ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

நான் பாடிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இடையில் காற்றும் குருவியும் மரமும் எட்டிப்பார்க்கின்றன சேற்றில் கலந்த நீரை அருந்தியதாலும் புழுதி படிந்த பாதைகளின் முட்களில் தடுமாறி நடந்த கால்களின் களைப்பினாலும் அதிகாரம் தீண்ட மறந்த காலனியின் அடிவயிற்றில் ஓயாது எரியும் புறக்கணிப்புப்…
Pangai Thamizhan Kavithaigal பாங்கைத்தமிழன் கவிதைகள்

பாங்கைத்தமிழன் கவிதைகள்




‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!

வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!

வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!

இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?

சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?

ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !

இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!

மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!

நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!

சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!

மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !

மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!

இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….

உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?

*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!

வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!

திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!

அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!

மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!

வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!

விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!

விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!

**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!

உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!

வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?

இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.

கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!

அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!

வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….

பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!

பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!

Indhiran Kavithaigal இந்திரன் கவிதைகள்

இந்திரன் கவிதைகள்

உடம்பு *********** உடம்பு எனது கேளிக்கை விடுதி. அதிரும் அதன் கிடார் இசைக்கு ஏற்ப காலவெளி கடந்த நடனத்தில் திளைக்கிறேன் வாழ்தலின் மது அருந்தி. ஒருவரை நேசிக்கும்போது அவரது உடம்பையும் சேர்த்தே நேசிக்கிறேன். வாழ்க்கையின் அகராதி திறந்து அர்த்தம் தேடுகையில் நான்…
Punithanin Kavithaigal புனிதனின் கவிதைகள்

புனிதனின் கவிதைகள்




தேநீர் மரம்
**************
வாசல்
வானமாக தெரிகிறது
வானம்
ரோஜா பூக்கள் பூத்த
வாசலாக தோன்றுகிறது

அம்மாவுக்கு அடுக்களையில்
தேநீர் வைக்க
உதவி செய்பவன்
விவசாயம் பொய்த்த பின்
தேநீர் கடையில்
தேநீர் தயாரிப்பவன் ஆகிறான்

போதி மரமாகிறது
தேநீர் கடையில் ஒலிக்கும்
சினிமா பாடல்கள்

ஜென் ஆகிறான்
தேநீர் தயாரிப்பவன்

டென்னிஸ் மட்டையின் ஜென் ஆற்றல்
********************************************
இந்த வருடம்
மஞ்சள் விளைச்சல் குறைவு
உடல் சோர்வு
மன அழுத்தம்
வாதை

அம்மா வழக்கம் போல்
காலையில் தேநீர் தந்தாள்
பட்டாம் பூச்சி
பாறாங்கல்லை கட்டி தூக்குவது போல்
மனம் லேசானது

பிரண்டை சட்னி எப்படி
செய்வது என பேசி கொண்டிருந்தார்கள்
அம்மாவும் சக வேலைக்கார அம்மாவும்

ஒண்டிரெண்டு நகைச்சுவை
அடிக்க முயன்றேன் நானும்

அம்மா வழக்கம் போல்
மதியம் ஒரு மணிக்கு
உறங்குவதற்காய்
கொட்டாவி விட ஆரம்பித்தாள்

அம்மா உறங்க போன பின்
என் கட்டிலில் கிடக்கும்
தலையணையை
வெறுமனே பார்க்க
ஆரம்பித்தேன்

சோர்வுறும் முயற்சியை விட
வாழ்வியல் பயிற்சியே
தேவை என புரிந்தது

Meerapandian Poems மீராபாண்டியன் கவிதைகள்

மீராபாண்டியன் கவிதைகள்




அம்மாவின் நேசம்
***********************
காப்பு கட்டி விரதம் பிடித்த
ஊர் திருவிழாக் காலங்களில்…
பரவால்லா
வீட்ல தான் சமைக்க கூடாது
ஆசைபட்டா ஹோட்டல்ல நீ சாப்டுக்க…
வீட்டு குள்ள வரயில
கைய கால நல்லா தேச்சி கழுவிரு
என்னும் போதும்…
எப்போதாவது பக்கத்து தாத்தா கடைக்கு
விற்பனைக்கு வரும்
எனக்கு பிடித்த முட்டை பப்ஸை வாங்கி கொடுத்து
உஷ்ஷ் வாய மூடி ட்டு சாப்டு கைய கழுவிரு
என்று சொல்லும் போதும்
எப்படியோ வெளிபட்டுவிடுகிறது
என் அப்பாவிற்கு முட்டையின் வாசமும்
எனக்கு அம்மாவின் நேசமும்…

உனது பெயர்
*****************
உனது பெயர் எனது கவிதையின் அடையாளம்…
பெயரின் பிற்பாதி…
விரல்களுக்கு விருந்து…
நாவிற்கு ருசி…
இதழின் படப்படப்பு…
இனியதொரு நாளில் என் இடக் கையை இறுகப் பற்றிய இதயம்
உனது பெயர்…
எம் மண்ணின் பெருமை
தேசத்தின் கிளவி…
வீரத்தின் பதம்…
இப்பெண்மையின் பெருமதிப்பு…
நான் ஆடிய சிறுபிள்ளை விளையாட்டு…
உனது பெயர்…
என் மகவின் முதலெழுத்து…

எழுத்துக்கள் என் வசம்
*****************************
எழுத்துக்கள் இப்போது என் வசம்…
ஓய்வில்லாது ஓட விடுகிறேன் எழுத்துக்களை
எனது பால்யம் தேடி பொம்மைகளை அணைக்கிறது…
இலைகள் பறித்தும் பூக்கள் கோர்த்தும்
விளையாடுகிறது…
மரக்கன்றுகளில் கூடு அமைக்கிறது…
மாமரங்களில் ஊஞ்சல் கட்டி
தூக்கணாங்குருவியாகத் தொங்குகிறது…
ஆண் பப்பாளிகளின் பூக்கள் காய்க்குமென்று காத்திருக்கிறது…
மெயின் ரோடுகளை கடக்க இயலாமல் தவித்திருக்கிறது…
மிதிவண்டி பழக இடமில்லாமல்
சிரமப்படுகிறது…
ஆற்று மணலை அள்ளி விளையாடத் துடிக்கிறது…
அண்ணனுக்கொன்றும் எனக்கொன்றுமாய் பகிர்ந்தளிக்கப்பட்ட வீட்டு மாடங்களில் ஒளித்து வைத்த சிலேட்டுக் குச்சிகளைத் துழாவுகிறது…
பேனாக்களுக்காய்ச் சண்டையிடுகிறது…
அண்டை வீட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சக்திமான் தேடி ஓடுகிறது…
அவ்வப்போது தோழி ப்ரியாவோடு கோபித்துக் கொள்கிறது…
பள்ளிப் பருவத் தோழிகளோடு புகைப்படமொன்றை எடுக்கிறது…
நினைவுகளை எழுதிப் பார்க்கப் பழகியிருக்கும் என் பேனா பிரசவிக்கும் எழுத்துக்கள் இப்போது என் வசம்.

Vasanthadheepan Kavithaigal 16 வசந்ததீபன் கவிதைகள் 16

வசந்ததீபன் கவிதைகள்

சாத்தியங்களைப் பின் தொடர்ந்து…
******************************************
விற்பது லாபத் தேட்டம்
வாங்குவது தேவைகளின் வெற்றிடம்
பொருள்வயின் பிழைப்பது
பெரும் பிழை
மரணத்திற்குப் பிறகு
மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
இறந்த என் நண்பனைப் போல
ஆங்கிலேயர் ஒருவர்
நானாகி இருக்கமாட்டேன்
நானை மறக்கமாட்டேன்
நானாக வாழமாட்டேன்
வளைந்து வளைந்து போகிறது மலைப்பாதை
நெளிந்து நெளிந்து
விரைகிறது பேருந்து
ஒடிந்து ஒடிந்து பயணிக்கிறேன் நான்
படித்துக் களித்து உறங்குவதற்கல்ல
வெடித்து கிளர்ந்து உக்கிரமாவதற்கே
கலை கவிதை எழுத்து எல்லாம்
மீதி சில்லறை வாங்கும் நான் அற்பம்
கொடுக்கத் தயங்கும் நீ மேன்மை
சல்லிக்காசானாலும் என்னுடமை ஏய்க்க அனுமதியேன்
பறக்கும் மனது
தவக்கும் உடல்
ஊரோ ரெம்ப தூரம்
எனக்கும் உனக்குமான இடைவெளி குறுகியது
யாராலும எதாலும் அதனை நிரப்பமுடியாது
நானும் நீயும் வேண்டுமானால் வார்த்தைகளால் இல்லாது செய்யலாம்.

மூடுதிரை
*************
எழுதும் மெளனத்துள்
பிரளய சப்தம்
திணறுகிறது
விடுபட
புல்லாங்குழல் ஏந்தியவன்
மனதில் பூந்தோட்டம்
மூங்கில் காட்டின்
மரண ஓலம் காற்றில்
மெளனமாய் இருக்கிறீர்களே !
பிணங்களா நீங்கள் ?
உயிர் உள்ளதென்று
சப்தமிடுங்கள் உரத்து
உழுதவனுக்கு மிச்சமாய்
பட்டினியும் பசியும்
உழைத்தவனுக்கு மீதியாய்
நோயும் நொம்பலமும்
சூடும் சுரணையும் ஆறிப்போச்சு
கொதிப்பும் ஆவேசமும் தணிஞ்சு போச்சு
சீக்கிரம் போயி முன்னால க்யூல நிக்கணும்
இசையும் கவிதையும் பணத்தை விளைவிக்கின்றன
கதையும் நாடகமும் காசுகளைத் தருவிக்கின்றன
நெல்லோ? புல்லோ?
மாடுகள் மேய்கின்றன
மது நெடியில் கவியரசர்கள் பிறந்தனர்
கஞ்சாப்புகையில் மகாகவிகள் உதயமாயினர்
வேர்வை வாசத்தில் மனிதக்கலைஞர்கள் உதித்தெழுந்தனர்.

Pangai Thamizhanin Kavithaigal 7 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 7

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

‘மாடுகளுக்குப் புல்லே போதும்’
*************************************
இந்த தேசந்தானே வேண்டும்?
எடுத்துக்கொள் தெய்வமே!
இந்த நாட்டின்
ஆட்சிதானே வேண்டும்?
நடத்திக்கொள் சாமி!

என்ன நினைக்கின்றீரோ
அந்த
வண்ணம் பூசிக்கொள்ளும் சாமி !

அடியேனின்
சிறிய விண்ணப்பம்
சாமி…..

ஏர் ஓட்ட மாட்டேன்
மூட்டை சுமக்க மாட்டேன்
சேற்றில் இறங்க மாட்டேன்
லாரி ஓட்ட மாட்டேன்
ஆடு மாடு வளர்க்க மாட்டேன்
மண் சுமக்க மாட்டேன்
குப்பைகள் அகற்ற மாட்டேன்
மொத்தத்தில்
ரத்தமோ வியர்வையோ
சிந்த மாட்டேன்….

நெய் மணக்க
சோறு போடு சாமி….
போதும்!

அதை
மந்திரத்தால்
கொடுப்பாயோ;
தந்திரத்தால்
கொடுப்பாயோ;

வாயால்
வடைசுட்டு விற்பாயோ;
மகா சக்தி கொண்ட
மயிர் வளர்த்துத் திரியும்
மகான்கள் மூலம்
வரவழைப்பாயோ….

அந்தக் கதை
எனக்கு ஏன் சாமி!
ஆண்டிக்கு
அம்பாரக் கணக்கு!

மாடுகளுக்குப்
புல் போதும் சாமி!
போதும்!

நீயே… (க)விதை!
*********************
கவிதையே…
உனக்கான நாளாம் இது!
எழுந்திரு;
போ…
ஓடு…
கவிஞர் உள்ளமெல்லாம்
ஊற்றுப் பெருக்கெடு!

கயமைகளை
கண்டிக்கச்சொல்;
கனவுகளை
காணச்சொல்;

கண்ணீரைத்
துடைக்கச்சொல்;
நம்பிக்கை ஆயுதத்தை
கொடுக்கச்சொல்;

பெண்மையை
போற்றச்சொல்;
வாய்மையை
வளர்க்கச்சொல்;

வறுமைக்கு
காரணம் தேடச்சொல்;
சமய வெறியைச்
சாடச்சொல்;

சாதியை
ஓடச்சொல்;
கல்வியை
கற்கச்சொல்;

கறைகளை
அகற்றச்சொல்;
கர்விகளை
அடக்கச்சொல்;

காதலை
வளர்க்கச் சொல்;
உன்னை
எழுதி…

ஓங்கு புகழ்
அடையச்சொல்;
கவிஞனக்கு
நீ அடையாளம்;
உனக்கு
கவிஞன் அடையாளம்!

காலத்தை மீறிக் கனவு காணும்
கவிஞர்களை ஈன்றெடுக்க
புதிய கருப்பையைப்
பொருத்திக் கொள்.

**************
மந்திரத்தால்
மாங்காயை
விழவைப்பதற்காகவே
ஒரு தேசம் வேண்டுமாம்!

அடேய்….
மாங்காய்
வேண்டுமென்றால்
மரத்தை நட வேண்டும்!

மரம் நடுவதற்கு
மனிதன் வேண்டும்!
மந்திரம் சொல்வதற்கு
மாயாவி போதும்!

இப்போது சொல்;
இந்த தேசத்திற்கு
மரத்திலிருந்து
மாங்காய் வேண்டுமா?

மந்திரத்தால்
மாங்காய் வேண்டுமா?
மாயாவி வேண்டுமா?
மனிதன் வேண்டுமா?

மரு உடலியங்கியல் பாலா

நாலிரண்டு பாதங்கள் ! கவிதை – மரு உடலியங்கியல் பாலா

செவ்வந்தி பூப்போல்
செவ்விய பாதங்கள்!
செந்தளிர் விரல்கள்
சத்தமின்றி தூளியில்!
சுத்தமான இதயமுடன்!!

சத்தான தாய்ப்பால்
நித்தம் நித்தம் உண்டு!
நித்திரை நிறை கொண்டு!
எத்தனை நாளைக்கு….
இத்தனை சுகமுண்டு?!!

மூன்றாவது அகவையிலே
மூக்கொழுக பள்ளிசென்று!
மூட்டை சுமக்கும் கூலி போல
மும்முரமாய் கல்விகற்று
முழுப்பரிட்சை பல எழுதி!!

கல்லூரி கலாச்சாலை
கட்டுகட்டாய் புத்தகங்கள்!
கடைசியில் ‘பட்ட’மொன்றை
கையில் ஏந்தி,
கவலையுடன் வேலைதேடி!!

கிடைத்த வேலையில்
கிடந்து உழன்று!
கல்ஃப் நாடு, யுஸ் என
கண்ட கண்ட நாட்டுக்கு
கடல்தாண்டி சென்று!

கல்யாணம் செய்துகொண்டு
கட்டியவளி(னி)டம் சண்டையிட்டு காது கருக வசவு கேட்டு!
கடமைக்கு பிள்ளை பெற்று
கல்விகொடுத்து கரைசேர்த்து!

அப்பாடா! போதுமென
அறுபதுகளில் அலைக்கழிந்து!
ஆலையிட்ட கரும்புபோல்
அடிப்பாதங்கள் கசங்கிதுவண்டு,
ஆடிப்போய் கோலூன்றி!

ஆண்டவன் அடிசேர!
ஆசையுடன் காத்திருந்து,…
அடிகள் “நாலிரண்டு” சுமந்துசென்று
அடக்கம் செய்யும் அந்த நாள்வரை!
அடிகளே.. உமக்கேது ஓய்வு?

Raju Arokiyasamy Kavithaigal ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

சலனமற்ற நதியாய்
ஓடப் பார்க்கிறேன்
நான் வேண்டி விரும்பாமலே
சேரும் சுயநல சாக்கடைகள்

எல்லாவற்றையும் மீறிய
ஆத்ம திருப்தி
அந்தப் புள்ளியில்
செல்லாமல் போகும் பணம்

பொய்மையில் சிக்கியழியும்
நீர்க்குமிழியல்ல நான்
உண்மையோடு உருண்டாலும்
மணலாகி மகிழும் பாறை

கீறி ஆற்றுகிறேன்
ஆறாப் புண்
நீ கிழித்த
என்மனக் கடிதங்கள்

உன் ஞாபகங்களைத்
துடைத்து எறிகிறேன்
அழுக்கு நீரில்
ஆயிரம் செந்தாமரைகள்