ulagaikkavarntha padaippaaligal - 1 shakespeare - written by n.varadharajalu உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -1 : ஷேக்ஸ்பியர் - நா. வரதராஜுலு

உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -1 : ஷேக்ஸ்பியர் – நா. வரதராஜுலு

(ஷேக்ஸ்பியர் நாடகச் சுவையின் ஒரு துளியை நம் நாவில் தடவுகிறார், தமிழ்-இங்கிலீஷ் இலக்கியங்களைத் தமது மூச்சாக்கிக்கொண்டுள்ள இக்கட்டுரையாளர், ஷேக்ஸ்பியரைப் படிப்பதற்காகவேனும் இங்கிலீஷ் படித்தாகவேண்டும்! ஆம்! ஆனால் இங்கிலீஷ் கற்றவர்களில் எத்தனைபேர் ஷேக்ஸ்பியரைப் படித்துள்ளனர்? அந்தோ!) இன்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர், உலக…
nool arimugam: kaapurimai kothavaal - jananesan நூல் அறிமுகம்: காப்புரிமை கொத்தவால் - ஜனநேசன்

நூல் அறிமுகம்: காப்புரிமை கொத்தவால் – ஜனநேசன்

“இது எனது கதை . எனக்கு தெரியாமல் கதையில் சிலபகுதிகளை மட்டும் மாற்றி படமெடுத்து விட்டார்கள் . இப்படத்தினை தடை செய்யவேண்டும் “ என்று நீதிமன்றங்களின் முன்னும் , சமூக, மின்னூடகங்களிலும் அடிக்கடி குரல்கள் ஒலித்து பல பிரபலங்களின் பெயர்கள், உருளுவதை…
சக்திராணியின் கவிதைகள்

சக்திராணியின் கவிதைகள்




அன்பு
********
எப்போதும் என் வீட்டிற்கு
விருந்தாளியாக வரும்
குழந்தை…
இப்போதெல்லாம் வருவதே இல்லை…

ஏன் என்ற கேள்வி என் உள்ளம்
கேட்ட போதும் விடையெல்லாம்
கண்டுபிடிக்க முடியவில்லை…
என் அகக்கண்களுக்கு…

இருந்தும்…அவள் விரும்பி சாப்பிடும்
நொறுக்குத்தீனியும்…
விளையாட்டு பொம்மைகளும்
உயிரற்று கிடக்கின்றன…
என்னைப்போல்…

ஊருக்கு சென்றிருந்தால் கூட…
கைபேசியில் உரையாடிடுவாள்…
உள்ளம் மகிழ புன்னகையில்…
உறவை ஒன்றாகச் சேர்த்திடுவாள்…

விடையற்ற வினாவுக்கு…விடை
தேடும் முயற்சியில் நாட்கள் நகர்ந்து…
வருடங்களான போதும்…
காத்திருப்பதும்…அழகாகத்தான்
இருக்கின்றன…அன்பு மனதிற்கு…

பிடித்தவர்களை…பிடியில் வைத்திருப்பதல்ல…அன்பு…

அவர்களின்
அர்த்தமற்ற…செயல்களிலும்…
அன்பாய் வாங்கும் பொருட்களிலும்…
நினைவுகளாய் வாழ்ந்து கொண்டிருப்பதே அன்பு…

நம்பிக்கை
****************
தோல்வியால்…துவண்டபோது…
எக்கரமும் ஆறுதலாய் இல்லா வாழ்வில் …
என் மீது
நான் கொண்ட நம்பிக்கை…

அன்பை மட்டும்…கண்ட
விழிகள்…சுயநல உபயோகம்
எண்ணி அழுத நொடியில்
எனக்காக நான் கொண்ட நம்பிக்கை…

இயலா செயலென…பலர்
சொன்ன போதும்…இயன்றதை
செய்து சில வெற்றிகளை
அனுபவித்த போது…எனக்காக
நான் கொண்ட நம்பிக்கை…

மாற்றம் எதிர்பார்த்த…வாழ்வில்
ஒட்டு மொத்த மாற்றமும்…
எதிர்மறையாய் அனுபவித்த போதே
எனக்காக நான் கொண்ட நம்பிக்கை…

பேசிய வார்த்தைகளில்…
பொய்யிருந்தும்…எதிர்த்துப் பேச முடியா நிலையில்…
மௌனமாய்
என் மனதில் நான் கொண்ட நம்பிக்கை…

எனக்கான நம்பிக்கை அனைத்தும்…
எனக்குள்ளே புதைந்திருக்க…
வேறென்ன நம்பிக்கை …என் வாழ்வின்
பயனாய் அமைந்துவிடப்போகிறது…
என்றே…என் நம்பிக்கை எனக்காய்…

முகமூடி
**********
நான் நானாக இருக்கிறேன்…என்பதில்
தொடங்கிய எண்ணம்…
ஏறக்குறைய…என் வயதிற்கேற்றாற்போல்
என்னுடனே…தொடர்கின்றன… வார்த்தைகளில்…

எனினும்…என் முகம் கொண்ட மாற்றம்
மனதில் பல எண்ணங்கள் புகுத்த…
பல முகமூடிகளை
விழித்ததும்…
அணிந்து கொள்கிறேன்…

குட்மார்னிங் சொல்ல முடியா
தருணம்…சொல்லியே ஆக வேண்டிய
கட்டாயத்தில் ஒரு முகம்…

புன்னகைக்க இயலா மனிதரிடம்…
போலிப் புன்னகை டோக்கன்
போட்டே…புன்னகை பரிசாய் ஒரு முகம்…

சினம் கொண்ட மனம்…
சிரிக்காமல் சென்றதில்லை ஒருபோதும்…

எச்செயலும் பிடிக்கவில்லை…
செய்வதற்கே…எனினும் எல்லாம் பிடித்தது போல் செய்யும் கரங்களுக்குள்
ஒழியும்…உண்மை முகம்…

தகுந்த நேரத்தில் தகுந்த…முகம்
அணிந்தே…பிறர் போற்றும்…
ஒப்பற்ற வார்த்தைகளில்…என்
நன்றி உரித்தே என்பதில்…
கடந்து விடத்துடிக்கும் ஒரு முகம்…

எண்ணற்ற முகங்கள் முகமூடியாய்
இருந்தும்…முகம் சுளிக்காமல்
பேசுவதில்…முகமூடிகள்…
கிழிக்கப்படுவதில்லை…இங்கே…

எனினும்…முகத்திற்கான…
அகங்கள் தவிர்க்கப்படுகின்றன…
தெரிந்தும் தெரியாதது போல்…

நடிப்பு
*********
கதறி அழும்…
நான்கு சுவர்களுக்கு
மத்தியில்… யாருக்கும் தெரியாமல்…அழுது விட்டு
வெளியில் வந்து புன்னகைப்பதில்
கலந்து விடுகிறது நடிப்பு…

பிடிக்காத விஷயங்களும்…
பிடித்ததாய் செய்யும் போதே…
பிடித்தலுக்குள் பிடித்துப்போய்விடுகிறது நடிப்பு…

காரசாரமான விவாதங்களுக்காக…
காத்திருக்கும் நபரிடம்…கை குலுக்கி
கடந்து விடும் போது…
கலந்து விடுகிறது…நடிப்பு…

உண்மை விளக்கும் உன்னத உரையில்
சுயநலமான சொற்களுக்கு மத்தியில்
சுயம் தேடி அழைவதில்…சுயமாய்
நடிக்கிறது நடிப்பு…

உயிரானவனின் உதவி வேண்டலில்…
எல்லாம் இருந்தும்…இல்லை என்றே…
ஒற்றை வார்த்தையில் உண்மை
மறைப்பதில்…உறைந்து கிடக்கிறது நடிப்பு…

எல்லாம் நடித்து விட்டு…ஏதும் அறியாதவனாய்….கண்ணாடி பார்த்தே…
நானும் நல்லவன் தான் என்றோ…
எனக்குள் நல்லவன் இருக்கிறான்
என்பதோ…ஆகச்சிறந்த நடிப்பு…

இல்லத்தரசி
***************
இவள் இல்லாமல்
ஓர் அணுவும் அசையாது இல்லத்திலே…இல்லை என்ற சொல்லும் கண்டதில்லை இவள்
ஞாலத்திலே…

காலையிலே…டீயில் துவங்கிய
வேலை ஒவ்வொன்றாய்…
அடுக்கடுக்காய்…இவள் உயரம்
தாண்டிய போதும்…
ஒருபோதும்…இவள் சலிப்பை
வேலையில் காட்ட எண்ணியதில்லை…விடுமுறை
கொடுங்கள் என்றோர்…
வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை…

சட்டை…எங்கே…ஷூ..எங்கே
எனக் கேட்கும் கணவனுக்கு…
கண் முன்னே இருக்கும் பொருள்
தேட…நேரமில்லா பொழுதில்
இவள் நேரம் செலவழிக்க
தவறியதில்லை…

படுக்கையில் புரளும் குழந்தைக்கு
இல்லா அக்கறை…பள்ளியில்
என்னவெல்லாம் கேட்பார்களோ…என
பலமுறை புத்தகப்பைகளை சரிசெய்து…எடுத்து வைப்பதில்
இவள் அக்கறைக்கு ஈடு இணை
எதுவுமில்லை…

இட்டலி அவிப்பதிலும்…சாம்பாரின்
சுவையை இரசிப்பதிலும்…
யாருக்கெல்லாம் இவை பிடித்திருக்கும் என்பதில் இவள்
போடும் கணக்குகளில்…இவள்
பிடித்தம் என்னவோ…என்பதை
மறந்தே…ருசிக்கிறாள்

குக்கர் இசை…ஒருபுறம் இருக்க
பிடித்த பாடல் எங்கோ ஒரு முனையில் காதுகளைத் துளைக்க…
மனம் லயித்து கேட்க துடிக்கும்
இசையில்… குக்கர் இசைக்கே
முன்னுரிமை அளித்து காரியம்
சாதிக்கிறாள்…

விடைபெறா குழந்தையின் அழுகையை நிறுத்தி பள்ளிக்கு
அனுப்பி…டாட்டா காட்டி…கணவனுடன் அனுப்பி
வைத்தே… வேலையெல்லாம்
முடிந்தது என்ற எண்ணத்திற்கு
முட்டுக்கட்டையாய்…

பாத்திரங்கள்…ஒருபுறம்…
துணி மூட்டைகள் … மறுபுறம்…
பயன்படுத்திய பொருளெல்லாம்…
ஆங்காங்கே…என வீடு முழுதும்
நிறைந்திருக்க… அனைத்தும்
சுத்தம் செய்தே…வீட்டை முறைப்படுத்தில்
முறைதவறியதில்லை…இவளது
செயல்கள்…

எல்லாம்..முடித்த பின்னே…
சற்றே அமர்வோம் என சிந்திக்கும் வேளையிலே…ஏம்மா…டீ போடுறீயா…என்ற மாமனாரின்
குரலுக்கு செவிசாய்த்தே… மீண்டும்
அடுக்களைக்குள் நுழைந்தே
இல்லா வேளையை…இழுத்துப் போட்டு செய்வதில் இன்னல் கண்டதில்லை இவள் ஒருபோதும்…

மாலை நேரத் தேநீரும்…மதி மயக்கும்
இசையும்…ஒருபுறம் கேட்டாலும்…
குழந்தைகள்…இசையும்…தேடலும்
ஆங்காங்கே சிந்தனைக்கோர்
விருந்தாய் காலம் கடத்த தவறுவதில்லை…இவள்
வாழ்க்கையிலே…

இல்லம் முழுதும் வெளிச்சமாய்…
இன்முகம் எனும் வருகையாய்…
இரவை வரவேற்று… மீண்டும்
அடுத்த விடியலுக்கு காத்திருந்து…
நகர்வதில் இவள்…போல்
சிறப்புடையோர்…யாருமில்லை…

இல்லத்தரசி என்றோர் பெயருக்கு
பொருத்தமாய்…இல்லம் காக்க
வேறொரு… உறவுமில்லை…

– சக்திராணி

கள்ளப் புன்னகை கவிதை  – வளவ. துரையன்

கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்




உன் கேள்வியின் பொருள்
எனக்குப் புரிந்து விட்டது.

விடையையும் சொன்னேன்.
உனக்கு விளங்கவில்லை.

தேர்வறையில் அங்குமிங்கும்
பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய்.

கூட்டத்தைவிட்டுப் பிரிந்த
ஒற்றைக் கருப்பு வாத்து போல
அலைகிறாய் மனத்துள்ளே.

இங்கே போட மாட்டார்கள்
எனத் தெரிந்தும் யாசிக்கும்
இரவலனா நீ?

ஒரு கல்லைக் குளத்தில் எறிந்தால்
உருவாகும் நூறு வட்டஙக்ள் போல
நீ உருவாக்கிக் கொள்கிறாய்.

தெளிவான ஓடையினடியில்
தெரியும் கூழாங்கல் போல
என் பதில் தெரிந்தும்
கள்ளப்புன்னகை புரிகிறாய்.

எத்தனை நாள்கள் நடிப்பாய்?

காலம் கண்களை மூடிக்கொண்டு
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

– வளவ. துரையன்

நடிப்பு கவிதை – சக்தி ராணி

நடிப்பு கவிதை – சக்தி ராணி




கதறி அழும்…
நான்கு சுவர்களுக்கு
மத்தியில்… யாருக்கும் தெரியாமல்…அழுது விட்டு
வெளியில் வந்து புன்னகைப்பதில்
கலந்து விடுகிறது நடிப்பு…

பிடிக்காத விஷயங்களும்…
பிடித்ததாய்ச் செய்யும் போதே…
பிடித்தலுக்குள் பிடித்துப்போய்விடுகிறது நடிப்பு…

காரசாரமான விவாதங்களுக்காக…
காத்திருக்கும் நபரிடம்…கை குலுக்கி
கடந்து விடும் போது…
கலந்து விடுகிறது…நடிப்பு…

உண்மை விளக்கும் உன்னத உரையில்
சுயநலமான சொற்களுக்கு மத்தியில்
சுயம் தேடி அலைவதில்…சுயமாய்
நடிக்கிறது நடிப்பு…

உயிரானவனின் உதவி வேண்டலில்…
எல்லாம் இருந்தும்…இல்லை என்றே…
ஒற்றை வார்த்தையில் உண்மை
மறைப்பதில்…உறைந்து கிடக்கிறது நடிப்பு…

எல்லாம் நடித்து விட்டு…ஏதும் அறியாதவனாய்….கண்ணாடி பார்த்தே…
நானும் நல்லவன் தான் என்றோ…
எனக்குள் நல்லவன் இருக்கிறான்
என்பதோ…ஆகச்சிறந்த நடிப்பு…

– சக்தி ராணி

Pangai Thamizhan Kavithaigal பாங்கைத்தமிழன் கவிதைகள்

பாங்கைத்தமிழன் கவிதைகள்




‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!

வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!

வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!

இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?

சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?

ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !

இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!

மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!

நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!

சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!

மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !

மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!

இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….

உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?

*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!

வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!

திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!

அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!

மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!

வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!

விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!

விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!

**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!

உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!

வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?

இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.

கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!

அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!

வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….

பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!

பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!