காகத்திடம் ஏமாந்த நரி கதை
புத்தரின்
போதி மரத்தடியில்
வடை சுடும் பாட்டி
வடையை அலகால்
கொத்திக் கொண்டு
போதி மரக்கிளை மேல்
அமரும் காகம்
காகத்தைப் பொறுத்த வரை
அது திருடு அல்ல
காகம்
இன்றைய நவீன மனிதன் போல
மென்மையாய் சாப்பிடுகிறது
காகத்தைப் பாடல் பாடச் சொல்லியும்
நடனம் ஆடச் சொல்லியும்
வடை கீழே விழும்
என எதிர்பார்த்து ஏமாந்த
நரி
இன்றைய சந்தையில்
எதுவும் வாங்காமல் திரும்பும்
அப்பாவி மனிதனை
ஒத்தது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இன்றைய சந்தையில் எதுவும் வாங்காமல் திரும்பினால் அவன் அப்பாவியா என்ன ?