முகநூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை வரிகளை பகிர்ந்திருந்தார். அவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறேன். இவர் ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். ‘anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளை இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன.
*****************
நாங்கள் நாகரீகத்திற்கு மாற
அவர்கள் காத்திருந்தார்கள்.
நாங்களோ
அவர்கள் மனிதர்களாக காத்திருந்தோம்.

[They are waiting for us to become civilised,
and we, for them to become human.]
——————————
ஆதிவாசி கிராமத்தின்
ஊடாக செல்லும் கவிதையில்
ஆற்றில் குளிக்கும் ஆதிவாசிப் பெண்ணின்
வெற்றுடம்பையோ
அல்லது
ஒற்றை ஆடையில் உடல் மறைத்து
ஈரம் உலராமல் வீடு திரும்பும்
இளம்பெண்ணையோ
சிலர் தேடினர்.
கவிதையில் ஆதிவாசிப் பெண்களை
தேடுவதை நிறுத்துங்கள்.

[In poetry that passes through an Adivasi village,
some people search
for the bare back of an Adivasi woman bathing in a river.
Having draped her body in a single piece of cloth
a still-damp young girl returning home.

Stop searching for Adivasi girls in poetry. ]
——————————
ஒரு கோயிலோ மசூதியோ அல்லது தேவாலயமோ
இடிக்கப்படும்போது
ஆழப்பதிந்த உங்கள் வேதனையில்
காலம் காலமாக பழிவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால்
காடுகளே புனிதமாய் கொண்ட அவர்களுக்கு
அதன் அழிவிற்கு யார் பதில் சொல்வார்கள் ஐயா?

[When a temple, mosque or church is broken
your pain is so deep
that you keep avenging it for centuries.
But they for whom the forest is sacred
who will pay them back for the destruction, sir? ]
—————————
ஒரு நாள் கடவுள்
எனக்கு பழக்கமானார்.
இப்போது
புகையிலை சுவை போல
அவர் வழக்கமான பழக்கமானார்.

[One day, God
became a habit for me.
Now God was a matter of habit
Like tobacco was a matter of habit.]
—————————
எங்களுக்கு
அவர்களின் கடவுளை அளித்தனர்.
‘உங்கள் பாவங்களிலிருந்து
அவர் விடுவிப்பார்’ என்றனர்.
‘நாங்கள் என்ன பாவம் செய்தொம்?’
என்று திருப்பிக் கேட்டோம்.

[They offered us their god
said he will free you of sins,
we asked
what sins have we committed?]

– ரமணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *