ஒரே நாடு
************
பானையில் வைத்த பழைய சோறும்
பச்சை மிளகாயும்
பழைய உணவாகி…

பாணிபூரியில்
எச்சில் ஊறிப்போனது;

ஹிந்தி மொழியில்
எப்போது கலந்தது
குயிலின் குரல்?

குஜராத்தியின்
உடையில் மயங்கி
வேட்டியும் சேலையும்
வெட்கப்பட்டுக் கிடக்கின்றன!

புரியாத வசனங்களுக்குக்
ஒரே நாடுதான்!
யாருக்குச் சந்தேகம்?
ஏன்?

பெரிய நடிகர்கள்
*********************
சிலரிடம்தான்
சென்று சேர்கிறது…
அதிலும்
சிக்கலான
கேள்விக்கணைகள்!
ஊடகத்தில் பதிவிடும்
எழுத்து!

கேள்விகள்
நானும் கேட்கலாம்
பிறரும் கேட்கலாம்
கேட்பவர்
எவராயினும்
ஞானம் முக்கியம்
கேள்வி ஞானம்!

ஞானம் உள்ளவர்போல்தான்
நடித்துக் கொண்டிருக்கிறது
உலகம்!

நம்பித்தான்
ஒருவரையொருவர்
இதுவரை
வந்துவிட்டோம்!

நாமும்
குழந்தையாக
இருந்தபோது
யாரையும்
நம்பாமல்தான்
இருந்திருப்போம்!

பொம்மைகளுடனும்
பறவைகளுடனும்
ஏன்
விலங்குகளுடனும்
பேசவும் பழகவும் விளையாடவும்
குழந்தைப்பருவம்
தவழ்ந்து கொண்டேயிருக்கின்றன….

குழந்தைகளுக்குத்
தெரிகிறது….
பெரியவரெல்லாம்
நடிக்கின்றனரென்று!

பெரியவர்களுக்குத்தான்
குழந்தைகளைப்
புரிந்துகொள்ள முடியாமல்;

பறவைகளையும்
மீன்களையும்
பொம்மைகளையும்
விலங்குகள் பூங்காவினையும்
வாங்கித் தரவும்
அழைத்துச் சென்று
காட்டவும் மறுக்கின்றனர்!

குழந்தைகளைப்
புரிந்து கொள்ளுங்கள்….
அவர்களைவிடப்
பெரியவர்களை
குழந்தைகள் நன்கு
புரிந்து வைத்துள்ளனர்;
பெரிய்ய்ய்ய்யயயய
நடிகர்களென்று!

பாங்கைத் தமிழன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *