எடுத்து வைத்து சென்ற இடத்தை கடைசி வரை சொல்லவே இல்லை.
மகன் முகிலன் மீது கோபமாக இருந்தது.
உன்னை எப்படி எல்லாம் வளர்த்து இருப்பேன்!?
கண்கள் கசிய தேடத் தொடங்கினார்
அம்மா!
துக்கம் தொண்டையை கவ்வியது.
பல முறை கேட்டும் தரவில்லை முகிலன்.
ஒரு மணி நேரமாக தேடினார்.!
கிடைத்தே விட்டது, பெட்டியில் அடைத்து
வைக்கப் பட்டு இருந்த “இனிப்புகள்”.
சுகர் அம்மாவைப் பார்த்து சிரித்தது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.