அ.சீனிவாசன் கவிதை | a Tamil Poetry (Kavithai) by A . Srinivasan - ஆற்றை வரைவதை விடமணலை வரைவதுஎளிதாகத்தான் இருக்கிறதுஆனால்கவலையாக இருக்கிறது - https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதை

அ.சீனிவாசன் கவிதை   ஆற்றை வரைவதை விட மணலை வரைவது எளிதாகத்தான் இருக்கிறது ஆனால் கவலையாக இருக்கிறது. ஆற்றைக் கடப்பதை விட மணலைக் கடப்பது எளிதாகத்தான் இருக்கிறது ஆனால் கவலையாக இருக்கிறது. நீரை அள்ளுவதை விட மணலை அள்ளுவது இலாபகரமாகத்தான் இருக்கிறது…
kavithai: veendaam neerukku vilangu - kavignar.k.rasan prasad கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு - கவிஞர்.க.இராசன் பிரசாத்

கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு – கவிஞர்.க.இராசன் பிரசாத்

பூமிப்பந்தைப் பசுமையாக்க சாமி தந்த வரம் நதிகளெனும் வளம் மலைதனில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து முகத்துவாரம் அடைந்திடும் பயன்மிகு நதிநீர் கடல்தனில் வீணாய்க் கலப்பதைத் தடுத்து உழவர்க்கு பயந்தரவும்-மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் தேவைக்குக் கட்டினால் அனைவர்க்கும் பயனுண்டு வீம்புக்குக் கட்டினால் எதிர்ப்பவர்…
na.ka.thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள். மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா? இரண்டுமே நகரவில்லை அங்கேயே தானிருக்கிறது நகரும் அழகினைப் பார்த்து ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு அப்பால் நகர்ந்து போகின்றன மெல்ல மெல்ல நகர்ந்து, இன்னும் அப்பாவுக்கு அப்பால் நகர்ந்து எங்கோ?…
என்று ஓடும் ஆற்றில் அதன் நீர்? கவிதை – ஆதித் சக்திவேல்

என்று ஓடும் ஆற்றில் அதன் நீர்? கவிதை – ஆதித் சக்திவேல்




ஆனந்தக் களிப்போடு
அன்று துள்ளி ஓடிய ஆறு
ஆதிப் பச்சையில்
ஊர்கிறது இன்று

ஆறு என ஓடிய நீரில்
ஒரு சொட்டுக் கூட
ஆற்றுக்குச் சொந்தமில்லை
அனைவரும் அறிந்த உண்மை இது
தெரியாதது போல் நடிக்கின்றனர்
அனைவருமே

நீரில்லா ஆற்றில்
அறத்தோடு எல்லாம் மிதக்கின்றன
உயிரின்றி
நஞ்சு மட்டும் உயிருடன்

வானில் பறந்த கழுகின்
கண்களுக்குத் தெரிந்ததெல்லாம்
ஆற்றில் செத்து மிதந்த மீன்கள் தான்
வேகமாய் இறங்கியது கீழே
அதில் ஒன்றைக் கொத்திச் செல்ல

தன் கணக்கீட்டின் துல்லியத்தில்
சிறு பிழை நேர
மீனை இழந்த அதன்
பறக்க விரித்த சிறகுகள்
நனைந்தன நாற்றமெடுத்த நீரில்

மேலிருந்து சொட்டியது
சிறகிலிருந்த நீர்
பூமியில் இருந்தோர் முகத்தில்
நினைவுகளாக

ஏக்கப் பெருமூச்சுக்களாக
ஏமாற்றங்களாக
குற்ற உணர்வுகளாக மாறி

முதலில் துடைத்தனர்
பின் கழுவினர்
மனதை விட்டு அகல மறுத்தன
குற்ற உணர்வுகள்
பல முறை கழுவிய பின்னும்

வயல் வெளிகளில் விழுந்ததை
அப்பாவிப் பயிர்கள் உறிஞ்சின
மழை நீர் என எண்ணி
வெடித்து வெளிவரும் அவ்விஷம்
நாளைய வெள்ளாமையில்

ஆற்றை விற்று
சட்டைப் பை வழிய
நிரப்பிய பணத்தின் மீதும்
சொட்டியது அது
கொஞ்சம் அதிகமாகவே

நாற்றத்தில் ஊறியது பணம்
எக்கூச்சமும் இன்றி
கை மாற்றினர் அதை
ஊரே நாறியது
கைகள் பல அது மாற மாற
மூக்கே நாறியது இறுதியில்

பணமும் நாற்றமும்
போட்டியிடுகின்றன – அவர்களது
பணப் பெட்டியை நிரப்ப
கழிவுகள் பல
ஒரே நேரத்தில் ஆற்றை நிரப்ப
போட்டியிடுவதைப் போல்

“ஆற்றைக் காப்பாற்றுங்கள்” எனக் கதறியது
என் மீது விழுந்த ஒரு துளி

உலகை நேசிப்பவர் எவரும்
ஆற்றை நேசிக்காமல்
எப்படி இருந்திட முடியும்?

இரை கொண்டு வருமென
தாய்க் கழுகுக்குக் காத்திருக்கின்றன
குஞ்சுகள்
தம் கூட்டில்
நம்பிக்கையுடன்

ஆறும் நகர்கிறது
தன் நீர் தன்னுள் ஓடும்
என்றாவது ஒரு நாள் எனும் நம்பிக்கையுடன்

ஆதித் சக்திவேல் 

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




நதியின் மரணம்
*********************

அமைதியாக சலசலத்தோடும் நதியில்
விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும்
விதைகளையும் தூவினால் நாளாகும்போது
இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன.

ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது
கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே
அங்குமிங்குமாய் நகர்ந்து விளையாடி
அழகாகும் அதிசயம் அரங்கேற

ஒரேயொரு நெகிழியை தூரத்திலிருந்து
தூக்கியெறிவதை தொடங்கிவைத்த ஒருவனால்
பின்னொரு நாளில்
நதியே ஸ்தம்பித்துப் போகுமென
அறியாமல் வீசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
வீணாகிப் போனவையெல்லாம்

கட்டடங்களின் உயர வித்தியாசமெதுவுமின்றி
குப்பிகளிலிருந்து உடைத்தொழுகும்
சயனைடு திரவங்களாய்
இரகசியக்குழாய்களின் வழியே
சாக்கடைநீராகி யாருடைய சம்மதத்திற்கும்
நிற்காமல் நதியின் மொத்த ஆழத்திலும்
ஊடுருவி
நச்சாய் பரவிக்கொல்கிறது
நதியை
நதியை நம்பியிருந்த உயிர்களை

மீன்களும் மரங்களும் அவற்றை நட்ட மனிதரும்
மெல்ல மெல்ல மரணிப்பதைக் கண்டு
மண்ணில் இனியும் ஒடிஒளிய வேறெங்கும்
இடமில்லையென்று
வறண்டே மரணிக்கிறது நதியும்

மழை…..

தூறல்களாய் விழும்போதெல்லாம்
கரையோர மரங்களின்
வேருக்கும் தெரியாமல்
கண்ணீர்சிந்தி வறண்டநதியின் கால்தடமும்
அழுகிறது
மழைத்துளியைக் கடன்வாங்கி

நீச்சல் பழகிய நீரோடையில் நீளத்துக்கும்
தோண்டியெடுத்த மணல் குழிகளிலிருந்து
மீளத் தெரியாமல்
அடுத்தத் தலைமுறையும் விழுகிறது தாகத்தில்

அயிரைகள் துள்ளிவிளையாடிய நதியில்
அழுக்குமூட்டைகளும் நெகிழிக்
காகிதங்களுமே

காற்றின் போக்கில்
நகர்ந்து நதியை நாசமாக்க

கரைகளையும் விட்டுவைக்க மனமில்லா
ஆக்கிரமிப்புகள்
வழிமறித்த பாவங்களால் விடாதுகொட்டும்
அடைமழை நாளில் விழும்
துளிகளொவ்வொன்றையும் எதிர்பார்த்து
காத்திருக்கிறது…

ஊரோரம் ஓடிய நதியும்
ஊரைவிட்டு வெளியேற…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

மழையின் கண்ணீர்
***********************
பனை ஓலையில் போர்த்திய மாட்டுச்சாளையின்
ஒருமுனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்து ருசிக்கும் கரையான்களும்
கூரைக்குள் ரகசியமாய்க் குடித்தனமிருந்து தொல்லைதரும் எலிகளும்
கூரைவேய்ந்தவனின்
நிம்மதியைக் கெடுக்க

துருப்படிந்த கடப்பாறையும்
உழுதவயலிலிருந்த மண்ணை ஒட்டிவந்த கலப்பையும்
அதன் உச்சியில் மாட்டுவாசத்தை பூசிக்கிடக்கும் நுகத்தடியும்
ஒன்றுக்கொன்று அவரவர் கதையை பேசிக்கொள்ள

உழுதே தேய்ந்த உழவனைப் பற்றியெதுவும் பேசாததால்
உடைசல்களில் விழும் மழைத்துளிகள் கரையானையும் கலப்பையையும்
கண்ணீரால் கழுவி சிற்றாறாய் ஓடுகிறது மூத்திர வாய்க்காலில்….

ப(ரு)சித்த மாடு
******************
வறண்ட பூமியும் சுவாசித்திட
பழமாய்ப் பிளந்து கிடக்கும் மண்ணில்
பச்சையங்களை இழந்து நிற்கும்
மரங்களின் நிழல்களில் இளைப்பாறும்
பசுவொன்று சுற்றும் முற்றும் பார்வைகளால்
கொட்டகையில் பசியோடிருக்கும் பச்சிளங்கன்றின்
பசிபோக்கும் உலர்ந்த இலைகளைத் தேடியதில்

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காற்றின் வேகத்தில் வீசும் மண்புழுதியைத்தவிர எதுவுமேயில்லாமல்
முடிச்சினை அவிழ்த்து பங்காளியின் பயிரினில் மேய்ந்ததால்
மொட்டைப்பனையில் கட்டிய பசுவுக்குத் தண்டனை
சமரச உடன்பாட்டில் அபராதம் செலுத்திடும் முதலாளி வரும்வரை….

–கோவை ஆனந்தன்
குமாரபாளையம்
கிணத்துக்கடவு
919003677002

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்




சிந்தக் கண்ணீர் இன்றி
வறண்ட நொய்யல்
என் கவிதையில் – அதைச்
சிந்திக் கொண்டிருக்கிறது
சத்தமின்றி

கவிதையில்
எழுத முடியாச் சொற்கள்
என் கண்களும் முகமும் சிவக்கின்றன
தொண்டையை அடைக்கும்
விம்மலின் ஊடே

எழுதி முடித்த பின்
கூர்ந்து கவனித்தேன்
கசிகிறது ரத்தம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றிலிருந்தும்
சொட்டுச் சொட்டாய்

ஆற்றில் வேதிக் கழிவு கலப்போர்- தாயின்
சோற்றில் நஞ்சு கலப்போர்
நீரை உறிஞ்சி விற்போர்
தாய்ப் பாலைத் திருடி விற்போர்
ஆக்ரமித்து அதை நெருங்குவோர்
பெற்ற தாயின் கழுத்தை நெறுக்குவோர்
அடி மணலை அள்ளிச் செல்வோர்
அவளது உயிரையே உருவிச் செல்வோர்
இவரெல்லாம் முறை வைத்து
நொய்யலின் முதுகில் குத்தியதில்
நீரோடு கலந்து ஓடிய ரத்தம் – கவிதையின்
ஒவ்வொரு எழுத்திலும் வடிகிறது

மணலில் ஓடிய நொய்யல் – எங்கள்
மனதிலும் ஓடி – அன்று
சிந்து பாடிய அது – இன்று
நொந்து வாடியது
அன்னையை விற்றுப்
பணம் எண்ணும்
பிணங்களை எண்ணி எண்ணி

பயிருக்கு நீர் தந்த நொய்யல்
நம் உயிருக்கும் தந்த அதை
வரம்பு ஏதுமின்றிச்
சுரண்டிச் சூறையாடிய பின்
நரம்பு அறுந்த அந்த வீணையில்
ஈரம் இழந்த உயிரின் இதயம்
துயரைத் தானே மீட்டும் இனி

காலத்திடம் கேட்க
ஒன்று தான் உண்டு எனக்கு
மரமாக மாற்றி விடு என்னை
நொய்யலின் கரையில் நின்று
காக்கிறேன் கடைசி வரை அதை

அது முடியாது எனில்
நோய் இல் நதி – இன்று
பாயில் சுருண்ட அது
நோயில் விழ – அதைச்
சாவின் விளிம்பில் நிறுத்தியோரை

நீங்காச் சின்னமாய்
நீராய் ஓடிய கற்கண்டை
நினைவுச் சின்னமாக்கிய
நீசரை

காலத்துக்கும்
காணக் கிடைக்கா அமிர்த ஓட்டத்தை
காணக் காண
காணாமல் செய்தோரை
ஓடிக்கொண்டிருந்த
ஓவியத்தைத்
தீவைத்து எரித்தோரை

வணிகம் சார்ந்தோரை
மனிதம் சார்ந்தோராய்

நீரைக் கெடுக்கும் நாசகாரரை
மனிதராய்
மாற்றி விடு

சட்டம் செய்யப்படும் நாளிலேயே
அதன் விலையும் ஓட்டைகளும்
நிர்ணயம் செய்யப்படும் நாட்டிலே
வான் நோக்கிக் கதறும்
என் குரலில் நிறைந்திருக்கிறது
“எத்தனை கொலைகாரர்கள் இங்கே ….
என்னை அவர்களில் ஒருவன் ஆக்கிடாதே” எனும்
என் இயலாமையின் இறைஞ்சல்

ஆதித் சக்திவேல்
கோவை
8903671246

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




பறவை
**********

வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின்
நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின்
சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல

மனதிலிருந்து வடியும்
உணர்வுகளும் ஏக்கங்களும்
வார்த்தைகளாய் வடிந்தோட

நதியின் இருகரையில்
வளர்ந்திருந்த செடிகொடிகளில் மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் ரீங்காரமிட்டு
தேனெடுக்கும் வேளையில்
விரிந்த மொட்டுக்களிலிருந்து வெளிப்படும் நறுமணத்தில்
சிலநிமிடம் இளைப்பாறி

பல்லுயிர்க்கும் பசிபோக்கும்
கனியொன்று மலையிலிருந்து சீறிப் பாய்ந்தோடும் நதியில்
விழுந்து மிதக்க

ஓடும்நதியின் போக்கில் பயணித்த கனி
கையருகே வந்தடைய
சிறுஅலகால் கொத்தி சுவைத்ததும் வியந்துபோனது

நாவில்படும் துண்டுகள் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு சுவையில் இனிக்கும் ஒற்றைக் கனியினை
அடுத்தவேளைப்பசிக்கல்லாது கூடுகளில்
பசியோடு காத்திருக்கும்
சிறகுகள் முளைக்காத சிறுகுஞ்சுகளுக்காக
சுமந்துபோய்
வெயிலும் நிழலுமென
மாறிமாறி வந்துபோகும் மரக்கிளையில் அமர்ந்து
இரையோடு வந்திருப்பதாய்
சிறுஅலகில் ஒலியெழுப்பியது அந்தப்பறவை.

தாத்தா
*********
நாலுமணி சிற்றுந்தில் வந்திறங்கும் வானம்பாடிகளைக்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் நேரங்களில்
காலையில் விடுபட்ட கதைகள் மீண்டும்
வசப்படுத்திவிடுகின்றன பிஞ்சுஇதயங்களை

ஆள் நடமாட்டமேயில்லாத வீதியில்
வெளிச்சம்தெரியும் தூரம்வரைத் தேடுகிறது –
ஏதாவது அசைவுகளிருக்கின்றனவாவென்று
நடமாட்டம் எதுவுமில்லையென உறுதிப்படுத்தியவுடன்
பிஞ்சு நடைகளுடன் தளர்ந்த நடையும் தள்ளாடி
பூட்டியவாசல் திறந்து
ஒய்யாரமாய்ப் போய்
வர்ணங்கள்பூசிய சுவற்றினோரம் கிடந்த மரநாற்காலியில் அமர்கிறது
காலையிலிருந்து தனிமைச்சிறையில் அடைபட்ட முதிர்ந்ததேகம்

சீருடைகள் களைந்து மாற்று உடையணிந்த வானம்பாடிகள்
சிறகுகளசைத்து காற்றில்மிதந்து
பெருமரக்கிளையில் அமர்வதைப் போல்
தாத்தா என ஓடிவந்து கட்டிப்பிடிக்கும் பேரக்குழந்தைகளுடன்
-தன் இலையுதிர்கால நினைவுகளையும்
சின்னஞ்சிறு கதைகள்பேசியும்
இறுதியில் மழலைகளின் ஒப்பனையில்
மீண்டுமொருமுறை இளமைக்குத் திரும்பி பேரின்பத்தைக் கொண்டாடுகிறது

தாத்தாவின் மனதும் ஒரு குழந்தையாய்.

நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…

அவசரமாய் கேசத்தை
சரிசெய்து முகப்பசைகளைப்பூசி
ஒப்பனைகள் செய்து கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…

பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப் பொட்டுகளும்
விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…

எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும் –
மீதம் வைக்காமலும் காட்சிப் படுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்-நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில் இன்னொரு பிம்பத்தைப் பதிவுசெய்ய

இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…

கோவைஆனந்தன்
[email protected]
+919003677002
3/177,குமாரபாளையம்
கிணத்துக்கடவு
கோவை-தமிழ்நாடு 642109

மகேஷ் கவிதைகள்

மகேஷ் கவிதைகள்




ஆழம்!
**********
சிதறிய பாகங்களை
கிளறியபடி நகர்கிறது
கைவிடப்பட்ட
ஓர்
அநாதை நினைவு!

வனங்களை விழுங்கிய
பூங்காவினுள் கொதிக்கிறது
பாலைவன அனல்!

சிதைந்த சொற்களின் மீது
நடனமாடியவன்
வேடம் கலைக்கிறான்!

சொற்களைப் பதிந்து கொண்ட
உணர்வுகளில்
விழுகிறது
பெருங்கீறல்!

பல்வேறு வெளிகளில்
தயங்கி
வார்த்தைக்கு வலிக்காமல்
வரி கோர்த்தவனுக்கு
பரிசாகிறது
புதைகுழி!

அகன்றுவிட்ட நாட்களை
கோர்த்துக் கொள்கிறது
அகத்தேடல்!

நட்புக்கும் உறவுக்கும்
அவப்பெயரிட விரும்பாத
அஞ்ஞான உணர்வொன்று
அமிழ்ந்து கிடக்கிறது
மன மூலையில்!

கனவுகள்!
**************
ஓரங்கட்டப்பட்ட
இருக்கைகளில்
உறங்கிக்கொண்டன
ஓராயிரம் கனவுகள்!

காடு மலை
கடல் நதி
ஆகாயமெனக்கடந்து
நட்சத்திரங்களை
சமீபித்தபின்
கட்டப்பட்டன கைகள்!

பறவையின் இறகுகளைக்
துணைக்கழைத்துக்கொண்ட

வானத்தில்
பலியிடப்பட்டது
புலியின் வீரம்!

இறகுகளை இறுக்கிக்கட்டவும்
ஏதோ ஒரு
சமிக்ஞை மின்னல்
விரைகிறது!

கற்பனை தேசத்துக்
காவிய வெள்ளங்களை
அணைகட்டுகிறது அழுத்தம்!

கனவு கவிழ்தலின்
வீதி வியாபாரம்

விதியாய்க்களைகட்டுதல்
அமோகம்!

கரைகளை
உடைத்தெறிந்த விபரீதங்களில்
ஊசலாடும்
உயர் கனவுகள்!

இரவின்
அழகு தேசங்களில்
ஏற்றி வைத்த
கனவு தீபங்களை
அணைத்து விரையும்
பாழான பகல்கள்!

இன்னும்
நீள் வரிசை கட்டி
நின்று தவமிருக்கும்
நிறைவேற்றச்சொல்லிக்
கெஞ்சும்
அழியாக்கனவுகள்!

உணர்வெனும் பறவை!
*****************************
சிறகொடிந்த பறவையான
உணர்வொன்று
உடைந்து விழுந்து
அழுகிறது!

அம்பெய்த வேடன்
அடுத்த குறிக்கு
ஆயத்தமாகிறான்!

சந்தோஷ மயக்கங்களில்
வானம் தொட்ட உணர்வு
அடிபட்டு
அழுந்தித்தவிக்கிறது!

மீட்பர்
யாரேனும்
உணர்வு காக்கலாம்
எனக்கணிக்கவியலாது!

எப்படியோ மீளும்
உணர்வுப் பறவை
எனும் நேர்மறைகள்
பலிக்கலாம்!

ஆயின்
கடுஞ்சொல் புனைந்து
எய்த வேடன் வீழ்ந்ததாய்
நினைவடுக்கங்களில்

பதிவேடுகள்
ஏதும்
அகப்படவில்லை!

எங்கேனும்
சொற்கள் படபடக்கும்
ஓர்
நாவரசனை வினவலாம்!

– மகேஷ்

பயணம் கவிதை – ரவி வெங்கடேசன்

பயணம் கவிதை – ரவி வெங்கடேசன்




மாய நதியின் ஈர அலையில்
தங்கப்படகொன்று தன்னந்தனியாய்
ஆழ்கடலின் சங்குகளை சேகரிக்க
நிலவின் கங்குகளில் குளிர் காய்ந்தது
துடுப்பு

இலட்சியம் இல்லா பறவைகளுக்குத்
தேடல் குறைவதில்லை
எதைத் தேடிச் சென்று எங்கு தொலைந்தாய் மனிதா
சிதை நாடி வரும் முன்னே – உன் கதை அறிவாய்

ஒற்றையடிப் பாதையின் நீண்ட பாதத் தடங்கள்
மிக நீண்ட தேடல் கொண்டவை

அவற்றின் கதகதப்பை உணரும் பாதங்களுக்கு

அவை ஆகாய வீதியின் கம்பளங்கள்

பாழடைந்த மனங்கள்
பொதுவெளியில் புது ஒளி பெறும்

ரகசியம் உடைத்திடும் இளங்காற்றில்
பேரண்ட உண்மைகள் வெளிவரும்

அறிமுகம் இல்லாத சிறகுகளில்
மனம் பற்றி கொண்டு போக
அரவமற்ற வனமாக வாழ்க்கை
அழைத்துச் செல்லும் தூரம் வரை செல்ல
பயணம் அங்கே தொடங்குகிறது

– ரவி வெங்கடேசன்
9962741696
[email protected]