Veeramani's Poems மரு.சா.வீரமணியின் கவிதைகள்




1.
பாகற்காயான வாழ்க்கையில்
சுண்டைக்காய் கனவோடு
புடலங்காயாய் நீளும் தேவைகளை
கூறுகளாய் விற்கும் அவள்
ஒரு கூறின் விலை பத்து
என்கிறபோது
கலந்திருக்கிறது
பத்தாது என்கிற முனகல்

2.
முன்பொருநாள் நீர் வழிந்தோடிய
வாய்க்கால்களில்
எதிர்நீச்சல் பழகிய
வெள்ளிக் கெண்டைகள்
பொய்த்துப் போன மழையால்
கண்ணில்படவேயில்லை
வாய்க்கால்கள்
சாலைகளானது
திடீரென்று
ஒருநாள் பொத்துக்கொண்டு
ஊற்றிய மழையில்
சாலைகளில் நீச்சல் பழகுகிறது
வண்டிகள்

3.
நிறைய சிந்திக்கிறேன்
என்கிற பதிலில்
பழகிவிட்டது
அப்படியே இருக்கிற
முதல் நரைமுடியின்
வருத்தம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *