nenjappattarayil poet written by jaleela musammil கவிதை: நெஞ்சப் பட்டறையில்... - ஜலீலா முஸம்மில்nenjappattarayil poet written by jaleela musammil கவிதை: நெஞ்சப் பட்டறையில்... - ஜலீலா முஸம்மில்

மிகவும்
பாதுகாப்பாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
நெஞ்சப்பட்டறையில்

சந்தர்ப்பங்கள்
அமையாது போகலாம்
அதைப் பயன்படுத்த

காற்றின் அலைகளில்
மூழ்கிக் கரைந்து போகலாம்

மூச்சுக்காற்றின்
அனலில் மறைந்து போகலாம்

முகவரி தெரியாமல்
அண்டவெளி எங்கும்
அலைந்து திரியலாம்

முட்டி முட்டி
மௌனமாக மேடை தேடி
ஓடிக்கொண்டிருக்கலாம்

கட்டவிழ்த்த சுதந்திரம் கேட்டுக்
கானகங்களில் கண்ணீர்
விட்டு விசும்பலாம்

ஆனால்…
நேசச்சுழலில்
சிக்கிய சில
கவிதைகளில் அது
நிச்சயம்
தஞ்சமடையும்

நேசத்தின் அச்செழுதும்
சில இதழ்களில்
நிச்சயம்
பவ்வியமாக உட்கார்ந்து கொள்ளும்

கஞ்சத்தனங்களில்
கருக்கொள்ளாது
கஞ்சத்தனம் காட்டி

தேவதனங்களை மட்டும்
தேடித்தேடி
எண்ணிக்கையில்லாது
உயிர்த்தெழும்
நேசத்தின்
வார்த்தைகள் அவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *