மின் தூக்கிகள் மனிதர்களை ஏற்றிக்கொண்டு மேலும், கீழும் போகின்றன. அவற்றிற்கு யாதொரு சுமையும் இல்லை. மனிதனின் சுமையால் அழுந்தியவன். அவன் சுமப்பது எல்லாம் கவலை எனும் அழுகிய பொதி. அந்தப் பொதியை சுமந்து கொண்டு வாழ்வு முழுவதும் அலைகிறான்.
மின் தூக்கிகளுக்கு சுமையேயான வாழ்வு ஒன்றுமில்லை. அதன் இன்பம் மனிதளை ஏற்றி மேல் கீழ் தளத்தில்
விடுவது மட்டுமில்லை.அந்த வேளையில்
அவன் பாடுகளை இறக்கி வைக்கின்றன. ஒரு மனிதன் கண்ணீர்ச் சிந்தும் பொழுதுகளில், அவன் சுமையைத் தாங்கி ஆற்றுப்படுத்துகிறது.
வேற்று கிரக வாசிகள் போல, மின் தூக்கிகள் மிதந்து ஏறி இறங்கும் அவை.
பூமியின் அன்பு போர்த்தும் ஆடையாக
இந்த உலகம் அதற்கு. வானக் குடையின் கீழாக எல்லா உறவுகளும், மகிழ்வின் எல்லையில் நின்று கைக்குலுக்குகின்றன.
அந்தப் பெண், அந்த ஆண், அவர்களின் குழந்தைகள், நிராதரவற்று தனித்து ஏங்குகையில், தனித் தீவான எங்களிடம் தஞ்சம் அடையுங்கள் என்று மின் தூக்கிகள் சொல்கின்றன.
வாழ்க்கை முழுமைக்குமான, நேயமிக்க மிக்க பரிவர்த்தனைகள் நிகழ்த்தும் மின் தூக்கிகள் / துளி கண்ணீரையும் சிந்துவதில்லை. ஆண்டான் அடிமை என்கிற பேதம் தவிர்த்து, எல்லோர்க்குமான அரியணை மின் தூக்கிகள்.
மனிதனின் சில மணித்துகள் பயணம்,
மின் தூக்கிகளுடன் பயணிப்பது. ஆனால், நீண்ட பயணத்தின் களைப்பை
அவை போக்கிவிடுகின்றன. தாய்மையின் ஏணைகள் போல்,
பூமியில் மனிதர் எனும் சேயை தாலாட்டும் மின் தூக்கிகளுக்கு சுமை என்று எதுவுமில்லை.
ஆசு
Post Views: 427