Posted inPoetry
கவிஞனா நீ ? கவிதை – பாங்கைத் தமிழன்
நிலவே,
சிறிது நாட்கள்
வெளியில் வராதே!
காற்றே
சிறிது காலம்
தென்றலை அனுப்பாதே!
பனியே,
சிறிது காலம்
தண்மையாய் இராதே!
மலர்களே,
சிறிது காலம்
மலர்வதை மறந்து விடுங்கள்!
குளிரோடையே,
சிறிது காலம்
சூடாக ஓடு!
பெண்களே,
சிறிது காலம்
சிரிக்காமல் இருங்கள்!
இப்படியாக
இருப்பீர்களானால்,
அழுகைக் குரலும்
அவல வாழ்வும்
எவர் செவிகளில் விழுமோ
அவரே கவிஞர்.
அவர்தான் கவிஞர்!
– பாங்கைத் தமிழன்