதியற்ற சாப்பாடு வீட்டிற்கு உதவியது

காடுகளை அழித்து ,எரித்து நிலக்கரி தயாரிக்கின்றனர்
நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர்

எப்படியோ புலிகளைப் போலவே
காடுகளும் உலகில் குறைந்து விட்டன

காடு வளர்ப்போம்
காட்டைக் காப்போம் என்ற
வெற்றுக்கோஷம் மட்டும்
விண்ணளவு முழங்கப்படுகிறது

அய்யகோ இதென்ன பெரும் கொடுமை ?

இனியாவது விழித்துக் கொள்வோம்
இருக்கும் காடுகளை பாதுகாப்போம்

ஆமென்

கலா புவன் -லண்டன்