Thanges Poems 33 தங்கேஸ் கவிதைகள் 33

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
படபடக்கும் வெள்ளைத் தாள்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்குக்
கொள்ளை அழகு

விரல் தீண்டும் இந்தச் சிறு கணத்திற்காகவா
இத்தனை காலங்கள் காத்திருந்தாய்?

ஆனாலும் உன்னை ஆதி அந்தமாய்
தழுவும் போது நான் சொல்வேன்
நின்னினும் என் தவம் பெரிதே கந்தர்வா!

கல்லாய்ச் சமைந்திருந்தவனை
உயிர்ப்பித்தது
ஒரு மாசற்ற சுவாசம் எனில்
அந்த ஒரே ஒரு மாசற்ற சுவாசத்திற்காக
உன் பெயரைச் சொல்லிச்ள சொல்லியே
கல்லைத் திரவாகமாய்க் கரைத்தவள் நான்

கவிதை 2
அந்த நதி இன்னும் ஓடிக்கொண்டே தானிருக்கிறது மனதில்
மனம் பிறழ்ந்த பொழுதொன்று
அதன் மீது குப்புற கவிழ்ந்து கிடக்கிறது

சாரமற்ற நிலவும்
கோலமாவைப் போல
பொடிப்பொடிப்யாக
அதன் மீது
தன்னைத் தூவிக் கொண்டிருக்கிறது

நீ ஒரு சொல்லை உதிர்க்கிறாய்
ஓசையின் இனிமையில்
அர்த்தத்தைத் தவற விடுகிறேன்
தவறவிடுவதே நம் இயல்பானதை எண்ணி
நீ ஆழமான புன்னகையைச் சிந்துகிறாய்

வழியைத் தவறவிட்டு
தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த
கொத்துவெண் நாரைக் கூட்டமொன்று
கூடடையாத அந்தச் சொல்லை
அலகுகளில் கல்விப் போகிறது!

Katril Payanikkum Uthir ilai Poem By Vasanthadheepan வசந்ததீபனின் காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை

காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்




காற்றில் பயணிக்கும் உதிர்இலை
****************************************
(1)
என் பாதையில் போகிறேன்
உன் இதயத்தைச் சுமந்து
மலைச் சரிவுகளில்
நெல்லிக்காய் மூடைகளை
ஏற்றிய கழுதையாய்…
சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்
கிணற்றில் தவறி விழுந்த
தங்க நாணயமாய் கிடக்கிறது
உன் வாலிபம்
என் தேடலுக்கு சிக்காமல்…
கூழாங்கற்கள் பாடும் பாடல்களில்
நதியின் மரணம் குறித்த
அவலச்சுவை நிரம்பிய ஏக்கங்கள்..
நத்தை ஓடுகளை உருட்டி உருட்டி
பசியைப் போக்க
முயல்கிறது சிறகு கிழிந்த காக்கை..
வளையல் சத்தம் போல
தென்னஞ் சோகைகள்
காற்றில் மோதி ஒலிக்கின்றன..
உலர்ந்த உயிரை
எந் நொடி வரை
பொடியாமல் பாதுகாத்து வைப்பேன்
நானும் காலத்திடமிருந்து ?

(2)
உன் விழிக் கணைகளால்
தாக்குண்டு
வீழ்ந்து கிடக்கிறேன்
என் திரேகம்
தீயூட்டப்பட்ட சுள்ளியாய்
சடசடக்கிறது
என் மனம்
புதைசேறில் சிக்குண்டதாய்
பரிதவிக்கிறது
துளிக் காதலை
என் இதழ்க் காட்டில்
தெளித்து விடு
வாழ்வின் குளிர்மையின் நாவுகள்
என்னைத் தீண்டட்டும்
மெளனமாய் ராகத்தை மீட்டாதே
என் ஆன்மாவின் தந்திகள்
படபடவென்று அதிர்கின்றன
நிழல் தா
நிகழ் கரைகின்றது.

(3)
குறுவாளின் நுனியில்
துளிர்க்கும் உதிரம் சொட்ட
ஊராரின் பரிகசிப்பின் சொற்கள்
எள்ளலோடு அலைகின்றன
நிர்வாணியைப் போல
என்னை நிராதரவாய்ப் பார்க்க..
கண்ணீரின் ஊற்றண்டையில்
தாகமாய் அமரும்
அந்தப் பறவையின் பெயர்
ஒருவரும் அறியமாட்டார்கள்
அதற்கு மனித முகமிருக்கிறது
அம் முகம் என் முகமென
நீ அறிவாயா ?
இறக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன
பலியாட்டின் கண்களைப்போல
மெளனமாய் உறைந்திருக்கும்
என் கணம்
அறுந்து நொடியிழையில்
தொடுக்கிக் கொண்டிருக்கிற
குடை ராட்டினமாய் நானும்!
நீயோ பாராது போகிறாயே ?

Vasanthadheepan Poems 15 வசந்ததீபன் கவிதைகள் 15

வசந்ததீபன் கவிதைகள்




(1) நதிச் சங்கமம்
**********************
உன் விழிகள் என் திசைகாட்டிகள்
உன் இதழ்கள் என் நீர்த்துறைகள்
உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன்
உனக்குப் பரிசளிக்க வேண்டும்
உலகம் கண்டிராத
அற்புதமான பொருள்
ஒருவராலும் தரமுடியாத என் இதயம்
முத்தமிட வந்தேன்
முட்கள் சூழ நிற்கிறாய்
மனமொடிந்து திரும்புகிறேன்
உன் உடலுக்குள் ஒரு கடல்
மீன்கள் ஆயிரம் துள்ளுகின்றன
கண்ணாடிக் குடுவைக்குள் நீ
ராகங்கள் பெருகும் தடாகம்
சந்தங்கள் கமழும் பூந்தோட்டம்
மனம் எனும் மாய இசைக்கருவி
கள்ளிப்பழ உதடுகள்
கனிந்து சிவந்தன
கண்கள் துள்ளிக் குதித்தன
காதல் வெள்ளம் பிரவாகமெடுத்தது
மழைச்சாலையில் யாரும் இல்லை
காற்று ஓலமிட்டு ஓடுகிறது
இறந்தபடி இணை பிரிந்த பறவை
சிரிப்பால் எனக்குத் தீ மூட்டினாள்
வெந்து கொண்டிருக்கிறது
என் இதயம்
பசியாறப் பார்க்கிறது கனவு.

(2) மரிக்கும் பறவையின் குரல்
*************************************
சுழித்தோடும் உன் புன்னகை
நெளிந்தாடும் உன் புருவங்கள்
சுழலுள் சிக்கிய துரும்பானேன் நான்
ஆறப்போடு
ஊறப்போடு
அப்படியே தூக்கித் தூரப்போடு
படிக்கிறேன்
திரும்பத் திரும்பப் படிக்கிறேன்
விளங்க முடியாத கவிதை வாழ்க்கை
நிழல் தரும் மரங்களில் இலைகளில்லை
அழகு மிளிரும் செடிகளில் பூக்களில்லை
உதிர்காலத்தில் உழல்கிறது கனவிலான வாழ்வு
ஒரு மிடறு குடித்தான்
வேதனையின் காரணிகள் நிழலாடின
அடுத்த மிடறு
அவனைக் குடித்துவிட்டது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் செய்த தோண்டி கூத்தாடிக் கூத்தாடி பட்டென்று உடைந்தாண்டி
நீ வந்த போது நான் இல்லை
நான் வந்த போது நீ இல்லை
நமது காலடித்தடங்கள் மட்டுமாவது சந்தித்திருக்கலாம்
உக்கிரமான கோபம்
கனவுகளை எரிக்கிறது
நாமெல்லாம் மெளனமாகத் தான் வாழ்கிறோம்.

Mazhai Poem By Suryanila சூர்யநிலாவின் மழை கவிதை

மழை கவிதை – சூர்யநிலா




இந்த நதிகளுத்தான் எத்தனை கோபம்
பெய்த மழையெல்லாம் தன் மீதே
பொழிவதாக.
அது
ஆவேசத்தில் உருண்டு, மிரண்டு
பெரும் பாறைகளில் மோதிக் கொண்டு
உடைந்துப் போகிறது.
மழை,
நதிகளுக்காக பெய்வதில்லை.
சாக்கடைகளில் விழவும்
அவதானிப்பதில்லை.
அது எல்லோருக்குமாக பெய்கிறது.
நிலங்களை தழுவிப் பயிராகிறது.
மரங்களை புணர்ந்து கனியாகிறது
மானிடத்தில் நுழைந்து உயிர் நீராகிறது.
மழை,
தூய்மையானது
மண்ணில் விழுந்துதான்
அது அழுக்காகிப் போகிறது
மழை,
எல்லோருக்குமானது
அதை அவரவர் சுயத்தில்
மாற்றிக் கொண்டு
வைகிறார்கள்..
நொய்கிறார்கள்..
கொண்டாடுகிறார்கள்..
மழை,
எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் பொழியத் தொடங்குகிறது.
மழைக்கு,
எல்லாம் ஒன்றுதான்

Short Poems by Vasanthadheepan வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள் – வசந்ததீபன்




குறுங்கவிதைகள்
_________________________
ஆகாயத்தில் மேகங்களில்லை
நெருப்பு கொட்டியது
நிலமெல்லாம் ரத்தம்
விமானங்கள் மறையத் தொடங்கின.
🦀
நதியை வரைந்தேன்
மீன்கள் துள்ளின
பறவைகள் பறந்தன
மணல் வண்டிகள் வரத் தொடங்கின.
🦀
கோவணத்தையும் இழந்து
சாலைகளில்
உலகத்திற்கு உணவூட்டிய
கடவுள்கள்.
🦀
நட்சத்திரங்களைப்
பார்த்தபடி
ஏக்கத்துடன் கழிகிறது
கண்ணீரில் நனைந்த நிகழ்காலம்.
🦀
தேவதைகள் சிறகுகளுடன் வருவார்கள்
அற்புதங்களை நாளும் நிகழ்த்துவார்கள்
குழந்தைகளின் கனவுகள் விதைப்புக்காலம்.
🦀
ஓநாயின் நாக்கில் பசி ஊறிச் சொட்டுகிறது
மரங்கள் கூட அசையாமல் நிற்கின்றன
பிடரியிலுள்ள உண்ணியை தட்டிவிட
அது பெரு முயற்சியெடுக்கிறது.
🦀

ந(நி)தி எங்கே போகிறது? – டிகேன்டர் சிங் பன்வார் (தமிழில் இரா.இரமணன்)

ந(நி)தி எங்கே போகிறது? – டிகேன்டர் சிங் பன்வார் (தமிழில் இரா.இரமணன்)

பயிற்சி மையங்களின் நவராத்திரி              விழாக்காலம் என்றழைக்கப்படுகிற செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் பத்திரிக்கைகளில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நேரடி விநியோக நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறைந்திருந்தன. திடீரென தனிப்பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம்…