நினைவுகள்
***************
முற்றத்திலே
நீ பழகிய நடைவண்டி
அழுது அசந்து
நீ தூங்கிய தூளி!
சமைத்து கலைத்து
நீ விளையாடிய செப்புச் சாமான்
புது உடை அணிந்து
நீ ரசித்த நிலை கண்ணாடி
கற்பனை தாங்கி
நீ வரைந்த ஓவியத்தாள்
இவை யாவும்
என் தனிமையில்
உன் நினைவுகளாய்!
*************************
ஏதோ ஒரு உந்துதலில்
கவிதை எழுத எத்தனித்த பொழுது
நான் கற்றுக் கொண்ட
வார்த்தைகள் அனைத்தும்
சுழியமாய் சூன்யமாய் ஆயின!
ஆனால்,
இதில் ஏதோ
கள்ளத் தனம் உள்ளதோ ?
இது எப்படி….
உன்னை நினைத்து
மை தொடுக்கும் போதே
முகில் தோன்றி
வார்த்தைத் தூறலாய்
தூறிக் கொண்டிருந்த
என் எழுத்துகள் அனைத்தும்
நடையெடுத்து
அணிவகுத்து
இலக்கணம் தொட்டு
கவிதையானதே !!!
செ. ஜீவலதா
இராஜபாளையம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.