காசிக்குச் செல்ல முடிவெடுத்த மனதிற்கு
நீண்ட நாட்களாய் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தேன்
ஆதி முதல் அமர்ந்திருக்கும்
ஆளுயர சடையின் அளவுகள்
அரை அடி சிலைக்குள் அடங்கிவிட்டதைக் காணத்துடிக்கிறது மனம்
கைப்பிடி சாம்பலில் அடையாளங்களை அழித்து விடுவதுபோல்
வேகம் கொள்கிறது கங்கை நீர்
நதியின் வாய் அருகே
எரிந்து அடங்கும் சடலங்களின் நம்பிக்கையில் காசியைக்காண்கிறேன்
அந்த நம்பிக்கையின் சாம்பலில்
புனிதமாகிறது கங்கை
என்றோ காசிக்குச் சென்று வந்த பாட்டியின் கைப்பிடிக்குள் அடங்கிவிட்டது
பாட்டில் நீரில் கங்கை நதி.
கங்கைநதி மழையாய் பெய்தது வீடு முழுவதும்
மீண்டும் வீடுசேர்ந்த எத்தனையோ
உயிர்களின் சாம்பல் துகளின் முனகலுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.