இருட்டான அறையில் ஏதோ காகிதத்தை கையில் வைத்து மடித்துக் கொண்டிருந்தான் விஷ்வா…

“என்ன…விஷ்வா…இங்க இருக்க என்ன பண்ற”ஒரு குரல்

நான்…இந்த பேப்பர்ல…கப்பல் செய்யப் போறேன்…

ஆனா…கப்பல் எப்படி செய்யனும்னு எனக்குத் தெரியல மதன்…

இவ்ளோ தானா…இரு…நான் சொல்லித்தாரேன்…

ம்ம்… ம்ம்…என்றே புன்னகைத்தான்…

இரண்டு நிமிடங்களில் கடகடவென செய்து முடித்தான் மதன்…

இந்தா…விஷ்வா…என்றே…கைகளைப் பிடித்து ஒப்படைத்தான்…காகிதக்கப்பலை

தன் விரலால் தடவிப்பார்த்தே…ரொம்ப அருமையா இருக்கு…

இரு…நானும் பண்றேன் என்றே…காகிதத்தை இப்படி…
அப்படி என மடித்து ஒரு உருவத்தைக்கொண்டு வந்தான் விஷ்வா…

இது எப்படி இருக்கு மதன்…

வாவ்… சூப்பர் விஷ்வா…உடனே பண்ணிட்ட…

ஆனா…ஆனா…இது நீ பண்ண மாதிரி இல்லையே…

நான் பண்ண மாதிரி இல்ல…அது விட பெஸ்ட் ஆ இருக்கு…

இதுக்கு பேர் கத்திக்கப்பல் விஷ்வா…கடல் பயணங்கள்ல பயன்படுத்துவாங்க…என்றே விஷ்வா வின் தோள் மேல் கை போட்டுக்கொண்டே வெளிச்சத்தை நோக்கி அழைத்துச்சென்றான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *