Aadum varai Aadattum Poem By S Lingarasu ஆடும் வரை ஆடட்டும் கவிதை - ச.லிங்கராசு




வேடிக்கை ஆட்சியில்விநோத சட்டங்கள்
வாடிக்கை இவருக்கு வாடுகிறார் மக்களும்
புதிய கல்வியாம் புதுமை திட்டமாம்
அதிகார துணிச்சலில் அமைத்திடவே முனைகிறார்
ஒரு நாடு மொழிஒன்றே ஓங்கியே ஒலிக்கிறார்
வரும்துன்பம் அறியாது வாய்ப்பிதற்றி நிற்கின்றார்
கோவிலாம் வீடாம் கோடியிலே அமையுதாம
பாவியாய் ஏழைகள் பரிதவித்து நிற்கின்றார்
உழவரை ஏய்த்திட உயர்த்தினார் சட்டத்தை
அழவில்லை போராடி அடக்கினர் கொட்டத்தை
எத்தனை நாள் இந்த ஏற்றமும் தோற்றமும்
அத்தனைக்கும் பதிலுண்டு ஆடும் வரை ஆடட்டும்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *