Subscribe

Thamizhbooks ad

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

தூரத்து தேசம்
என் பாதைகளுக்கு மட்டுமே தெரிகிற தேசத்திற்குப் பயணப்படுகிறேன்..
அது கற்களும் முற்களும் சுருட்டப்பட்ட
சிகப்பு கம்பளம்…
மலர்களும் மணங்களும் விரிக்க பழக்கமில்லை..
ஆங்காங்கே மைல்கற்கள்
 தடம் காட்டும் பாதகத்தியாய்..
போகிற தூரம் நிறைய உள்ளதை…
நாட்காட்டியும்  குறிப்பாகவே சொல்லித் தான் போகின்றன நேரம் கிடைக்கும் போதெல்லாம்…
இழந்த காலங்கள் அநேகம் என்பதையும் கடுமையான இந்த காலம் நினைவுப்படுத்தின..
நிறங்களும் அங்கங்கே
 வெள்ளை சிகப்பு பச்சை காரிருள்
 என பூசித் தீர்க்கிறது
முகங்கள் கூட சில குரூரங்களைக் காட்டி அச்சுறுத்தி மறைகிறது.
ஆயினும் பார்வையும் பாதமும் ஒரு நூலிழையை பிடித்தபடிக்கே கடிவாளங்களைக் கிழித்துக் கொண்டு கானல் தேசத்தின் பயணத்திற்கு ஆயுத்தமானது
சிலர் விரும்பியும்
பலர் விரும்பாமலும்…
**********************************************
புள்ளியிட்டாலே கோலமாகாது..
கோடுகள் போடும் சுழியாக
வட்டமடிக்கும் பாதையாக
சித்திரத்தின் விழியாக..
“அ”வனா போடும் வளைவாக
பிறக்கும் புள்ளிகள்…
துவக்கத்தில் கரிசனும்
கடுமையான விமர்சனமும்
வாங்கித் தின்னும்
நிறை தரிசனத்திற்காக..
*********************************************
உறங்குகிறேன் என நினைக்காதே..
என் விழிகள்..
உன் நிழலசைவை அவதானித்திருக்கும் அறிதுயிலதிலும்..
என் உள்ளம்  உன் பெயரை
 உச்சரித்திருக்கும் பேருறக்கத்திலும்..
என் சிந்தனை எப்போதும் உனையே சூடிக்கிடக்கும் அடர் தூக்கத்திலும்..
என் மொழியலையோ..
உன் இதழசைவை தனக்குள் வாசித்திருக்கும் ஆழ்நித்திரையிலும்..
எல்லாம் வல்ல என் உயிரானது..
உன் உயிருக்குள் கூடு பாய்ந்து
அரவணைத்திருக்கும் கண்ணயர்விலும்
உனை அடாது  தனக்குள் ஒளித்துக் காத்துக் கிடக்கும் மயக்கமருண்மையிலும்..
*******************************************
இயற்கைச் சீற்றம்
 அடிக்கொருமுறை ஆள் மாறாட்டம் செய்து வைக்கும் இந்த கடும்பொழுதின் மீது தான் காலத்தின் கோபம் அவ்வப்போது கொப்பளிக்கிறது..
சீற்றமாக…
 விதிமீறல்ளை ஒதுக்கி
இலக்கிற்கே இயல்பாகிறது
அன்றாடத்தில் திருகிய படிக்கே…..
து.பா.பரமேஸ்வரி
சென்னை

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here