மழலையர் கதைப் பாடல் : நாணயமான விறகுவெட்டி-கே.என்.சுவாமிநாதன் mazhalayar kathai padalgal : naanayamana vioraguvetti - k.n.swaminathanமழலையர் கதைப் பாடல் : நாணயமான விறகுவெட்டி-கே.என்.சுவாமிநாதன் mazhalayar kathai padalgal : naanayamana vioraguvetti - k.n.swaminathan

சின்னான் என்றொரு விறகு வெட்டி

தினமும் போவான் காட்டிற்கு

ஆற்றின் கரையில் மரம் வெட்டி

விற்று வாழ்க்கை வாழ்ந்திருந்தான்

ஒரு நாள் மரம் வெட்டும் நேரத்தில்

பசியும் தூக்கமும் போட்டியிட

இரும்புக் கோடரி கை தவறி

விழுந்தது ஆற்றின் தண்ணீரில்

 

கோடரி இல்லையேல் விறகு இல்லை

உணவிற்கு வேறு வழி இல்லை

எப்படி வாழ்வது இனி என்று

துக்கித் தவித்தான் சின்னான்

 

கருணை கொண்ட வன தேவதை

தோன்றினாள் அவன் முன் கனிவோடு

சின்னான் நிலையைப் புரிந்து கொண்டு

குதித்தாள் ஆற்றில் பரிவோடு

 

வெள்ளி்க் கோடரி கொண்டு வந்தாள்

ஏற்றுக்கொள் இதை என்றாள்

இந்தக் கோடரி எனதல்ல என்று

ஏற்க மறுத்தான் சின்னான்

 

மீண்டும் ஆற்றில் மூழ்கிய தேவதை

வந்தாள் தங்கக் கோடரியுடன்

தேவை எனது இரும்புக்கோடரி என்று

வாங்க மறுத்தான் சின்னான்

 

சின்னான் நேர்மையில் மகிழ்ந்து அளித்தாள்

தங்கம் வெள்ளி இரும்புக் கோடரியை

வளமுடன் நலமும் பெற்று வாழ

வரமளித்து மறைந்தாள் தேவதை.

 

கே.என்.சுவாமிநாதன், சென்னை

10-06-2023

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *