Puthiya India enum Konal Maram (புதிய இந்தியா எனும் கோனல் மரம்-பரகால பிரபாகர்)

பரகால பிரபாகர் எழுதிய “புதிய இந்தியா எனும் கோணல் மரம்”- நூலறிமுகம்

"கோணல் மரமான மனிதகுலத்திலிருந்து நேரான எதுவும் ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை"- இம்மானுவேல் கான்ட் அவர்களின் மொழியோடு 'புதிய இந்தியா எனும் கோணல் மரம்' தன் பயணத்தை தொடங்குகிறது. "பிரபாகரனின் உரைநடை ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. இன்றைய இந்தியாவையும், அவளின் எதிர்காலத்தையும் குறித்து இந்த நாட்டிலும்…
நூல் வெளியீடு: ‘யாமறிந்த புலவன்’ நூலை வெளியிட்டு பாரதிக்குப் பெருமைசேர்த்த முதலமைச்சர்!

நூல் வெளியீடு: ‘யாமறிந்த புலவன்’ நூலை வெளியிட்டு பாரதிக்குப் பெருமைசேர்த்த முதலமைச்சர்!




பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது ஆளுமையை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் ‘யாமறிந்த புலவன்’ என்ற நூலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். அந்த நூலை சமரசத் தீர்ப்பாயம் சுங்கம், கலால் & சேவைவரித்துறை தென்மண்டல முன்னாள் தலைவர் சி. இராஜேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் நூலாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் உள்ளார். மற்றும் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் நூலாசிரியர் தாயார் மற்றும் அசன் உள்ளனர்.

இந்நூல் 1918 ஆம் ஆண்டு முதல் 2021 வரை கடந்த நூறு ஆண்டுகள் பாரதி பற்றி பல்வேறு கருத்தியலை முன்வைத்து 140 அறிஞர்கள் எழுதியக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம்.

மொத்தம் 1400 பக்கங்களில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. பாரதி நண்பர் வ.வெ.சு. ஐயர் தொடங்கி கலைஞர் முதல் பல்வேறு தலைவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது 13 ஆண்டுக்கால ஆராய்ச்சி மூலம் உருவான புத்தகம். காலத்தால் அழியும் நிலையிலிருந்த பல படைப்புகளை மீட்டுத் தந்துள்ளேன். அதில் உள்ள பல படைப்புகள் 100 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக நூலாகி உள்ளது.

மேலும் இந்த நூலின் பின்பகுதியாக அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தோழர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பேசிய சொற்பொழிவுகளைக் கண்டறிந்து 300 பக்கங்களில் தொகுத்து அளித்துள்ளேன். இது பாரதி ஆய்வில் மிக முக்கியமான நூல்.

நூல் : யாமறிந்த புலவன் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
விலை : ரூ.₹1500
வெளியீடு : பதிகம் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்




ண்மையில் மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா முத்துக்குமார் மறைந்த மறுநாள் தீக்கதிர் ஏட்டில் வந்திருந்த அஞ்சலி கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அழைத்து நெருக்கமாகப் பேசியது தான் உடனே நினைவுக்கு வந்தது. இசையின் பால், இசைப் பாடல்களின் பால் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னைக் கூடுதலாக ஈர்த்தது. தமிழின் முன்னோடி சிறுகதை ஆசிரியர்கள் பலருக்கும் இசையோடான இயைபு இருந்திருக்கிறது.

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்‘முதல் 50 ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்று எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் (அவரது பாட்டனார் மதுர கவி பாஸ்கரதாஸ் தான் தமிழின் முதல் பேசும் படத்தில் பாடல் எழுதியவர், எம் எஸ் அவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்தவர்!) எழுதி பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இப்போது வந்துள்ள புத்தகம், படைப்பாளிகளின் இசையார்வம் பற்றிச் சிறப்பாக ஆங்காங்கு தொட்டுச் செல்கிறது. 895 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்துக் கீழே வைக்காமல் படித்து முடிக்க முடியும் என்று ஊக்கப்படுத்திய நூல் அது.

தமிழின் முதல் சிறுகதை எது என்ற விவாதத்தில் அடிபடும் ஆறில் ஒரு பங்கு கதை எழுதியவர் சாட்சாத் மகாகவி சுப்பிரமணிய பாரதி, அவரை விடவா இசை ஞானமிக்க ஒருவர், தமது கவிதைகளை இன்ன தாளத்தில் இன்ன ராகத்தில் இசைக்கலாம் என்று சேர்த்து வெளியிட்டவர், தாமே குரலினிமை மிக்க பாடகர்.

புதுமைப்பித்தன் முதற்கொண்டு பங்காற்றிய மணிக்கொடி இதழில் படைப்புகளை வெளியிட்ட தி ஜானகிராமன், லா ச ராமாமிர்தம்….என்று இசையைக் கொண்டாடியவர்கள் நிறைய உண்டு. மணிக்கொடியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் கவிதை எழுதி இருக்கிறார் என்று அந்தி மழை டிசம்பர் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தோழர் ச தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார். துன்பம் நேர்கையில் யாழ் பற்றி சிந்தித்தவர் ஆயிற்றே…

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்று ஏ பி நாகராஜன் வசனம் எழுதியது எத்தனை உண்மையின் பிரதிபலிப்பு என்பதை, தமிழ்ச் சிறுகதை படைப்பாளிகள் வரலாற்றையும் சேர்த்துப் பேசும் தமிழ்ச்செல்வன் பக்கம் கண்ணீரோடு எழுதிச் செல்கிறது. ராஜமுக்தி திரைக்கதை எழுதிய புதுமைப்பித்தன் உடல் நலிவுற்றுத் தவித்தது பற்றி அந்தப் படத்தின் நாயகி இசை வாணி பி பானுமதி தாமதமாக அறிந்து உதவத் துடித்தது குறித்து, தி இந்து நாளிதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டிருந்தார் தஞ்சாவூர் கவிராயர். ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதை, புதுமைப்பித்தனின் சொந்த வாழ்க்கை தரிசனம் அன்றி வேறென்ன…வயிற்றுப்பாட்டுக்குத் தவிக்கும்போதிலும் படைப்பூக்கம் நழுவ விட்டு விடாத அப்படியான படைப்பாளிகளில் இன்னொருவர் விந்தன்.

ருமையான எழுத்தாளர் என்பதோடு மற்ற படைப்பாளிகளை ஊக்குவித்த எளிய மனிதரான விந்தன், எப்போதும் மறையாத திரைப்பாடல்கள் சில வழங்கிச் சென்றுள்ளார் என்பது, முன்பே கேள்விப்பட்டிருந்தாலும், தமிழ்ச்செல்வன் தொகுப்பில் வாசித்தது இன்னும் நெருக்கமாக ஈர்த்தது. குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்ற மகத்தான மெல்லிசை கீதத்தை, 5 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர் கடந்த சில ஆண்டுகளில் என்று சொல்கிறது யூ டியூப். நான் ஒரு மலையாளி, ஆனால் என் இதயம் கவர்ந்த பாடல் என்கிறது ஒரு குரல். எனது இசை திறமையை வெளிப்படுத்த கல்லூரியில் பெரும் வாய்ப்புகள் பின்னர் அமையக் காரணமாக அமைந்தது இந்தப் பாடலை ஒரு முறை மேடையில் பாடியது தான் என்கிறார் ஒருவர். எம் ஜி ஆர், ஜி வரலட்சுமி நடிப்பில் ஆழ்ந்து ரசிப்போரும் பாடலில் மனத்தைப் பறிகொடுத்துப் பதிவுகள் போட்டிருக்கின்றனர்.

பத்திரிகை அலுவலகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் இருக்கையில், அவருள் இருந்த படைப்பாளியை உணர்ந்து அவரைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தவர் எழுத்தாளர் கல்கி. அந்த விந்தன் எழுதிய பாடல் தான் அது. அந்தத் தேனமுதை, மெல்லிசை மன்னர்களின் இசையில் ஏ எம் ராஜா ஜிக்கி இணையர் அபாரமாக வழங்கி இருப்பது காலம் கடந்து பேசிக்கொண்டிருக்கிறது.

டக்கே இருந்து வந்த ராகம் என்று குறிப்பிடும் இசைக் கலைஞர் சாருலதா மணி, பாகேஸ்ரீ ராகத்தில் சங்கீத மூலவர்களிடம் அதனால் தான் கீர்த்தனைகள் பிறக்கவில்லை, டைகர் வரதாச்சாரியின் சீடர் எம் டி ராமநாதன் புனைந்த பாட்டு தான் முதலாவதாகக் கிடைக்கிறது என்று தமிழிசையில் இந்த ராகத்தின் நுழைவைப் பேசிவிட்டு, திரை இசையில் அமைந்த முதல் பாடலாகக் குறிப்பிடும் பாடல் தான் மயக்கும் மாலைப் பொழுதே என்கிறார்.

https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-bewitching-bhagesri/article3002530.ece

பின்னர் வந்த நிலவே என்னிடம்… பாடலையும் அவர் குறிப்பிடும் போது சங்கீதம் அறியாத எனக்கும் சட்டென்று பிடிபட்டது, குலேபகாவலி பாடலின் ஈர்ப்புமிக்க இடங்கள். அந்தப் பட்டியலில் அவர் தொட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அமர்க்களம். அதில் ஒன்றை மற்றொரு தருணத்தில் இங்கே எடுத்துக் கொள்ளவேண்டும்.

மாலைப் பொழுதின் மயக்கத்தில் ஆர அமர ஆழ்ந்துவிட்டு, சரி போதும் நீ புறப்படலாம் என்று வழியனுப்பி, இரவைத் துணைக்கு அழைக்கும் காதல் உள்ளங்களின் கொண்டாட்ட இசை தான் பாடல். அந்த மயக்கத்தை ஜி வரலட்சுமி அபாரமாக புலப்படுத்துவதைக் காணும்போது, ஆரவல்லி படத்தின் நாயகியாக அவரது அதிகார மிடுக்கு மிக்க முகமும் நினைவுக்கு வந்தது. இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயமில்லையா என்று எழுதினாரே கவிஞர், காதல் யாரைத் தான் விடும்!

காமிராவில் ஒரு காட்சி விரிந்து புறச்சூழலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஜிக்கியின் தொடக்க ராக ஆலாபனை, படத்தைப் பாராமல் கூட அந்தி கருக்கும் பொழுதில் மனத்தைக் கொண்டு நிறுத்திவிடுகிறது. மயக்கும் மாலை என்று வருணித்து, நீ போ போ என்று வழியனுப்புவது, மறுநாளைக்கும் மயக்கம் வேண்டுமென்பதற்கு நைச்சியம் செய்து வைக்கும் உத்தி போல் படுகிறது. அந்த மாலை தங்களுக்குத் தேவைக்குமேல் நீண்டுவிட்டதுபோல் குற்றம் சாட்டுவது மாதிரி அந்த மாலையைக் கொஞ்சம் நீட்டித்து இசைக்கிறார் ஜிக்கி. அந்த போ போ என்பது கூட, யாரையும் விரட்டும்போது இரட்டிப்பு அழுத்தம் சொல்லித் தானே அனுப்பி வைப்பது மாதிரி தான்! ‘இனிக்கும் இன்ப இரவே நீ வா வா என்பதில் இரவுக்கு வரவேற்பும், நீ இடத்தைக் காலி செய் என்று மாலைக்கு மற்றுமொரு அழுத்தமும் சேர்ந்து ஒலிக்கிறது. இரவை வரவேற்பது எதற்காக….’இன்னலைத் தீர்க்க வா’ என்று அடுத்த அடியில் காரணமும் சொல்லப்பட்டு விடுகிறது. மூன்று வரிகளில் எத்தனை காவியம் புனைந்திருக்கிறார் விந்தன்.

ஜிக்கியின் காதல் அறையின் சாளரம் வழியே கசியும் இசை கேட்டு, ஏ எம் ராஜா நுழையும் இடம் துல்லியமான காதலை இத்தனை மெல்லியதாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கிறது. ‘பன்னீர் தெளிக்கப் பனி பெய்யுமே’ என்ற அனுபல்லவியில் எத்தனை சுகம்….’பசும்புல் படுக்கப் பாய் போடுமே’ என்ற அடுத்த வரியில் எத்தனை இதம்! இதிலிருந்து பல்லவிக்கு ராஜா புறப்படவும், அதன் நிறைவில் ஹம்மிங் எடுத்து, முதல் சரணத்திற்கு வருகிறார் ஜிக்கி.

‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே…. பாடும் தென்றல் தாலாட்டுமே’ என்ற வரிகளை என்னமாக எடுக்கிறார் ஜிக்கி. இரவின் உணவையும் உறக்கத்தையும் இயற்கையின் மடியில் எடுத்துக் கொள்கின்றன காதல் இதயங்கள். ‘தேனூட்டுமே’ என்ற இடத்தில் அத்தனை ரசம் கொடுத்து இழைத்திருப்பார் ஜிக்கி. அதே போல், ‘தென்றல்’ எனும் வார்த்தையே நம்மை வருடுவது போல் இசைப்பார். அதிலிருந்து ‘புன்னை மலர்கள் அன்பினாலே’ என்ற வரிக்கு அவர் மாறும் விதமும், அந்த அன்பில் அவர் குழைக்கும் அன்பும் அபாரம். ‘போடும் போர்வை ….’ என்று வளர்த்து, ‘தன்னாலே’ என்று அதை நீட்டிக்கும் இடம் இன்னும் சொக்க வைக்கும். பல்லவியில் கொண்டு அவர் முடிக்க, இந்த முறை ஏ எம் ராஜா எடுக்கிறார் ஹம்மிங், தொடர்ந்து, இரண்டாவது சரணம்.

இரண்டாவது சரணம், சிருங்கார சுவாரசியம். ‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே’ என்ற நாயகியின் குறிப்பில் இருந்து உரிமை எடுத்துக் கொள்கிறான் நாயகன், ‘கனியிதழ் காதல் பசி தீர்க்குமே ..’ என்பது அவனது தூண்டுதல். அதை அப்படி அனுபவித்து இசைப்பார் ராஜா. நாயகி ஏன் மறுக்கப் போகிறார், ‘காண்போம் பேரின்பமே’ என்கிறாள். அங்கிருந்து பாடலை எங்கோ கொண்டு செல்கிறார் விந்தன், ‘வானிலும் ஏது வாழ்விது போலே …’ என்ன கவித்துவக் காதல் வரி! மென்மையான குரலிலேயே உயர்த்திக் கொண்டு போகிறார் ராஜா அதை. ‘வசந்தமே இனி எந்நாளும்’ என்பது காதல் இன்ப வாழ்க்கையின் நிறைவுரை ஆக ஜிக்கியின் குரலிசையில் ஒலிக்கிறது.

ராக ஆலாபனைகளும், குரலினிமையும், தொடக்கமுதல் சீரான கதியில் இன்பியல் ரசனை தோய்ந்து வெளிப்படும் தன்மையும் பாடலை எப்போதும் கேட்கவைக்கிறது. சிதார் இசையும், பதமான தாளக்கட்டும் உள்ளுக்குள் ஒலித்தபடியே இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டங்களினூடே காதலைப் பேசியவர் விந்தன். புரட்சிகர இதயங்களில் காதல் பூத்துக் குலுங்கும் என்பதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த இசைப்பாடல்.

கருத்தொருமித்து வெளிப்படும் காதலின் இசை அது. எல்லோரும் இன்புற்று இருக்க நினைக்கும் இசை. வேறொன்று அறியாத இசை. மலர்ச்சி மிக்க புதிய சமூகத்திற்கான இசையும் அது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

An insult to the federal philosophy and the values ​​of the liberation struggle Article By Veeramani. கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு - வீரமணி

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு – வீரமணி




ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர்களின் மனோநிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் சமூக-கலாச்சாரப் பாரம்பர்யங்களுக்குமான ஆழமான அவமதிப்பையே காட்டுகிறது.

இந்த ஆண்டு அணிவகுப்பு சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் குறிப்பதால், அதற்கேற்ற விதத்தில் மேற்கு வங்க அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போசையும், விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பையும் சித்தரிக்கும் விதத்தில் அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. இது நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்களாக விளங்கிய வ.உ.சிதம்பரனார், விடுதலைப் போராட்டத்தின் தேசியக் கவி, சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சிலரை அலங்கார ஊர்தியில் சித்தரித்திருந்தது. இதனையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை.

கேரளாவின் அலங்கார ஊர்தியில் மாபெரும் சாதி ஒழிப்புப் போராளியும், மறுமலர்ச்சி இயக்க வீரருமான ஸ்ரீ நாராயண குருவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனையும் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும். அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவானது, ஸ்ரீ நாராயண குருவின் சிலைக்குப் பதிலாக ஆதி சங்கராச்சாரியார் சிலை வைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் கேரள அரசு ஸ்ரீ நாராயண குருவின் சிலையை அப்புறப்படுத்த மறுத்ததன் காரணமாக, கேரள அரசின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து, விடுதலை இயக்கத்திற்கும், மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் பங்களிப்பினைச் செய்தவரைவிட, எட்டாம் நூற்றாண்டில் பிராமண தர்மத்தை மீட்டமைத்திட்ட ஒரு சாமியார், எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இதனை இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிடும் ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் விளக்கிட முடியும். கேரளாவின் அலங்கார ஊர்தியில் ஆதி சங்கராச்சார்யாவின் சிலையை வைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசின் வல்லுநர் குழு வற்புறுத்தியதன்மூலம் அது ஸ்ரீ நாராயண குருவை மட்டும் அவமதித்திடவில்லை, கேரளாவின் ஒட்டுமொத்த முற்போக்கு சமூக-கலாச்சாரப் பாரம்பர்யத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும்.

தங்கள் மாநில அலங்கார ஊர்திகளை விலக்கிவைத்திருப்பதனை எதிர்த்துக் கடிதம் எழுதிய மேற்கு வங்க மற்றும் தமிழ்நாடு அரசு முதல்வர்களின் கடிதங்களுக்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், அவ்வாறு விலக்கியிருப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார். அவரின் கூற்றுப்படி, அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவில், கலை, கலாச்சாரம், இசை, கட்டிடக்கலை முதலானவற்றில் புகழ்பெற்ற நபர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்பதாகும். இந்த 75ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும் குடியரசு தின அணி வகுப்பிற்கு மிகவும் பொருத்தமான நபராக ஆதி சங்கராச்சார்யாவைக் கருதிய வல்லுநர் யார் என்று தெரிந்துகொள்ளவே ஒருவர் விரும்புவார்.

ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வருக்கு எழுதியிருக்கும் பதிலில், மத்தியப் பொதுப் பணித்துறையும் ஓர் அலங்கார ஊர்தியைப் பெற்றிருப்பதாகவும் அதில் சுபாஷ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் கூறும் கூற்றுப்படி, ஒரு மாநிலஅரசின் அலங்கார ஊர்தியைவிட ஒன்றிய அரசின் ஒரு துறை அளித்துள்ள அலங்கார ஊர்தி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பதாகும்.

மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான மற்றும் குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தின் காரணமாக நடைமுறையில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இது, அரசாங்கத்தின் கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரான அணுகுமுறையையே காட்டுகிறது. ஜனவரி 26 இந்தியக் குடியரசு உருவானதையும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்திடும் அரசமைப்புச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதையும் குறிக்கும் தினமாகும். மோடி அரசாங்கம், இவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளையே மீறிக் கொண்டிருக்கிறது.

(ஜனவரி 19, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Sandhiya Natarajan in Bharathiyin Periya Kadavul Yaar Book Review By Pavannan. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

ஒரு வாசகர் இலக்கியத்திலிருந்து பெறுவது என்ன? – பாவண்ணன்

ஆங்கிலேயர் போற்றும் மாபெரும் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர். அவர் எழுதிய நாடகங்கள் அனைத்தும் மேடையில் நடிக்கப்பட்டனவே தவிர, அவை நூல்வடிவம் பெறவில்லை. அவர் எழுதிய முப்பத்தாறு நாடகங்களில் அவர் உயிரோடு இருந்த காலத்தில் பதினெட்டு நாடகங்கள் மட்டுமே நூல்வடிவம் பெற்றிருந்தன. எஞ்சியவை…
பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி – சாந்தி சரவணன்

பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி – சாந்தி சரவணன்

பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி செய்துள்ளேன். பாரதியார் நினைவு நாள் ஹைக்கூ வேத புரத்திலே வியாபாரம் பெருகுது கல்வி தனியார் மயமானது * பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பணம் * வானமழைபொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும்…