கலா புவன் கவிதை

கலா புவன் கவிதை




ஞாபக  யுத்தங்கள்
என் எதிரே
மேசை மேல்
ஒரு கோப்பைத் தேநீர்
ஆவிபறக்க காத்திருக்கிறது

எதோ ஒரு ஞாபகத்தின்
பின் நான்
அதன் வாலைப்பிடித்துக்கு கொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்

காலச்சுவடுகள்  என் கண்முன்னே விரிய
துன்பங்களும் துயர்களும்
நட்பும் காதலும்
அன்பும் வெறுப்பும்
தொடர் பரிமாணங்களாய்
விசனங்களை வசனங்களாய்
மாற்றிப் போட்ட
நினைவுப் பாதையில்
நடக்க  நடக்க
ஒளிமயமாய் கண்ணுக்கு முன்
பிரகாசக் கதிரவனாய்
தென்படத் தொடங்கிற்று ….

நினைவுக் குளியலில்
குளித்து முடித்து
தலை துவட்டிக் கொண்டு
நான் மீள  வரும் போது
கோப்பைத் தேநீரில்
ஆடை கட்டியிருந்தது
எடுத்துப் போட்டு விட்டு குடித்தேன்

நினைவுச் சாலையோர
செடிகளின் பூக்கள்
மோகன  வாசகங்களை
நுகர வைக்கின்றன
நுகர்ந்து கொண்டே நான்
பயணிக்கிறேன்
சமரசமே சமரின் விடியல்

————கலா புவன் ——–