Short Poems by Vasanthadheepan வசந்ததீபனின் குறுங்கவிதைகள்




குறுங்கவிதைகள்
_________________________
ஆகாயத்தில் மேகங்களில்லை
நெருப்பு கொட்டியது
நிலமெல்லாம் ரத்தம்
விமானங்கள் மறையத் தொடங்கின.
🦀
நதியை வரைந்தேன்
மீன்கள் துள்ளின
பறவைகள் பறந்தன
மணல் வண்டிகள் வரத் தொடங்கின.
🦀
கோவணத்தையும் இழந்து
சாலைகளில்
உலகத்திற்கு உணவூட்டிய
கடவுள்கள்.
🦀
நட்சத்திரங்களைப்
பார்த்தபடி
ஏக்கத்துடன் கழிகிறது
கண்ணீரில் நனைந்த நிகழ்காலம்.
🦀
தேவதைகள் சிறகுகளுடன் வருவார்கள்
அற்புதங்களை நாளும் நிகழ்த்துவார்கள்
குழந்தைகளின் கனவுகள் விதைப்புக்காலம்.
🦀
ஓநாயின் நாக்கில் பசி ஊறிச் சொட்டுகிறது
மரங்கள் கூட அசையாமல் நிற்கின்றன
பிடரியிலுள்ள உண்ணியை தட்டிவிட
அது பெரு முயற்சியெடுக்கிறது.
🦀

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *