பை நிறைய
கொண்டு போன
பலூன்களையெல்லாம்
விற்று தீர்த்துக்
கொண்டிருந்தார் அப்பா
அவ்வப்போது
மகன் சொல்லி
அனுப்பிய சைக்கிள்
மனதின் கண்ணெதிரே
வந்து நின்று
ஞாபகபடுத்தியது ,
கடைசி பலூனை
விற்பனை செய்த போது
கண்ணுக்குள்
வந்து ஓடிக்கொண்டிருந்தது
அந்த சைக்கிள் ,
“பாக்கெட்டைத் தடவிப்
பார்க்கும்பொழுது
காற்றில்லாத பலூனாக
தரையில்
வீழ்ந்து கிடக்கிறது
மகன் சொல்லியனுப்பிய
கனவு சைக்கிளின்
சக்கரத்தில் ஆணி
குத்தியது போல்
கடல் காற்றோடு
தன் மூச்சுக்காற்றும்
கலந்திருந்தது
கையிலிருந்த
கடைசி பலூன்
வெடித்து சிதறியதால் ….!!!
கவிஞர் ச. சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

