Nalam Poem By Sakthirani நலம் கவிதை - சக்திராணி

நலம் கவிதை – சக்திராணி




கையிலிருக்கும் புத்தகத்தில்…
மனம் முழுதும் மூழ்கிக்கிடக்க…
சிந்தனை சிதறலாய்
தொடர்வண்டியின் வேகம் அதிகரிக்க…காற்றும் கொஞ்சம்
புத்தகத்தை புரட்ட…

காற்றின் வேகத்தின் எதிர்திசையில் சற்றே திரும்பி அமர்ந்து… மீண்டும்
புத்தகங்களூடே விழி சொருகும் நேரத்தில்…எதிரே அமர்ந்த உருவம்…

எங்கோ…பார்த்தது போல இருக்குதே…என உற்று நோக்கும் சமயத்தில்…அவள் கூந்தலும் காற்றால் முகம்மூடி மறைக்க…
பார்க்கும் ஆர்வத்தில்…அருகே செல்ல…கூந்தல் ஒதுக்கியவளாய்…ஒரு பார்வை
பார்த்தாள்…என்னை ஒதுக்கி சென்றவள்…

விழி நோக்கிய பின் ஏன்
இந்த மௌனம்…தேவையில்லையே
என பேசத்துவங்க
அவளும்…
ஏதும் அறியாதவள் போல…
விடையானால்…என் வினாக்களுக்கு…

காலம் தந்த மாற்றங்களுக்கு…
நாம் எப்படி பொறுப்பாவது…என
சுயநலமாய் நடந்து கொண்டாலும்
பொதுநலமாய்…தொடர்வண்டி விட்டு
இறங்கும் போது கூறினேன்…

திருமணம் என்றால்…பத்திரிக்கை
அனுப்பு…கண்டிப்பாக
வருகிறேன் என…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *