நூல் : குழந்தைகளுக்கு லெனின் கதை
ஆசிரியர் : மிக்கெயில் ஜாஷ்சென்கோ
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

விலை : ரூ.₹50/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

சோவியத் ரஷ்யா அளித்த மிகப்பெரிய கொடைகளில் ஒன்று தான் புத்தகங்கள் அதுவும் மொழிபெயர்ப்பு நாவல்கள் எத்தனையோ எண்பதுகளில் வந்த காலகட்டத்தில் பல புத்தகங்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பது நமது துரதிஷ்டவசமே..

லெனின் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் தத்துவங்கள் வாசித்து இருப்பினும் ஒரு சிறு புத்தகத்தின் மூலம் குழந்தைகளுக்கான அற்புதமான லெனின் காண்பிக்கிறார் இந் நூலின் ஆசிரியர் ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிப்பது போன்ற கடினமாக இல்லாமல் எளிய நடையில் மிகவும் பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன்.

லெனின் மிகச்சிறந்த போராளி படிப்பாளி மாணவ பருவத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்திருப்பது அவரது அறிவுக்குர்மையை பறைசாற்றுகிறது.

புத்தகத்தில் கூறியிருப்பது போல உலகின் நலம் நாடுகிற,ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின் பற்றிய சின்னஞ்சிறு நூலில் பேரதிசயங்கள் காத்திருக்கின்றன ஒரு முறை வாசித்து விடுங்கள் தோழர்களே நண்பர்களே. ..

எட்டு வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு தான் பொய் சொல்லி விட்டோமே என்று எண்ணி இரண்டு மாதங்கள் கழித்து தனது மனதை அரித்த அந்த நிகழ்ச்சியை நினைத்து மனம் எண்ணி துன்பப்பட்ட அந்த சிறுவன் நினைக்கும் போது. .. ஆச்சரியம் கொள்ள தான் செய்கிறது. ..

புரட்சி வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பை பாதிலேயே நிறுத்த முடிவு செய்த பல்கலைக்கழகத்திற்கு சவாலாக பல்கலைக்கழகத்தின் பாடங்களை நேரில் சென்று படிக்காமலேயே வீட்டில் இருந்து தனது பள்ளி படிப்பை முடித்து முதல் மாணவனாக வந்த லெனின் மிகச்சிறந்த படிப்பாளி என்பதை பல்கலைக்கழகமே பாராட்டி சான்றிதழ் கொடுத்திருப்பது அன்றைய பேராசிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…

நரியை வேட்டையாட வாய்ப்பு கிடைத்தும் நரியின் அழகையும், உயிரையும் மதித்து மனிதநேயத்துடன் நடந்து கொண்ட அந்த லெனின் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எத்தனையோ தலைவர்கள் சொற்பொழிவு செய்ய வரும் போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் இவர் தான் தலைவர் என்று ஆனால் கூட்டத்தில் ஒருவராக வந்து ஒரு தொழிலாளியின் அருகிலேயே அமர்ந்து பேசும்போது மட்டுமே தான் தலைவர் என்று தெரிந்த பின் அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு பொம்மை வாங்கி கொடுத்த லெனின் குழந்தைகளின் மனதை குழந்தைக்கான உலகத்தை புரிந்து கொண்டு மாபெரும் தலைவர் என்ற மமதை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு குழந்தை மனம் படைத்த அந்த லெனின் கண்டு தொழிலாளர் மட்டுமல்ல வாசிக்கும் நாமும் வியப்புக்கு உள்ளாகுவோம்.

கண அடுப்பை தயாரிக்கும் தொழிலாளரிடம் மரியாதையாக நடத்தும் பாங்கு ஒரு தோழனுக்கு உரியதாகும்.

முன்னரே பதிவிட்ட மீனவ தலைவரிடம் நடத்தப்படும் உரையாடலும் மீனவ தலைவர் கொண்டுவரும் மீனை வாங்கிக் கொள்ளாமல் மிகக் கடுமையான பஞ்சத்தில் மக்கள் வாழ்கின்ற போது தலைவனுக்கு மட்டும் உன்ன ஏன் மீன் அந்த மீனை பஞ்சத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன மாமேதை தான் லெனின். ..

இவர்தான் புரட்சியின் தலைவர் லெனின் என்று தனது இறுதி கட்டுரையை முடித்துக் கொள்கிறார்.

நாம் லெனினை பற்றிய பல புத்தகங்கள் வாசித்திருப்பினும் நவம்பர் புரட்சி நூற்றாண்டை ஒட்டி சிறார் நூல் வரிசையில் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ சிறுவர் நூல் வரிசையில் இருப்பினும் அனைத்து பெரியவர்களும் வாசிக்க வேண்டிய மிக அற்புதமான படைப்புதான் இந்த புத்தகம் மிகச்சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன் மற்றும் விக்டர் கிரிலோவின் ஓவியங்கள் வெகு சிறப்பாக இருக்கின்றன.
இதைப்போன்ற படத்துடன் கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது நம் மனநிலை ரஷ்யாவுக்கே செல்வதை போல இருக்கிறது.

மிக்கெயில் ஜாஷ்சென்கோ எளிய நடையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் லெனினின் வாழ்க்கை வரலாறு சென்றடைய அருமையாக கதைகளைப் போன்று வரலாற்றை படைத்திருக்கிறார்.

புத்தகம் கொண்டு வர உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள். சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் மிகக் குறைவு அதை புக்ஸ் ஃபார் சில்ட்ரன் கடந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக அந்த இடத்தை பூர்த்தி செய்து வருகிறது.

குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் நிறைய மலரட்டும்.

அமுதன் தேவேந்திரன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “நூல் அறிமுகம்: மிக்கெயில் ஜாஷ்சென்கோவின் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ தமிழில்: ஆதி வள்ளியப்பன் – அமுதன் தேவேந்திரன்”
  1. வரும் ஏப்ரல் 23 உலக புத்தக தின விழா கொண்டாட ஒரு புத்தகம் வேண்டுமானால் அந்த நாளில் இந்த புத்தகம் படிக்கலாம் என தோன்றுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *