ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார்  (தமிழில் அ.பாக்கியம்)

ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார் (தமிழில் அ.பாக்கியம்)




அரவிந்த் வாரியார்
(தமிழில்: அ.பாக்கியம்)

கேள்வி: தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா இருப்பது ஏன்?

பதில்: பின்வரும் காரணங்களால் தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.

1) மலையாளிகள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என மனுக்கள் தொடர்ந்து கொடுப்பதும் போராட்டங்களும் நடத்துகிறார்கள்.

2) எந்த அரசியல்வாதியையும் வணங்கும் பழக்கம் கேரளாவில் இல்லை. அரசியல்வாதிகள் எந்த தவறான செயல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

3) கேரளாவில் உள்ள மலையாள செய்தி சேனல்கள் அரசாங்கத்திற்கு இணங்கி போவது இல்லை. மேலும் அவை பிரைம் டைம் விவாதங்களில் அரசாங்கத்தின் குறைபாடுகளையும், கமிஷன் பற்றியும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்கின்றன.

4) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் ஆட்சி அதிகாரம் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது. இது ஊழலின் அளவைக் குறைக்கிறது. ஏனெனில் பஞ்சாயத்துகள் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.

5) கேரளாவில் டிஜிட்டல் கல்வியறிவு மிக அதிகமாக உள்ளது. இது அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான மனித தொடர்புகளைக் குறைக்கிறது. இது ஊழலைக் குறைக்கிறது.

நன்றி:
அரவிந்த் வாரியார் (Arvind variar.
Quora தளத்தில் எழுதியது.)

Pali Aadukal (பலி ஆடுகள்) Poetry Poet By Sa. Lingarasu (ச.லிங்கராசு). Book Day is Branch of Bharathi Puthakalayam.

கவிதை: பலி ஆடுகள் – ச.லிங்கராசு



பலி ஆடுகளுக்கே இங்கு
பலவித விருந்தோம்பல்கள்
பாவம் இந்த ஆடுகளுக்கு
இந்த பகல் வேஷம் புரிவதே இல்லை.
ஆதலால் காலங் காலமாய்
தங்களை காவுக்கு தயாராக்கிக்
கொள்கின்றன.

ஐந்தறிவு ஆட்டினைப் போலும் இந்த
ஆறறிவு மனிதர்களும் இங்கே
மாறிப்போனது தான் மானிட கொடுமை.
விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளால்
இந்த சநாதனிகளின்
சங்கமத்தில் சரணாகதி ஆகிறார்கள்

மனுவையும் வர்ணத்தையும்
மலைபோல் எண்ணி இருப்போர்
கூட்டத்தில்
எங்ஙனம் இந்த மங்கையரெல்லாம்
ஏமாந்தவர்கள் ஆகிறார்கள்?
ஊரும் சேரியும் ஒன்றில்லாத போதும்
‘சுயமும் சேவையும்’ சும்மாவா
இருக்கும்?
பம்மாத்து காட்டி பலரையும் ஈர்க்கும்

– ச.லிங்கராசு

Sa Lingarasu Wrote (Politician) Traditional Poetry in Tamil Language. Book Day and Bharathi TV Are Branches Of Bharathi Puthakalayam.

‘அரசியல்வாதி’ – ச.லிங்கராசுவின் மரபுக் கவிதை

மரபுக் கவிதை ***************** எத்தனை ஜாலங்கள் ஏமாற்றும் பேச்சுகள் அன்றும் செய்திருப்பார் -அதை இன்றும் செய்திடுவார் - ஒரு புத்தரை போலொரு போதனை சொல்லியே நித்தமும் நடித்திடுவார் - வரும் சொத்தையும் சேர்த்திடுவார் சட்டத்தின் ஓட்டையை சாதகமாக்கியே சாதனை செய்திடுவார் -…
கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கே; அரசியல்வாதிகளுக்கோ கார்ப்பரேட்டுகளுக்கோ அல்ல – சர்வேசன்

கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கே; அரசியல்வாதிகளுக்கோ கார்ப்பரேட்டுகளுக்கோ அல்ல – சர்வேசன்

  100 ஆண்டுகளுக்கு மேல் நல்ல அனுபவங்களோடு சாதாரண ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்து வருவது கூட்டுறவு. நிதி, உற்பத்தி, சேவை உள்ளிட்ட பல துறைகளில் மக்களுக்கான சேவை நோக்கத்தோடு  சிறந்த அனுபவம் கொண்ட அமைப்பு கூட்டுறவுஆகும். இந்தியா முழுவதும்…