நமது புக் டே இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது…
அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்…
கவிதை:
நிலம் அவனது மூளை
நிலம் அவனது நிணம்
நிலம் அவனது உயிர்
நிலம் அவனது உடல்
நிலம் அவனுக்குச் சூரிய சந்திரர்
நிலம் அவனுக்கு வானும் மண்ணும்
நிலம் அவனுக்கு பூமியும் புகழும்
நிலம் அவனுக்குக் காலமும் வெளியும்
நிலம் அவனுக்கு மழையும் வெயிலும்
நிலம் அவனுக்கு மலரும் சருகும்
நிலம் அவனுக்கு முகமும் அகமும்
நிலம் அவனுக்கு மந்திரமும் எந்திரமும்
நிலம்தான் அவன்
அவன்தான் நிலம்
எலும்புகளால் ஆன அவனது கல்லறை பூமியிலும்
மரங்கள் பூத்துக் குலுங்கும்
வனங்கள் வாழ்வாய் விளங்கும்.
–நா.வே.அருள்
ஓவியர் விவரம்:
ஜா.பெர்னால்டு ஜார்ஜ் ராஜ்.
தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி
தேவகோட்டை

