20 நூற்றாண்டில் இதைப் படிக்காமல் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பாமரன் புரிவது சிரமம் என்பதால் இரண்டும் சேர்ந்தே பதிப்பிக்கப்பட்டன. இந்த எழுத்து எப்படி கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்ட தோழர் ஈ.வெ. ராவின் கண்ணில்படாமல் போனது என்பது தெரியவில்லை. இதனை வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடிக்க கடமைப்பட்டவர்கள். ஒரு வேளை கண்ணில் பட்டிருந்தால் இதைத்தான் முதலில் அவர் தமிழில் தந்திருப்பார். சொத்துடமை பற்றிய குழப்பத்தைப் போக்கும் போர்வீரனாக உயர்ந்திருப்பார்.
நல்ல வேளையாக பாரதி புத்தகாலயம் இன்றையத் தமிழில் கொண்டுவந்தது பாராட்டிற்குரியது சமத்துவ பொருளாதார கட்டமைப்பிற்காகப் போராடுவோருக்கு சித்தாந்த ஆயுதத்தை. கூர்மைப் படுத்த உதவுகிற பிரசுரமாகவும் உழைப்பாளிகளின் சிந்தனையைத் தூண்டுகிற கையேடாகவும் இது இருப்பதைப் படிப்பவர்கள் உணர்வர். 173 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இதை படிக்கிற வாசகர் கொரானா காலத்தில் யாரோ எழுதியதாகவே கருதுவர் இதில் வரும் 24 கேள்விகளும் அதற்கான பதில்களும் இன்றைய கட்டத்திலும் பொருந்துகின்றன..சில கேள்விகளை மட்டும் கீழே தரப்படுகிறது.
கம்யூனிசம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர் தொழில் புரட்சியின் மேலான விளைவுகள் எவை? இந்தப் புரட்சி ஒரு நாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா? தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்ன ?
தனியார் சொத்துடைமை ஒழிப்பு பற்றி
தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா? தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக்கட்டுவது சாத்தியமா? இதில் எந்த கேள்வியும் இன்றைய நிலைக்கு பொருந்தாது என்று கூறமுடியுமா?
முதலாளித்துவ நிபுணர்கள் இந்த எழுத்தைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிவது அவசியம் பிரிட்டீஷ“ என்சைக்கிளோ பிடியா கூறுகிறது
19ம் நூற்றாண்டிலே ஐரோப்பிய முதலாளித்துவம் “பசியை” அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கிய கட்டத்திலிருந்த ஐரோப்பியச் சமூகத்தின் கருணையற்ற காலாவதியான கட்டத்தை உள்ளதை உள்ளபடி பாமரனும் புரிகிற மொழியில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணம். என்று பூசி மொழுகுகிறது. அதாவது பசியில் தவிக்கும் பாட்டாளி வர்க்கத்தை உருவாக்காமலே முதலாளித்துவம் இன்று ஜீவிப்பதாக எழுதி மகிழ்கிறது. முதலாளித்துவம் கனிவோடு இருப்பதாகத் தம்பட்டம் அடிக்கிறது. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய முதலாளித்துவம் சொந்த நாட்டு மக்களைப் பசியில் தள்ளிச் சுரண்டியது அதனால் வர்க்க போராட்டம் தலைதூக்கியது.. அதை சமாளிக்க ஆசிய ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கியது அதுவும் வர்க்க போராட்டத்தால் தாக்குதலுக்குள்ளான போது காலனி ஆதிக்கத்தால் தன்னை நிலை நாட்டிக் கொண்டது சோவியத் புரட்சிக்குப் பிறகு வர்க்க போராட்டம் காலனி ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டியது. இதே காலத்தில்
முதலாளித்துவம் பல நாடுகளில் பரவியதால் லேபர் மார்க்கெட்டை உண்டாக்கி உலகளவிலும் உள்நாட்டிலும் எமிகிரன்ட் லோபர் புலம் பெயர் தொழிலாளர்கள் என்னும் பாட்டாளிவர்க்க பிரிவை பசியில் தள்ளுகிறது. இன்று கொரோனா தொற்று முதலாளித்துவத்தின் குணம் ஈவிரக்கமற்ற பணவடிவு சொத்து குவிப்பே தவிர மானுடத்தை ஆரோக்கியமாக வாழவைக்கும் ஆற்றலோ,கருணையோ அதற்கு கிடையாது என்பதைக் காட்டிவிட்டது.
சொத்துடமை உணர்வைப் பேண முதலாளித்துவம் பணவடிவில் யார் வேண்டுமானாலும் சொத்து சேர்க்கலாம் நிலையை உருவாக்கியுள்ளது. நிறுவனப் பங்குகளாக. தங்கமாகச் சொத்தை வைத்திருப்பவர் பட்டியலை வெளியிட்டு முதலாளித்துவமே சிறப்பானது என்று தம்பட்டம் அடித்தது. 2008ம் ஆண்டு பூர்சுவா சொத்து அது ஒரு மாயை நீர் குமிழி என்பதைக் காட்டிவிட்டது. இன்றும் சொத்துடமை பற்றிய குழப்பம் மக்களிடையே நீடிப்பதால் டிரம்ப் சொத்துடமையை அகற்றும் கம்யூனிசம் பரவிவிடுமென்று பயமுறுத்தியே சீன எதிர்ப்பை கக்குகிறார்.
எங்கெல்சின் இந்த சிறிய பிரசுரத்தின் கேள்விகளும் பதில்களும் முதலாளித்துவ கட்டத்தை உலகம் தாண்டுகிறவரை பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனையைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது.. பூர்சுவா மேதைகள் ( ஆன்மீக அடிமைகள்) உருவாக்கும் சொத்துடமை பிம்பங்களை நம்பி மோசம் போவதை தன் நம்பிக்கையோடு தடுக்கும் கேடயமாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக அரசு நீடிக்கிற பொழுதுதான் ஜனநாயகம் நிலைக்கும் என்ற உண்மையை உணரவைக்கும் அறிவியலாகும் எனவே பாரதி புத்தகாலாயம் வெளியிட்ட
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் -பிரெடெரிக் எங்கெல்ஸ் | தமிழில்: மு.சிவலிங்கம்
என்ற பிரசுரத்தை வாங்குங்க. படிங்க. கேள்விகளை உங்களுக்குள்ளே கேளுங்க உங்களைச் சுற்றிநடப்பதைவைத்து பதிலை தேடுங்க நீங்களும் எங்கெல்சாக மாறுவீர்கள். இந்தியா சோசலிச நாடாக உயர அந்த மாற்றமே தேவை. (பாரதி புத்தகாலாயத்தையும் காப்பாற்றுங்க)
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ் | தமிழில்: மு.சிவலிங்கம்