ஆ…..இது புதுசா இல்ல… இல்ல… பழசுதான்.. – அ.பாக்கியம்

ஆ…..இது புதுசா இல்ல… இல்ல… பழசுதான்.. – அ.பாக்கியம்




ஆ…..இது புதுசா இல்ல…
இல்ல… பழசுதான்..

தமிழகத்தில், 25 மாவட்டங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டிய, 138 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடம், 61 கோடி ரூபாய்க்கு அரசால் விற்கப்பட்டுள்ளது.

நகர ஊரமைப்புச் சட்டத்தின்படி, 2,500 சதுர மீட்டருக்கு அதிக பரப்பிலான அனைத்து லே-அவுட்களிலும், மொத்தப்பரப்பில் 10 சதவீத இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

இதற்கு விலக்கு அளிக்கும் வகையில், 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கொண்டு வரப்பட்டன.
இந்த விதிகளின்படி, 3000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு, திறந்த வெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை.

3,000 சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான பரப்பிலான திட்டங்களுக்கு, 10 சதவீத இடத்தை ஒதுக்கலாம்; அல்லது அந்த நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை, அரசுக்குச் செலுத்தலாம்.

இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டபோதே, சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019 பிப்ரவரியில், இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், 2021 நவம்பர் வரை, தமிழகத்தில் எத்தனை லே-அவுட்களில், எவ்வளவு ஏக்கர் பரப்புள்ள திறந்த வெளியிடத்துக்கு தானப்பத்திரத்துக்குப் பதிலாக வழிகாட்டி மதிப்பு வாங்கப்பட்டது என்ற விபரம் வருமாரு.

25 மாவட்டங்களில் 34 மாதங்களில், ஒப்புதல் வழங்கப்பட்ட 1367 லே-அவுட்களில், 219 லே-அவுட்களிலும், 194 பெரிய கட்டடங்களில் 63 கட்டடங்களிலும் மட்டுமே 10 சதவீத திறந்த வெளியிடம் 110 ஏக்கர் தானமாக வாங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1148 லே-அவுட்களிலும், 131 கட்டடங்களிலும் ‘திறந்த வெளியிடம்’ ஒதுக்குவதற்குப் பதிலாக, 138 ஏக்கர் 31 சென்ட் இடத்துக்கு, அரசு வழிகாட்டி மதிப்பாக ரூ.60 கோடியே 83 லட்ச ரூபாய், அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

அதாவது பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கான அரசின் இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.31 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 925 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல எல்லா இடங்களையும் அரசே விற்று விட்டால், எதிர்காலத்தில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மரங்கள் வைக்க இடம் எதுவுமே இருக்காது. சுற்றுச் சூழல் எப்படி பாதுகாக்கப்படும்.

எனவே, இந்த விதிமுறையை மாற்றி, 10 சதவீத இடம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசர அவசியம். இதனால் குறைந்த விலை கொள்ளையும் நடைபெறுகிறது.

தேனியில் ஓரிடத்தில் நான்கு சென்ட் இடத்துக்குப் பதிலாக வழிகாட்டி மதிப்பாக வெறும் 1,500 ரூபாய் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சேலத்தில் மாநகரப் பகுதியில் ஆறு சென்ட் இடத்துக்குப் பதிலாக ஒரு கோடியே 94 லட்ச ரூபாயும், கோவையில் 16 சென்ட் இடத்துக்குப் பதிலாக ஒரு கோடியே 46 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயும் வழிகாட்டி மதிப்பாக அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடங்களின் மதிப்பு, இதை விட பல மடங்கு அதிகம்.

ஆக்கிரமிப்பில் இதுவொரு வகை. அதிமுக அரசால் பொது இடம் பயன்பாடு சட்டத்தில் (OSR) கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யவேண்டும். பொது இடம் சூறையாடலைத் தடுக்க வேண்டும்.

அ.பாக்கியம்
முகநூல் பக்கத்திலிருந்து

மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

பூங்காவில் தீவிரமான நடைபயிற்சியில் இருந்தார்கள்.பரசுவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு. எத்தனை நாள் தான் கொடுக்காமல் இருக்கறது? இன்னைக்கு குடுத்திடணும்னு இருந்தார். இதோ" தென்றலில் அசைந்து வரும் மலராய்" நடந்து வருகிறார் வசந்தா. "டீ.சர்ட்" ல் கண்ணைப் பறிக்கிறார். மெதுமெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார்.பரசுவும்…
Thandanai Shortstory By Suba Sri தண்டனை குறுங்கதை - சுபாஸ்ரீ

தண்டனை குறுங்கதை – சுபாஸ்ரீ

சுமியின் அம்மா கலாவும் அபியின் அம்மா கவிதாவும் பூங்காவில் தங்கள் குழந்தைகள் இருவரையும் விளையாட விட்டு பின்பு இருவரும் அவர்களைப் பார்த்தவாறு ஒரு பென்ச்சில் உட்கார்ந்தார்கள்.

இதேபோல் வாரத்தில் ஓரிரு முறை பூங்காவிற்கு குழந்தைகளோடு வந்து விளையாட விட்டு பின்பு இருவரும் கலந்துரையாடுவது வழக்கம் கலாவும், கவிதாவும் பள்ளி கல்லூரி தோழிகள் அல்ல, அவர்களின் இரு குழந்தைகளும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் இவர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கு விடுவது, கூப்பிட வரும்பொழுது பார்த்து பேசி அப்படியே தோழிகள் ஆயினர்.

அன்றும் அப்படித்தான் குழந்தைகளை கவனித்தவாறே தனது பேச்சை ஆரம்பித்தாள் சுமியின் தாய் கலா,”இப்பொழுதெல்லாம் பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமை பற்றி அதிகமாகக் கேள்விப்படுற மாதிரி இருக்குல்ல கவிதா?”

“ஆமாம்பா சின்ன குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் இதுபோல செய்ய எப்படி தோன்றுகிறது என்றே தெரியவில்லை” என்று அதே வருத்தத்துடன் கவிதாவும் சொல்ல, உடனே கலா, “பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு குட் டச்- பேட் டச் பற்றி சொல்லி கொடுத்து, முக்கியமாக நல்ல நண்பர்களாக இருந்தால் குழந்தைகளும் இதுபோல் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் சொல்ல தயக்கமில்லாமல் சொல்லுவார்கள் என்றே தோன்றுகிறது” என்று சொல்லி முடிக்க,

கவிதா “அதுவும் சரி அதேசமயம் தவறு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை கொடுக்க பட வேண்டும்” என்றால்.

பிறகு இருவரும் ஒருசேர தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கூற ஒருவரையொருவர் பார்த்து விட்டு, தம் பிள்ளைகளின் கள்ளம் கபடமற்ற முகங்களைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தனர்.

Children Stories by Era Kalaiyarasi. குழந்தை கதைகள் - இரா.கலையரசி

குழந்தை கதைகள் – இரா.கலையரசி




என் உலகம்.

அந்தப் பூங்காவிற்கு இன்ப சுற்றுலா சென்றனர் மாணவர்கள்.

திலீபனும், ஆசையுடன் வண்டியில் ஏறி இருந்தான். ஓஹோ! ஓஹோ! என சத்தம் எதிரொலித்தது.

பஞ்சவர்ணக் கிளிகள், வரவேற்க “கீச் கீச்” சத்தத்துடன் இங்குமங்கும் நகர்கின்றன. மயிலின் வண்ணத் தோகை, பச்சை மரகதமாய் மின்னுகிறது.

மற்றக் குழந்தைகள் எல்லாம், வெறுமனே பார்த்தபடி சென்றனர்.

திலீபன் மட்டும் ஒவ்வொரு பறவையின் வண்ணம், அலகு ஆகியவற்றை மனதில் படம் பிடித்தான்.

துள்ளி குதித்து வந்த மான் ஒன்று திலீபனிடம் ஏதோ பேசி சென்றது.

வரிக்குதிரை வளைந்து பார்க்க, கண்களில் மத்தாப்பு பூத்தது திலீபனுக்கு.

கைகளை தட்டி, உற்சாகத்துடன், ரசித்தான்.

மற்றவர்களுக்கு காட்சி பொருளாக இருந்த விலங்குகள், திலீபன் மனதில் ஒரு வண்ண திரைப்படமாக விரிந்தது.

கற்பனையின் சிறகுகள், விரிந்து பறந்தன. அவனுக்கான உலகில் எத்துனை மகிழ்ச்சியாக இருக்கிறான் திலீபன்?

குறுகுறு ஆர்வத்துடன் இருக்கும் திலீபன் ஒரு “ஆட்டிசக் குழந்தை”.