என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்..
ஒருமுகமானோம் ஜனநாயக ஐக்கியத்தில்
முகவரிப் பெற்றோம் ஒற்று சார்நிலையற்ற குடியிருப்பில்
பேரரசுகளின் இறங்கல்
பிரிவினை சாம்ராஜ்யத்தின் சறுக்கல்
ஒழியப் பெற்றோம்…
அன்னியரின் ஆதிக்கத்தில்
ஓய்ந்துப் போனோம்..
சர்வாதிகார அகோரப் பிடியில்..
ஏர் பிடித்த மக்களாட்சி மாண்டு
கையூட்டாய் ஜனித்தது..
கார்பரேட் கலாச்சார ஒன்றிய ஆட்சி..
தலை தூக்கிய எட்டப்பர் எடுபிடி வாதம்
நிர்மூலமாகிய ஜனநாயக தனியுரிமம்..
நிலைகுலைந்தோம்..
நின்ற மேனிக்கே குறுகினோம்..
பின்னலிட்ட பிரிவினை தான் எத்தனை..
மதங் கொண்டு பின்னிய மதத்தீவினை தான் அத்துனை..
சாதிசிடுக்குகளில் சிதைந்துப் போனோம்..
சாமான்ய சமத்துவம் கூட அற்று சரிந்தே கிடக்கோம்..
வேற்றுமையிலும் ஒற்றுமை உண்டோம்..
இன்றோ..
ஓர்மையிலும் ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்டோம்…
எங்கு நோக்கினும் சகோதரம் தழைத்தோங்கியது
இன்றோ..
சகோதரனிடமும் சாணாக்கியம் இழைந்தோடுகிறது…
கொஞ்சிக் குலவிய சாமாண்யர் கூட
விஞ்சி மிஞ்சி மிதந்து
அரசியல் சக்கரத்தின் செக்குருட்டுகளாய் செதுக்கி நிற்கின்றனர்..
பொருள் ஊழி வாதம்
அடிமை சாசனவாதம்
பிரிவு தொற்று வாதம்
மத ஆழிசூழ் வாதம்
ஆதிக்க அரசியல்வாதம்
வாதம் யாவும்
மனிதவாதத்தை முடக்கி
மானுடர் மதியை மசக்கையாக்கி
மக்கிச் செய்தன..
குடியுரிமைக்குக் கூவ
குரல்வளை கருவிப்போயின..
குலப் பெருமை பாராட்ட மனித குலத்தை மசியலாக்கின..
இனப்பெருக்கத்தை புறந்தள்ளி
இனச்சரிவிற்கு இயைந்து போகும் மனிதரானோம்..
எங்கு தொலைத்தோம் நம் குடியை..
எங்கோ தொலைந்தோம் ஆதியறிவை..
து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
சென்னை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.