மாய நதியின் ஈர அலையில்
தங்கப்படகொன்று தன்னந்தனியாய்
ஆழ்கடலின் சங்குகளை சேகரிக்க
நிலவின் கங்குகளில் குளிர் காய்ந்தது
துடுப்பு
இலட்சியம் இல்லா பறவைகளுக்குத்
தேடல் குறைவதில்லை
எதைத் தேடிச் சென்று எங்கு தொலைந்தாய் மனிதா
சிதை நாடி வரும் முன்னே – உன் கதை அறிவாய்
ஒற்றையடிப் பாதையின் நீண்ட பாதத் தடங்கள்
மிக நீண்ட தேடல் கொண்டவை
அவற்றின் கதகதப்பை உணரும் பாதங்களுக்கு
அவை ஆகாய வீதியின் கம்பளங்கள்
பாழடைந்த மனங்கள்
பொதுவெளியில் புது ஒளி பெறும்
ரகசியம் உடைத்திடும் இளங்காற்றில்
பேரண்ட உண்மைகள் வெளிவரும்
அறிமுகம் இல்லாத சிறகுகளில்
மனம் பற்றி கொண்டு போக
அரவமற்ற வனமாக வாழ்க்கை
அழைத்துச் செல்லும் தூரம் வரை செல்ல
பயணம் அங்கே தொடங்குகிறது
– ரவி வெங்கடேசன்
9962741696
ravivenkatesan2022@gmail.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

