தாயாக தாலாட்டினாலும்
தாரமாக சீராட்டினாலும்
தலைமகனுக்காகத் தான்
தவித்துக் கிடப்பாள்…..
பெண் என்னும் பேதை..

தங்கையாய் கவிந்தாலும்
மூத்த தமக்கையாய் ஊட்டமளித்தாலும்
விட்டுக் கொடுக்காது வாழ்த்துவாள்..
வீரத்தை மனமார ஊட்டி வளர்ப்பாள்
சகோதரனின் சோதரியாய்

தோழியாய்த் தட்டிக் கொடுத்தாலும்
காதலியாய்க் கனிந்து நின்றாலும்
உரிமையுடன் திருத்திடுவாள்
உயர்ந்து சிறக்க பின்னணியாயிருப்பாள்
பிரியமான சிநேகிதியாய்

அர்த்தநாரியாய் உறைந்திருப்பாள்
பிள்ளைக்கனியமுதாய் இனித்திருப்பாள்
பூஜ்ஜியத்தைப் பௌர்ணமி போல மாற்றிடுவாள்

எவர்க்கும் அஞ்சிடாது எதிர்த்திடுவாள்
நறுமுகை சூடிய நாச்சியார்..

ஆடவனின் பின்புலமாக
அவனை நகர்த்தும் முன்னெடுப்பாக
உடன் பயணிக்கும் வழி மொழியாக
உயிர்ப்பூத்துக் கிடப்பாள்…
யாதுமானவளாய்…
மங்கை எனும் மகாசக்தி..

து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *