அலையும் நுரையும்
****************************
தன்னிடம் வரும்
எல்லோரையும் தலைக் குப்புற அடித்தாவது குளிக்க
வைத்து விடுகிறது
ஆனால் தான் மட்டும்
எந்நாளும் அரைகுறையாகவே
குளித்துக் கொண்டு இருக்கிறது கரை
எப்போதும்
தலையில் நுரை…
*****************************
கொலை செய்யப்பட்ட
நெற்கதிர்களுக்குத்தான்
எவ்வளவு உயர்ந்த கொள்கை
உடல் உள்ளவர்களின்
உயிர் காக்க
உயிரற்று காக்கிறது… மனிதர்களுக்குத்தான் இல்லை
அதன் மேல் கருணை
வெறும் கழிவாக மிதித்து
மேலே மேலே
ஏறிக்கொண்டு இருக்கிறார்கள் கட்டிடத்தில்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.