Posted inPoetry
கலா புவன் கவிதை
ஞாபக யுத்தங்கள்
என் எதிரே
மேசை மேல்
ஒரு கோப்பைத் தேநீர்
ஆவிபறக்க காத்திருக்கிறது
எதோ ஒரு ஞாபகத்தின்
பின் நான்
அதன் வாலைப்பிடித்துக்கு கொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்
காலச்சுவடுகள் என் கண்முன்னே விரிய
துன்பங்களும் துயர்களும்
நட்பும் காதலும்
அன்பும் வெறுப்பும்
தொடர் பரிமாணங்களாய்
விசனங்களை வசனங்களாய்
மாற்றிப் போட்ட
நினைவுப் பாதையில்
நடக்க நடக்க
ஒளிமயமாய் கண்ணுக்கு முன்
பிரகாசக் கதிரவனாய்
தென்படத் தொடங்கிற்று ….
நினைவுக் குளியலில்
குளித்து முடித்து
தலை துவட்டிக் கொண்டு
நான் மீள வரும் போது
கோப்பைத் தேநீரில்
ஆடை கட்டியிருந்தது
எடுத்துப் போட்டு விட்டு குடித்தேன்
நினைவுச் சாலையோர
செடிகளின் பூக்கள்
மோகன வாசகங்களை
நுகர வைக்கின்றன
நுகர்ந்து கொண்டே நான்
பயணிக்கிறேன்
சமரசமே சமரின் விடியல்
————கலா புவன் ——–