ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்




தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது –
வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள்
எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில்

நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள்
விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும் பறிகொடுத்து
படர்ந்து நிழல்தரும்
கிளைகளில் வசித்த
பறவைகள் அத்தனையும் வேறுகிளைகளைத்தேடி
அகதிகளாய்ப் பறந்துபோன பறவைகளின் வசிப்பிடங்களையும் தேடுகிறேன்

பறவைகளின் இடமாற்றத்தால் தடுமாற்றமானது
ஆறறிவுகள் அறியாமல்
செய்த வினைகளும்

கோடாரிகளை தூக்க கட்டுப்பாடுகள் இருந்திருந்தால்
காலியான ஆக்சிஜன் உருளைகள் தட்டுப்பாடோடு உருண்டிருக்கா.

வழியெங்கும் காற்றினை சுத்திகரிக்கும்
மரங்களின் ஆலைகளை அழித்தபின்
மனிதஇனத்தின் உயிர்காக்கும்
ஒட்டுமொத்த சுவாசக்காற்றையும் சுமந்து
அதே வழித்தடத்தில் பயணிக்கிறது சுவாச சுமையுந்துகள்

சுவாசங்களைப் புதுப்பிக்கும் விருட்சங்களின் விசேசங்களை அறிந்திருந்தால்
அவசியமிருந்திருக்காது மருத்துவ படுக்கைகளும்

ஏதோ ஒருகிளையின் பழத்தினை தின்றுதிரியும் பறவையின்
எச்சிலில் முளைக்கும் மரங்கள் தீங்கு செய்தோருக்கும் நிழல்தந்து
கார்பன் துகள்களை
உள்வாங்கி சுவாசிக்கும் உயிர்களுக்கு பிராண வாயுவினைத்தரும்
அதிசயமரத்தை விதைத்த ஆக்சிஜன் பறவையின்முன்
வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்பதையறியாமல்
பறந்துசெல்கின்றன அப்பறவைகள்….

கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்




நதியும் நாகரீகமும் மரணிக்கும் நேரம்
பிராணவாயு வற்றிய
நதிகள் இறந்து போயின.
ஆயினும்
உயிரற்ற நீரில் மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் சடலங்கள் குறித்து
எவரும் கவலைப்படவில்லை.
ஜீவனற்ற நதி மேல்
மனித உடல்களை வீசியெறிவது
யாருடைய குற்றங்களையும்
அந்த நீரோடு அடித்து செல்லாது.
நதியோடு மிதந்து கொண்டிருக்கும்
சடலங்கள் போல்
அவையும் செத்துப் போன நீரில்
மிதந்து கொண்டுதானிருக்கும்.
ஒரு நாள்
ஆக்சிஜன் இல்லாமையால்
அனைத்து நதிகளும் இறக்கும்போது
நாகரீகத்தின் எலும்புக் கூடுகள்
அவற்றில் மிதக்குமோ?
தம் மரணத்தை
நதிகள் அறியும்.
நாகரீகமும் அவற்றின் பின்னே.

தமிழில்: ரமணன்

************

ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்.இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர்.’anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன. இந்தக் கவிதை ‘beacon’ என்கிற இதழிலிருந்து எடுக்கப்பட்டது

Time for Civilizations to Die
Many rivers died
due to lack of oxygen
but nobody paid heed
to their corpses
still floating
in the dead water
dumping human corpses
on top of lifeless rivers
does not make anyone’s crimes wash away in the water
they all keep floating
like with the rivers
human bodies are still floating
in the dead waters.
one day when all rivers die
due to the lack of oxygen
then in the dead rivers
will there be skeletons of civilizations afloat.
rivers know
when they die
civilizations are not far behind.

© Jecinta Kerketta

இந்தியாவில் ஆக்ஸிஜன் தயாரிப்பது அப்படி என்ன கம்ப சூத்திரமா? – எஸ்.விஜயன்

இந்தியாவில் ஆக்ஸிஜன் தயாரிப்பது அப்படி என்ன கம்ப சூத்திரமா? – எஸ்.விஜயன்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி அழிந்து விடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மட்டுமே இந்தத் தருணத்தில் செத்து மடிந்த மக்கள் எத்தனை பேர்? ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக…
ஸ்டெர்லைட்டில் தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மையா? தவறான உள்னொக்கத்தோடு ஆலையை செயல்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிடுக! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்.!

ஸ்டெர்லைட்டில் தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மையா? தவறான உள்னொக்கத்தோடு ஆலையை செயல்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிடுக! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்.!

கோவிட் 19 பெருந்தொற்று தன் கோரத்தாண்டவத்தை தொடங்கி 1 ஆண்டு 4 மாதங்கள் கடந்து விட்டது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வியத்தகு முன்னேற்றத்தால் ஓராண்டிற்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசிகளைத் தயரிக்கவல்ல பல பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தும்…
சில ஆக்சிஜன் உண்மைகள் – தமிழில் ஆர். விஜயசங்கர்

சில ஆக்சிஜன் உண்மைகள் – தமிழில் ஆர். விஜயசங்கர்

இந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமன் மால் பெங்கானி கூறுவது: ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள் ஈடுபட்டவன், 50 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஈடுபட்டவன் என்கிற முறையிலும் சில…