Karkaviyin Kavithaigal 13 கார்கவியின் கவிதைகள் 13

யாரோடு பயணிக்க
*************************
நடைபாதையில் மனிதன் கைப்பிடித்து நடக்கவா, அல்லது நாய்களின் வால் பிடித்து நடக்கவா..!
யாரேனும் வலப்புறம் வழி கூறிவிட்டு செல்லுங்கள்..!
சாதாரண பாதைகளுக்கு யாருடைய பயணக்கதை தெரியும்..!
இடது சார்ந்த மரங்களுக்கு யாருடைய வழிகள் தெரியும்,
வலிகள் புரியும்..!
இவைகளை வெளிச்சமாய் கொண்டு தனிமனிதனாய் பயணிக்கிறேன்…!
இப்பொது யாருடன் பயணிக்க…!

தூரத்தில்
எறியப்பட்ட கல்
சட்டென
ஒரு பூனையை
ஆக்ரோச நிலைக்கு
கொண்டு சென்றது
ஓட்டம் பிடித்தது பூனை…!

யாரோ கடந்து வந்த பாதையின்
சுவடுகளை
மடித்து
சட்டைப்பைக்குள்
மடித்து வைத்து கொண்டு
பேனை உருட்டு
நடந்து செல்கிறான்
ஓர் குருட்டு கவிஞன்…!

இதற்கு இடையில்
தடியால்
அடித்து விரட்டப்படுகிறது
திடுக்கென
பயந்த
அந்த
எதிர்வழிப் பூனை…!
காலத்தைச் சொன்னேன்….!

இணையவழி இளைய தலைமுறை
*****************************************
அழைத்தால் மட்டும் எட்டிப்பாரத்த குழந்தை…!
முகம் நிரம்பிய ஆறங்குல வெளிச்சம்…!
ஆசையாகி வெறியானது…!
காலம் படிப்பெனும் காரணமானது…!

எத்தனை முறை அழைப்பினும்…! காதில் திணிக்கப்பட்டது இணைய பஞ்சுகள்…!
கண்கள் சிவந்த நிலையாயினும்..!
தொடர்ந்தது முடிந்தே தீரும்…!

கல்வியா கண்களில் மின்னுவது…!
கவர்ச்சியா அங்கு ஒளிருவது…!
செயலிகளில் திணித்த மூளைகளாய்..!
தினம் தினம் விரல்களில் பரிணாம வளர்ச்சி..!

தேடலில் விரல்களும் உடன் மூளையும்…!
விழுந்த குணிவு முதுகிலும் செயலிலும்…!
முத்திப்போன கண்பிரச்சனையும்..!
காலனின் நேரடி பரிசீலனையும்…!

இப்படியே தொடர்கிறது
இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையவழி இடர்கள்…!

இளைய தலைமுறையில் ஆறாவது விரலானது இந்த அலைபேசி
ஏழாவது அறிவானது இந்த இணையவழி சையலிகள்….!

மீண்டும்
மாற்றம் பெறட்டும்
புத்தகங்கள் புரட்டும்
நாட்கள் வரட்டும்…

தொடர்வோம் இனிதாய் இணையம் தவிர்த்து
இதயங்களுடன் உறவாடி….!

மதம் கடந்து மனிதம்
*************************
கேளடா மானிடவா என்றான் பாரதி
பாரடா எனது மானிடபரப்பு என்றான் தாசன்
பரந்த குளத்தில் பச்சை மட்டும் நிரம்பவில்லை
பறவையின் பார்வையில் பசி மட்டும் தேடலில்லை

பசியென்று வந்தவனுக்கு பாடம் எடுக்க நேரமில்லை
வயிறு சுருங்கி நின்றவனின் பெயர் அறிந்தால் உணவில்லை
மேல் நின்று எறிபவன் கீழ் நிற்பவன் நிலையறியாதவன்
நீந்தி கரையேறும் மனிதன் நீச்சல் மறந்தவனுக்கு கைகொடுப்பது மனிதமே

நெற்றியில் பட்டை …!
கழுத்தில் பச்சை நூல்…!
கையில் கிராஸ்..!
கடைசிவரை கூறப்படவில்லை மனிதம் காணும் முறையை…

நாடென்ன சொல்லும் என நடுவீதியில் நிமிர்ந்து கேளாய்…
செய்திகளும் சாதிகளும் படித்து மடித்து தூரம் வை
சமுதாயம் என்பது மேம்பாட்டிற்கு மட்டுமே…
மறந்த்தை நினைவுகூர்ந்து மனிதம் கொள்வோம்…

மற்றவை தேவையறிந்து இனம் மத மொழி களைவோம்…!
மனிதம் காப்போம்…
மனிதம் போற்றுவோம்..
மனிதம் கொடியாய் ஏற்றுவோம்…!
மனித்த்திற்கு சேவை ஆற்றுவோம்..!மனித்த்தால் சிறப்படைவோம்…
மனிதம் சிறக்க முற்படுவோம்….
மனிதம் உணருவோம்…!
மனிதம் இனியாவது புகட்டுவோம்…!
அனைத்தையும் கடந்தது மனிதம்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *