நூல் அறிமுகம்: மு.தனஞ்செழியனின் ”ஹைக்கூ என்றும் சொல்லலாம்” – ஜெயஸ்ரீ

நூல் அறிமுகம்: மு.தனஞ்செழியனின் ”ஹைக்கூ என்றும் சொல்லலாம்” – ஜெயஸ்ரீ




வணக்கம்,

“ஹைக்கூ என்றும் சொல்லலாம்” பேராசிரியர் கவிஞர் மு. தனஞ்செழியன் அவர்களின் முதல் ஹைக்கூ நூல்.

ஆங்கில பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் என்ற பன்முகத் தன்மை கொண்ட நபராக நண்பராக அறிமுகமான தனஞ்செழியன் தன்னுடைய முதல் நூலினை வெளியீட்டதில் மகிழ்ச்சி.

இதோ புத்தகத்தின் சில கவிதைகளை பகிர்கிறேன். மீதியை நீங்கள் வாசிக்க விட்டு விடுகிறேன்.

முதல் கவிதையே ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு

“சுலபமாக இறந்துவிட்டான்
சுடுகாட்டிற்குத்தான்
வழி கிடைக்கவில்லை”

இறப்பதில் இருக்கும் சுலபம் இறந்த பிறகும் போராட்டம் தொடரும் போல பேசாமல் வாழ்ந்தே விடுவோம் என்ற மெல்லிய புன்னகையுடன் அடுத்த கவிதையை வாசிக்க, அதே புன்னகையை தக்க வைத்த அடுத்த கவிதை.

“பிரசுரமாகாத
கவிதைத் தொகுப்பு
ரப் நோட்”

பள்ளிப்படிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இந்த வரிகளை படிக்கையில் மீண்டும் ரப் நோட்டை ஒரு முறை பார்ப்போமா என்றே தோன்றியது. பழைய இனிமையான நினைவுகளுடன் அடுத்த கவிதை தொடர்கிறது.

“தூக்கம் தொலையச்
சாய்ந்து நிமிர்கிறது
காவலாளியிடம் பிளாஸ்க்”

வழக்கமாக காவலாளிகள் நமக்காக தலை சாய்ந்து நிமிர்வார்கள் இங்கே ஒரு பிளாஸ்க் காவலாளியிடம் சாய்ந்து நிமிர்கிறது. நல்ல கற்பனை கவிஞருக்கு.

“பந்தியில் பேரலையாகக்
கவிழும் இலைகள்
நீந்தத் திணறும் பலகாரங்கள்”

அருமை! உணவுகள் வீணாவதை பொறுக்க முடியாத ஒரு மனம் அதை இவ்வளவு மென்மையாகவும் கவித்துவத்துடனும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

“கண்ணாடி சிறையில்
வாழ்வதெல்லாம்
மீன்களுக்குத் தண்டனை”

சுதந்திரமாக பறக்க வேண்டிய பறவைகளை கூண்டில் அடைப்பதும் விரிந்து பரந்த நீர்ப்பரப்பில் நீந்த வேண்டிய மீனை தொட்டியில் அடைத்து வீட்டிற்குள் வைப்பதும் தற்கால மனிதர்களுக்கு ஒரு பெருமிதம். ஆனால் அவைகளுக்கு தண்டனை என்பது உணர்த்தும் வரிகள்.

அதிக ஆழமில்லாத எளிமையான புரிதலையும் இன்பமாக வாசிப்பு அனுபவத்தையும் ஒரு மணி நேரத்தில் தந்துவிடுகிறது நூல். அறிமுக எழுத்தாளர் என்ற அடையாளத்தை சற்றும் காட்டிக் கொள்ளாத 100 ஹைக்கூ தொகுப்பு. மேன்மேலும் எழுத வாழ்த்துகள்.

நூல் : ஹைக்கூ என்றும் சொல்லலாம்
ஆசிரியர் : மு. தனஞ்செழியன்
வெளியீடு : நோஷன் பிரசுரம்
பக்கங்கள் : 36
விலை : ரூ.100
நூல் வாங்க விரும்புவோர்:
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

நன்றி.
ஜெயஸ்ரீ

Padaippum Thiranum Yerpu Kotpadum Book By Bharathichndran Bookreview By M Dhananchezhiyan நூல் விமர்சனம்: பாரதிசந்திரனின் படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் - மு தனஞ்செழியன்

நூல் விமர்சனம்: பாரதிசந்திரனின் படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – மு தனஞ்செழியன்




காலங்கள் தோறும் மனிதன் மறைந்திலும். அவன் அடையாளங்களின் ஊடாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். தமிழ் எழுத்துக்களை அடையாளமாகக் கொண்டு தமிழை உயிராகப் போற்றத் திகழ்ந்த தோழர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் படைப்புகளைப் பற்றிய ஆழமான திறனாய்வு கட்டுரை நூல்.

தமிழில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்களைப் பற்றிய சுந்தர ராமசாமி அவர்கள் பட்டியலிடும் போது கவிஞர் அபி அவர்களின் பெயரைக் குறிப்பிடுவார் இன்று இணைய தளங்களிலும் முகநூலிலும் எழுதிக்கொண்டிருக்கும் புதிய கவிஞர்களுக்கு நிச்சயம் அபி அவர்களைப் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால், காலத்தால் மறுக்கவே முடியாத கவிதைகளைத் தந்து விட்டுப் போனவர். கவிஞர் அபி அவர்களைப் பற்றித்தான் இந்த புத்தகத்தின் முதல் கட்டுரையே தொடங்குகிறது.
“எதிர் எதிர்
தன்னைத் தான் முட்டிக் கொண்டது
காற்று.”

அனுபவங்களை ஹைக்கூவாக கைமாற்றித் தந்திருப்பது கவிஞர் அபி அவர்களுடைய உடைய படைப்பு. தமிழின் மந்திர எழுத்தாளரான கவிஞர் ஆமீர்ஜான் அவர்களைப் பற்றிய கட்டுரை ஆழமாக நீண்டுகொண்டே செல்கிறது. தோழர் குட்டி ரேவதி தான் குறிப்பிடுவார் ‘கவிதைகளுக்கு இலக்கண வடிவம் கிடையாது அவை மொழிக் கருவி.’ என்று அதைப்போல ‘மழைப்பெண் -பழனி பாரதி’ அவர்கள் எழுதிய நூலைப் பற்றி அதன் உட் கூறுகளை அணுக்களாகப் பிளந்து காட்டுகிறார். கவிதையின் ரசனையை உணர்ந்து அதன் பங்களிப்பை மீட்டுக்கொண்டு வந்து கவிழ்ந்த மழை குடையில் சேமித்த மழைநீரை நமக்கெல்லாம் பருக தருகிறார்.
பழனி பாரதியின் கவிதை

“நீண்ட காலமாய்
எனக்குள் புதைந்தை
வைரம் ஆகிவிட்டது
உனக்கு
கொடுக்க முடியாமல்
போன அதே முத்தம்.”

“வரலாறு தெரியாமல் போகிறவர்கள் வேர்கள் அற்ற மரம் ஆகிறார்கள்” என்பார் மாயா ஏஞ்சலோ. அது அதுவே உண்மையும் கூட வரலாறு தெரியாத அவர்களிடம் நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள். அப்படித்தான் இங்கே பகுத்தறிவுக்கு எதிராக மூடநம்பிக்கை சமூகம் கட்டி உருவாக்கப்பட்டது. மனிதர்களின் சிந்தனைகளை மடைமாற்றச் செய்து மதமும், சாதியும் திணிக்கப்பட்டது. இந்தியா மிகப்பெரும் வரலாற்றுச் சுழற்சியைக் கொண்ட நாடு. மதங்களின் வரலாற்றை மக்கள் தெரிந்து கொண்டால் எந்த மதத்திற்குப் பின்னாலும் வாலாக நிற்க மாட்டார்கள்.

இந்தியாவில் உருவான மதமாக இருந்த பௌத்த மத வரலாற்றைப் பண்டிதர் அயோத்திதாசர் ‘அம்பிகையம்மன்’ வரலாற்று நூலில் சாட்சியங்களுடன் விவரிக்கிறார். அதைப் பற்றிய ஆழமான கட்டுரையும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இணைய இதழ்கள் இன்று இலக்கியங்களின் ஒரு முக்கிய பங்காக விட்டது அப்படியான அயலகத் தமிழர்களின் இணையதளங்களான tamil.do.am , blog.selva.us, பற்றியும் அதில் வெளியான கவிதைகளைப் பற்றியும் நமக்கு ரசனையுடன், விவரித்துக் காண்பிக்கிறார் எழுத்தாளர் பாரதி சந்திரன் அவர்கள். தமிழ் இலக்கியங்களின் பகலவர் என்று அறியப்பட்ட சாமி. பழனியப்பன் கவிதைகளையும். ரெ. இராமசாமி அவர்களின் எண்ணற்ற படைப்புகளையும் நெறிப்படக் கட்டுரையாக்கி இருக்கிறார்.

கலைமாமணி விருது பெற்ற உடுமலை நாராயணகவி பாடல்களைப் பற்றி அதன் மனித மேம்பாடு சிந்தனைகளையும், சமூக குறைபாடுகளையும் கவிஞரின் வழியே நமக்கு உணர்த்துகிறார். 1946 ஏப்ரல் சென்னை மாகாணத்தில் ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரசு அரசு எட்டு மாவட்டங்களில் மதுவிலக்கை பிரகடனப்படுத்தியது அதைப்பற்றி நாராயணகவி எழுதிய சமூகப் பாடலை வித்யாபதி படத்தில் வரும்.
“கள்ளு பீர் , சாராயம்
காம வகைகள் கெட்ட
கஞ்சா அபினிகளெல்லாம்
செடியொழிக்கப்
பிள்ளை குட்டிப் பெண்சாதி
வயிறார உண்ணப்
பெற்றதே சுதந்திரம்.”

நவீன கவிதைகளுக்குள் மட்டும் பயணிக்காமல். சங்க இலக்கியங்களிலிருந்தும், குமரகுருபரர், ஆதிசங்கரரின் வரலாறு உருவாக்கிய பண்பாட்டுக்கூறுகள், சிந்தனைகளையும் ஒரு பிணக்கூறு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

தமிழில் உருவான எண்ணற்ற அறியப்படாத படைப்புகளைப் பற்றியும், காப்பியங்களின் அறிவியல் கூறுகளைப் பற்றியும், சங்க இலக்கியங்களின் வேளாண்மை பற்றியும், ஒரு தமிழ் அறிவியல் ஏடாக “படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடு” நூலை கையில் ஏந்தலாம்.

நூல்: படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்
ஆசிரியர் : பாரதிசந்திரன் (முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன்)
ஆசிரியர் எண் : 92832 75782
பொருள் : ஆய்வுக் கட்டுரை
விலை : 180
பக்கங்கள் : 200
பதிப்பகம் : சிவகுரு பதிப்பகம்

Thelivu Paduthatha Sattam Poem M Dhananchezhiyan. தெளிவு படுத்தாத சட்டம் - மு தனஞ்செழியன்

தெளிவு படுத்தாத சட்டம் – மு தனஞ்செழியன்




அது ஒரு வினோத
பழக்கம் தான்
தினமும் குளிப்பது.

நிலக்கரி சுரங்கத்தைச்
சுற்றித் திடீரென
உருவாகும் மேடுகளைப் போல
அறையின் மூலையில்
குவிந்து கிடந்தன.

அதற்கெல்லாம் ஒரு எசமானி இருக்கிறாள்
இந்திய அரசியல் அடிப்படைச் சட்டத்தில் கூட
தெளிவு படுத்தாததைக்
கையில் எடுக்கிறாள்
வீட்டார் அனைவரும்
உள்ளாடையை
தனித் தனியாக அணிந்தாலும்
எல்லோர் உள்ளாடையையும்
அவள் மட்டும் துவைக்கிறாள்.

Vida Muyachi Vetri Tharum book in tamil translated by Sa Subbarao book review by M Dhananchezhiyan. நூல் விமர்சனம்: விடாமுயற்சி வெற்றி தரும் - தமிழில்: ச. சுப்பாராவ் - மு தனஞ்செழியன்

நூல் விமர்சனம்: விடாமுயற்சி வெற்றி தரும் – தமிழில்: ச. சுப்பாராவ் – மு தனஞ்செழியன்




தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு கொரோனா காலத்தில்  கட்டாய வீட்டுச் சிறையில் உதிர்த்து இருக்கும். குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு கதைகளை வாசிக்கும்போது நாமும் நம் பால்யத்திற்குத் திரும்பி விடும் பொருட்டு கதைகள் நகர்கிறது.

இந்த தொகுப்பில் வெவ்வேறு உலக மொழிகளில் எழுதப்பட்ட இருபத்தி ஏழு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இரு கஞ்சர்கள் ஹீப்ரூ மொழிக்கதை இரண்டு கஞ்சர்களின் கஞ்சத்தனத்தால் உணவு கூட உண்ணாமல் தண்ணீர் மட்டுமே குடித்து வாழும் கதை

கெட்டிக்காரத் தவளை ஜெர்மன் நாட்டுக் கதை நரிக்கும் தவளைக்கும்  வழக்கமான உரையாடலில் நரியை விட  தவளை தரமானது என்று நிரூபிக்கப்படுகிறது.

இளையவளும், அரக்கனும் – ஸ்காட்லாந்து நாட்டுக்கதை ராஜா இறந்த பிறகு ராணியையும் மூன்று குழந்தைகளும் குடும்பத்திலிருந்து விரட்டி அரக்கனிடம் இருந்து தப்பித்து வாழும் கதை குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கக்கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மகன்களை ஏமாற்றிய தந்தை – காஷ்மீரத்துக் கதை. இன்றைய குடும்பச் சூழலில் தந்தை மகன் உறவுகளில் சிதலம் ஏற்படுவதைக் குழந்தைகளுக்குக் கதையாக பதித்துள்ளது காஷ்மீரத்துக் கதை.

இன்னொரு காஷ்மீர் மொழி கதை தான் சூரியன் சந்திரன் காற்று விருந்துக்கு சென்ற கதை இதை ஏற்கனவே நான் எனது அம்மா சிறுவயதில் கூறியபோது கேட்டது. இப்பொழுதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, வேறு நாடுகளிலிருந்து கதைகள் மக்கள் வழியாக பயணித்து இருப்பதும். இதில், என் அம்மா சொன்ன அதே கதை மாற்றமில்லாமல் வந்திருப்பது என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வருடிச் சென்றது.

எல்லோரும் மொச்சை சாப்பிட்டு இருப்போம். ஆனால், மொச்சையின் மேலே இருக்கும் வெள்ளை முளைப்பகுதியை. மொச்சைக் போட்ட தையல் – ஜெர்மனி நாட்டுக் கதையில் நமக்கு மொழிபெயர்த்து விளங்க வைக்கிறார் எழுத்தாளர் சுப்பாராவ்.

பொதுவாக சிறார் கதைகள் இருக்கும் நண்பர்களின் ஜோடி சேருமணங்கள் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அதையேதான் குழந்தைகளும் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு ஜப்பானிய நாட்டுக் கதைதான் – புத்திசாலி குரங்கு கரடி நண்பனும். தன் முதலாளி தன்னை கசாப்புக்கு அனுப்ப போகிறார் என்று அறிந்த குரங்கு தன் கரடி நண்பனை வைத்து தந்திரமாக பிழைத்து கொள்கிறது.

புத்தகத்தின் தலைப்பாக வந்திருக்கும் விடாமுயற்சி வெற்றி தரும் குறுங்கதை அரேபிய மொழி கதையாகும். இதில் ‘கேட்பவனுக்குக் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற பழைய அரபு மொழியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதை நண்பர் ஒருவர் சோதித்துப் பார்க்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமைகிறது. குழந்தைகளுக்கும்  ஒரு செயலை தொடர்ந்து செய்யுமாறு நம்பிக்கையூட்டும் வகையில் கதை நகர்கிறது.

குழந்தைகள் விரும்பும் மாயாஜாலக் கதைகள் இல்லையே என நினைக்கும்போதே எனக்கு ஒரு கண் போனாலும் பௌத்த ஜாதகக் கதை வந்து நிற்கிறது. சங்கை வைத்துத் தான் வேண்டியதை நிறைவேற்றிக் கொள்பவனும் அதை அவனிடம் இருந்து பறிக்க நினைப்பவனுக்கு நிகழ்வும் துன்பமே கதையின் முடிவு.

இதில் வரக்கூடிய கதைகள் பெரும்பாலும் அண்ணன் தங்கைகளைப் பற்றியும், குடும்ப உறவுகளை பற்றியும், அதில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது பற்றியுமே, நகர்கிறது அதிலும் குறிப்பாகச் சீன தேசத்துக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.   

சிலி நாட்டுக் கதைகள் குறும்புத்தனம் செய்யும் குழந்தைகள் மன்னர் உடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன்னரைத் தோற்கடித்து விடுகிறாள்

நார்வே நாட்டுக் கதைகள் ‘யார் வேலை கடினம்’ என்கிற கணவன் – மனைவி பேதம் பற்றிய புரிதலைக் குழந்தைகளின் மனதில் ஒரு விட்டில் பூச்சி போல ஒளிரச் செய்கிறார் எழுத்தாளர்.

அமெரிக்கன் கதை – ‘கேன்டியின் மதிநுட்பம்’ படிக்கும் பொழுது கொஞ்சம் பயமாகவும் சிறார்களுக்கு எதற்கு ஒரு கொலை பற்றிய கதை என்கிற கேள்வியும் மனதில் குழந்தைகள் உலகத்தில் சூனியக் கிழவியும்,  அரக்கனும் இல்லாமல் போக மாட்டார்கள்.  அதே வரிசையில் அரக்கர்களை அடுத்து சூனியக் கிழவி வந்து நிற்கிறாள் ரஷ்யத் தேசத்து கதைகளில்.  

ஜெர்மனி தேசத்துக் கதை பனிரெண்டு சகோதரர்களும் டென்மார்க் சொத்துக்களைப் பணி ரோஜாவும் வரும் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையின் மீதான வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் கதையின் முடிவு நம்பிக்கை ஊட்டும் விதமாகவே முடிகிறது இந்த கதைகளில் இருக்கும் ஒற்றுமைகள் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் கதைகள் வெவ்வெரு நாட்டிற்கு இவரும் வரிகளின் வாயிலாகப் பயணிப்பதற்கு இந்த இரண்டு கதைகளும் ஒரு சாட்சியாக  இருக்கலாம்.

‘புத்திசாலி மரியா’ போர்ச்சுகல் நாட்டுக் கதை. ஒரு தவறை இழைத்துவிட்டு அதற்கு வருந்தும் போது. அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதை மரியா புரிந்து கொண்டு ஒரு பொம்மையை வைத்து நாடகம் செய்கிறாள். இதுவே குழந்தைகள் மீது கோபத்தையும் தவறுகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னான ஒரு நிதானத்தையும் பொறுமையையும் பற்றி உணர்த்தும் கதையாகும்.

ஜெர்மன் நாட்டுக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தைப் போற்றியும் மனைவிமார்களின் செயல்களை மட்டமாக நினைக்கும் கணவன்மார்களின் புத்தியைச் சம்மட்டியால் அடிக்கவும் செய்கிறது.

சீன தேசத்துக் கதை, ஸ்காட்லாந்து நாட்டுக் கதைகள் என உலக வரைபடத்தைக் குழந்தைகளுக்கான கதைகளின் வாயிலாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

நார்மண்டி நாட்டுக் கதை சிவப்பு, வெள்ளை, கறுப்பு  என்று நிறங்களின் மீது காதல் கொண்டேன் ஒரு மன்னர் மாய உலகில் அவரை ஏமாற்றி வாழும் அவருடைய சித்தி என்று  கதை போக்கக் குழந்தைகள் விரும்பும் வண்ணங்களால் நிரம்பியுள்ளது.

ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை குழந்தைகள் விரும்பும் மாய உலகின் வீரர்கள் நிகழ்த்தும் கதைகளாக நீள்கிறது.

பிரான்ஸ் தேசக் கதை மூன்று நாய்கள்  அண்ணன், தங்கை ஒற்றுமை பற்றியும் சொத்துக்களை சமபங்காக அண்ணன், தங்கை பிரித்துக் கொள்கிறார்கள்.

அயர்லாந்து நாட்டுக் கதை – சொந்தமாய்

ஒரு பனிக்கரடி  குழந்தைகள் உலகில் எப்போதும் யாரும் மறைந்து விடவே முடியாத அளவுக்கு வண்ணங்களாக ஆகும் ராஜகம்பளம் கற்பனையாகவும் இருக்கும் வீட்டில் தன்னுடன் இருக்கும் பொம்மைகளை வைத்து குழந்தைகள் அட்டவணையில் எவ்வாறெல்லாம் விளையாடுவார்கள் என்று எதார்த்த கற்பனை வாதத்தை அயர்லாந்து நாட்டுக் கதை மூலமாக நாம் அறிய முடிகிறது.

இத்தனை கதைகளின் மொழிபெயர்ப்பை பார்க்கும் போது வியப்பாகவும் மலைப்பாகவும் தான் இருக்கிறது.  பிறமொழிகளிலிருந்து கதைகளைக்  கொண்டு வருவது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு டைம் பாமின் சரியான வயரை கண்டு பிடித்து வெட்டுவது போன்ற பரபரப்பு நிறைந்த வேலை. பிறமொழிகளில் உள்ள கருத்தையும்  வருமொழியில் அடக்குவது சுலபமானதல்ல  இருந்தாலும். அதை சரியாகக் கருத்து  பிறழ்வு இல்லாமல் கொண்டு வந்த எழுத்தாளர் ச. சுப்பாராவ் அவர்களுக்கு அன்பும், மகிழ்ச்சியும்..

விடாமுயர்சி வெற்றி தரும் (உலகப் புகழ் பெற்ற சிறார் கதைகள்)
தமிழில் : ச. சுப்பாராவ் 
முதல் பதிப்பு : அக்டோபர்,  2021 
சித்திரங்கள் : ரோஹிணி   குமார் 
விலை 120/-
பக்கங்கள் : 128 
வெளியீடு :புக்ஸ் ஃபார் சில்ரன் பாரதி புத்தகாலயம் ஓர் அங்கம் 
7, இளங்கோ சாலை ,
தேனாம்பேட்டை, சென்னை – 600018.
தொலைபேசி: 044-24332424
புத்தகம் வாங்க: thamizhbooks.com
So says Manu poem by Savitribai phule in tamil translated by M Dhananchezhiyan சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது கவிதை தமிழில் மு தனஞ்செழியன்

சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது மொழிபெயர்ப்பு கவிதை – மு தனஞ்செழியன்



நிலத்தை உழுது
பயிரிடுவோர்களை
முட்டாள் என்கிறது மநு.
மத கட்டளைகள் மூலம்,
பார்பானுக்கு மனுஸ்மிருதி
சொல்கிறது,
“உங்கள் ஆற்றலை,
விவசாயத்தின் மீது
வீணாக்காதீர்கள்!”
“சூத்திரர்களாக பிறந்தவர்கள் அனைவரும்
முற்பிறவியல் செய்த பாவங்களுக்கு விலையாக
இப்பிறப்பில் உழவு செய்கிறார்கள்,”
இப்படியாக அசமத்துவம் கொண்ட சமூதாயத்தை
மனிதமற்ற சூழ்ச்சியால், வஞ்சக மனிதர்கள்
உருவாக்குகிறார்கள்.

So says Manu…
savitribai phule
“Dumb are they
who plough the land,
Dumb are the ones
who cultivate it”,
So says Manu.
Through religious diktats,
The Manusmriti to the Brahmin tells,
“Do not your energy, on agriculture, waste!”
“Those born as Shudras,
All these Shudras!,
Are paying in this life,
For the sins of their past lives”
Thus they create
A society based on inequality,
This being the inhuman ploy,
Of these cunning beings.