நூல் : 13 லிருந்து 19 வரை
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹ 60/- 
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இன்றைய காலகட்டத்தில் பதின் பருவத்தினரைக் (Teenager) நாம் கையாள்வது ஒரு பெரும் சவாலாக சிக்கல் நிறைந்த task ஆகவே இருக்கிறது. பதின் பருவக் குழந்தைகளையோ, பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ சாடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தூண்டும் கருத்துகள் உள்ள புத்தகம்.

பெரும்பாலும் பதின்ம வயது (13 – 19 வரை) என்பது ஒருவித குழப்பமான பருவம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நாம் எல்லோருமே இதனைக் கடந்து வந்திருந்தாலும் கூட நாம் அப்பருவத்தில் இருந்தது எல்லாம் பெரும்பாலும் மறந்தே விடுகிறது, மறக்காமல் இருந்தாலும் அதனை வெளிகாட்டுவதில்லை.

பதின்ம வயதில் ஏற்படும் உடல் மாற்றம் சார்ந்த குழப்பங்கள். பெரும்பாலும் தம்மைப் பலரும் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், தன் அழகை தானே ரசிக்க தூண்டும் எண்ணம், எதிர் பாலின ஈர்ப்பு, தன்னை சார்ந்த குழுவினரின் தூண்டல்கள். பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்பு, ஒப்பீட்டு பேச்சுகள் இதுபோல ஏராளமான சவால்களைச் சமாளித்து வரும் அவர்களது உணர்வுகளை உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே பலனளிக்கும்.

இந்த பதின் பருவத்தில் உள்ளவர்களை அவர்களது கேள்விகளுக்கான பதில்களை சரியான அணுகுமுறையில் அவர்களை அறியச் செய்தல் மட்டுமே அவர்களை சிறந்த மனிதானாக மாற்ற இயலும் வழி.

குடும்பம், கல்வி நிலையங்கள், சமூகம் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் அவர்களை நேர்கோட்டில் வளர்த்தெடுக்க வேண்டிய இம்மூன்று முனையும் தவறுகள் செய்வோரைத் திருத்துவதை விட தண்டிப்பது எளிது என்ற காரணத்தால் எப்போதும் அதனையே செய்கிறோம். ஏதேனும் தவறு செய்தால் திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, சக வயதில் உள்ளவரை வைத்து Compare செய்வது. இது அனைத்தும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

13லிருந்து 19வரை உள்ள இளைஞர்களை முறையாக வளர்த்து எடுக்காவிட்டால் அவர்கள் வழி தவறிப் போகும் அபாயமே அதிகம். அதே போன்று சினிமா மற்றும் ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஆதிக்கம் இப்பருவத்தினரிடம் மேலோங்கியே இருக்கும். ஆகவே திரைப்படங்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும், முறையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த வயதை வைத்து தான் அவர்களை கேடான வழியில் செல்ல தூண்டும் விதமாக பெரும்பாலும் படங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் ஆசிரியர் மாதவன் குறிப்பிடுவது பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எளிமையாக வாழுவது மிகப்பெரிய ஆளுமை என்ற கருத்தை அவர்களிடையே விதைக்க வேண்டும் என்கிறார். கற்றலின் முறைகளை தெளிவு படுத்த வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் கடமை என சுட்டி காட்டியுள்ளார்.

மாணவர்களின் கற்றலில் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்,எதைக் கற்று மறக்க வேண்டும்,எதைக் கற்கவே கூடாது என்பன போன்ற விசயங்களில் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை நினைவு படுத்துகிறார்.

இளைஞர்களை முறையான விதத்தில் வளர்த்தெடுப்பதில் குடும்பம், பள்ளி, சமூகம் இந்த மூன்றின் பங்களிப்பே முக்கியம். இளையோருக்கு சரியான வழிகாட்டுதலை அளிப்பதன் மூலம் அவர்களை நன்றாகவும், நல்லவர்களாகவும் வாழப் பயிற்றுவிக்க வேண்டும்.

இறுதியாக ஆசிரியர் கூற வருவது Teenager வயது உடையவர்களை கையாளும் வழி தெரியாமல் திணறும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாய் இந்நூல் உள்ளது.

தி.தாஜ் தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்,ஆடுதுறை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *