Poem by Yaazh Ragavan யாழ் ராகவனின் கவிதை




பாவாடை நாடாவை இழுத்துவிட்டு
கருப்பி என விளித்துப்போகும்
சேக்காளி மேல்
வசைமாரிப்பொழிந்த காலம் உண்டு
கொஞ்சலினூடே மூக்கு வழித்தபடி
பெத்தவளே முணுமுணுத்த கருவாச்சிக்கு
உதடு பிதுங்க
முட்டிநின்றிருக்கிறது அழுகை
கல்லூரிக் கேலியில்
தார்ரோடு ஆகுகையில்
மேலும் இருண்டதுண்டு
அகமும் முகமும்
சகக்காரிகளோடான சண்டையில்
எவளோ உரசிய கரிச்சட்டி
இப்போதும் இதயத்தில் உருள்கிறது
நரைகளின் வாய்க்கு அவலான
பெண் பார்த்த படலத்தில்
அத்தனை வெறுப்பு கருப்பின் மீது
கூடல் பொழுதுகளில் உவமித்த கருமை
இரவைவிட கனத்த
ஞாபகத்தின் காட்டில் சுமை
காலத்தில் வாய்த்த
படையல் பொழுதொன்றில்
அத்தனைக் கருப்பையும்
மொத்தமாய்த் திரட்டி
என் உளக்குமுறலை ஒத்திருந்தது
ஐயானாரின்
ஓங்கிய கைஅரிவாள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *