அவள்
சுமக்க முடியாத தனது
திருஉருவை
தூக்கிக் கொண்டு
மலையேறினாள்.
சடுதியில் விரையும்
மெல்லிய தேகமுடையவர்களை
சபித்தபடி
ஊர்ந்தாள் மேல்நோக்கி.
சனிக்கிழமைகள்
புண்ணியமிக்கவை என்று
சொன்னவர்களை
வைதபடி மேலும்
சில படிகள் கடந்தாள்.
இரை விழுங்கிய மலைப் பாம்பின்
இயலாமை
அவளைப் படுத்திற்று.
காலில் இடறிய சிறு கல்லை
ஆற்றாமையில் எடுத்து வீசினாள்
அது
பெருமாளின் மீது போய் விழுந்தது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.