குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும் கோழிகளுக்குத்
தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது
எப்படியென்று
நாம்தான்
எப்போதும் கற்துகளிலே!
****************************
வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும் கூடு நனைந்து போனதற்காக
போக்கிடமில்லையென புலம்பியழுததில்லை
உலா போய்க்கொண்டுதான் இருக்கின்றன…

நல் மண்ணில் வாழும்
கரையான் காற்று மழையில் கரைந்தாலும்
உறைந்து போக வில்லை
விரைந்து
கரையெழுப்பி வாழுகிறது …

வழிகளிருந்தும்
விழிகள்தான் செல்வதில்லை செல்லாதவர்க்கு!

-கலை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *