paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதைpaangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

*கடவுளுக்கு முன் அனைவரும் சமம்*

                                         ••••••••••••••••••••••••••••••••

சேரிகளில்
வாழ்ந்து மறைகின்றவர்க்கு
சொர்க்கத்திலோ நரகத்திலோ
இடம் கிடைக்காது;

ஏனெனில்,அங்கேயும்
இங்கு வாழ்ந்து,
சாதி மதங்களை
கடை பிடித்தோர்தான் இருப்பர்!
அவர்கள்
சேரிகளில் வாழ்ந்தவரை
சேர்த்துக் கொள்ளவே
மாட்டார்களென
கடவுளுக்குத் தெரியும்!
அதனால்
அங்கேயும்
சேரிகளை நிர்மாணித்திருப்பார்
கடவுள்!
சாதி சமயங்களை
கண்டிப்பாக பாதுகாப்பார்!
அவரிடம்…..
பேதங்கள் ஏதும் இல்லை;
அவருக்கு….
மண்ணுலகமும் ,
விண்ணுலகமும் ஒன்றுதான்!
One thought on “பாங்கைத் தமிழன் கவிதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *