நூல் அறிமுகம்: கலகலவகுப்பறை சிவாவின் ”மெல்ல மலரும் ஆசிரியர்” – சுதா

நூல் அறிமுகம்: கலகலவகுப்பறை சிவாவின் ”மெல்ல மலரும் ஆசிரியர்” – சுதா




நூல் : மெல்ல மலரும் ஆசிரியர்
ஆசிரியர் : கலகலவகுப்பறை சிவா
விலை : ரூ.₹80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

வகுப்பறை நிகழ்வுகளை தொகுக்கப்பட்ட புத்தகம் இது.
வகுப்பறை என்றால் அமைதியாக இருப்பது என்பதை மறுபரிசீலனை செய்ய வைத்த புத்தகம். குழந்தைகள் வாசிப்பு திறன் குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை இதை மீட்டெடுக்க என்ன வழி.

வகுப்பறை வாசிப்புச் சாலையாய் மாற்றுவதே இதற்கு சிறந்த வழிமுறை. நோட்டுக்கு அட்டை போடுவது என்பது ஒரு கலை அதோடு அதை யார் போடுவது என்பதில் ஒரு போரே நடக்கும் ஆனால் இப்போது அப்படி எல்லாம் அல்ல அந்தந்த நோட்டுக்கு தக்கவாறு அட்டைகள் ரெடிமேட் ஆகவே கிடைக்கிறது.

பேனாவுக்கு மை ஊத்துவது என்பது ஒரு கலை அதிலும் ஒரு சொட்டு கீழே சிந்தாமல் ஊற்றுவது அத்தனை சுலபம் இல்லை ஆனால் இப்போது காட்ரேஜ் வாங்கிக் கொள்கிறோம்.இப்படி ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் நாம் குழந்தைகளை விடுவித்து சோம்பேறிகள் ஆகிக் கொண்டிருக்கிறோம் அல்லது அவர்களின் மன அழுத்தத்தை நாம் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றால் செயல்பாட்டு முறைகளில் இல்லாத எது ஒன்றையும் கற்பித்து வழக்கமாக முடியாது.

வாசிப்பு ஒரு மனிதனை என்ன செய்துவிட முடியும்.

மன அழுத்தத்தை தீர்க்க முடியும். அறிவை விரிவு செய்ய முடியும்.

இன்று நிறைய செயலிகள் நம் கைக்குள். இருந்தும் வாசிப்பின் அவசியம் என்ன. புத்தகம் வாசிப்பது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது.

லேண்ட்லைன் போன் இருக்கும் பொழுது 50 தொலைபேசி எண்கள் கூட மனதில் இருக்கும் ஆனால் இப்போது கணவரின் இன்னும் மனைவியின் இன்னும் குழந்தைகளின் இன்னும் கூட நினைவில் இருப்பதில்லை. அதுபோல்தான் அலைபேசியில் நாம் தேடும் விஷயங்கள்.

இப்படி எண்ணற்ற ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது இந்த புத்தகம். ஜன்னலில் வரும் வெளிச்சம் கட்டாயம் நம்மை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

– சுதா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *